சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயர் வழிபாடு செய்து வாருங்கள்.
விருச்சிக ராசிக்காரர்கள் பெரும்பாலோனர் கடந்த 7ஆண்டுகளாக ஏழரைச்சனி பகவானால்
படாதபாடு பட்டு விட்டனர் அவர்கள் பட்ட கஷ்டங்கள் சொல்லி மாளாது
ஏன் வாழ்கிறாம் என்று வாழ்க்கையே வெறுத்து போய் வாழ்ந்துகொண்டு இருப்பார்கள்
வாழ்க்கை பாடத்தை தெளிவாக கற்று கொடுத்து இருப்பார் சனிபகவான்
சிலரது குடும்பத்தில் கணவன் மனனவிக்கு இடையே சண்டை சச்சரவுகள், , கருத்து வேறுபாடு,
பிரிவு போன்றவை ஏற்பட்டு இருக்கும்..
உச்சன் தலையில் இருந்து முழங்காலுக்குள் ஒரு சொட்டு ரத்தமாவது வெளியே எடுத்து இருப்பார் இந்த சனிபகவான்..சில பேருக்கு கை, கால் முறிவு அல்லது சிறு விபத்து ஏற்பட்டு இருக்கும்…
பெண்களுக்கு இந்த ஏழரை சனியில் முடி கொட்டுதல், வயிற்று வலி ,மாதவிடாய் கோளாறுகள் போன்றவை ஏற்பட்டு இருக்கும்..சிலபேருக்கு புதிய ஆசையை காட்டி நஷ்டங்களை ஏற்படுத்தி இருப்பார் இந்த சனிபகவான்..
வேலையில் இருப்பவர்கள் பல வித சிரமங்களை சந்தித்து இருப்பார்கள் இந்த ஏழரைச்சனியில் ..சிலருக்கு உடல்நிலையில் தொந்தரவு கொடுத்து ஆயுளை சோதித்து பார்த்து இருப்பார் இந்த சனிபகவான்..
சிலருக்கு வீடு கட்டும் பாக்கியத்தை கொடுத்து கடன் வாங்க வைத்து இருப்பார் சனிபகவான்..இளைஞர்களுக்கு காதல் ஆசையை உண்டாக்கி காதல் தோல்வியை ஏற்படுத்தி இருப்பார் சனிபகவான்..
கவலை வேண்டாம்.. உங்களுக்கு வரும் சனிபெயர்ச்சிக்கு பிறகு அனைத்து கஷ்டங்களும் குறையும்.. வாழ்க்கையில் மாற்றங்களும்,ஏற்றங்களும் வரும்..ஏழரைசனி பகவான் விலகும் நேரத்தில் உங்கள் வயதிற்கு ஏற்ப உங்களுக்கு தேவையான ஒரு நல்லதை கண்டிப்பாக செய்து விட்டு போவார் சனிபகவான்…அதுவரையில் சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயர் வழிபாடு செய்து வாருங்கள்…
நல்லது நடக்கும்..! நல்லதே நடக்கும்..!











