பிரதோஷ பூஜை அன்று முக்கிய அபிஷேகப் பொருட்களும் பலனும்
- அபிஷேக வேளையில் பால் கொடுத்தால் – நோய் தீரும், நீண்ட ஆயுள் கிடைக்கும்
- தயிர் கொடுத்தால் – பல வளமும் உண்டாகும்
- தேன் கொடுத்தால் – இனிய சாரீரம் கிட்டும்
- பழங்கள் கொடுத்தால் – விளைச்சல் பெருகும்
- பஞ்சாமிர்தம் தந்தால் – செல்வச் செழிப்பு ஏற்படும்
- நெய் கொடுத்தால் – முக்திப் பேறு கிட்டும்
- இளநீர் தந்தால் – நல்ல மக்கட்பேறு
- சர்க்கரை கொடுத்தால் – எதிர்ப்புகள் மறையும்
- எண்ணெய் தைலம் கொடுத்தால் – சுகவாழ்வு
- சந்தனம் கொடுத்தால் – சிறப்பான சக்திகள் பெறலாம்
- மலர்கள் கொடுத்தால் – தெய்வ தரிசனம் கிட்டும்
பிரதோஷ பூஜையின் மகிமைகள்
மனிதர்களாகிய நாம் எத்தனை தோஷங்களுடன் ஜென்மம் எடுத்துள்ளோம் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் பிரதோஷ உபாசனையால் அத்தனை தோஷங்களையும் போக்கிக் கொள்ள முடியும். எனவே பிரதோஷ பூஜை செய்து நன்மை பெறலாம்.
பிரதோஷ பூஜை செய்தால் ஒருவருக்குக்கிட்டும் பலன்கள்
- துன்பம் நீங்கி – இன்பம் எய்துவர்.
- மலடு நீங்கி – மகப்பேறு பெறுவர்
- கடன் நீங்கி – தனம் பெறுவர்
- வறுமை ஒழிந்து – செல்வம் சேர்ப்பர்
- நோய் நீங்கி – நலம் பெறுவர்.
- அறியாமை நீங்கி – ஞானம் பெறுவர்
- பாவம் தொலைந்து – புண்ணியம் எய்துவர்
- பிறவி ஒழித்து – முக்தி அடைவர்
மஹா பிரதோஷம்: ஐந்து வருட பலன் சனிக்கிழமையில் வரும் பிரதோஷ வேளையில் நாள் முழுவதும் உபவாசம் இருந்து சிவாலயத்திற்கு சென்று இறைவழிபாடு செய்தால் 5 வருடம் தினமும் தவறாமல் ஆலய வழிபாடு செய்த பலன் கிடைக்கும். அது மட்டுமில்லாமல் யார் ஒருவர் பஞ்சமா பாதகம் அதாவது மது, மங்கை, கொலை, கொள்ளை, பொய் இவைகள் செய்கின்றார்களோ அவர்களுக்கு மஹாபாதகம் ஏற்படும். இந்த மஹா பாதகத்தை சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷ பூஜை அன்று கோவிலுக்குச் சென்று இறைவனை வழிபட்டால் இந்த பஞ்சமா பாதகம் விலகும்.
பலன்கள்: ஒரு வருட பலன் சனிக்கிழமை தவிர மற்ற கிழமைகளில் வரும் பிரதோஷ தினத்தன்று பிரதோஷ வேளையாகிய மாலை 4.30 முதல் 6.00 மணிக்குள் அன்று முழுவதும் உபவாசம் இருந்து சிவாலயத்திற்குச் சென்று ஆலய வழிபாடு செய்தால் ஒருவருக்கு ஒரு வருடம் தினமும் ஆலயம் சென்று வழிப்பட்ட பலன் கிட்டும்.
நடக்கட்டும் நம்புகிறோம் ஏன்பது மனிதர்களின் வாக்கு.
நம்பினால் நடக்கும் என்பது சித்தர்களின் வாக்கு–அகத்தியர்–
சித்தர் பூமி தினசரி ஆன்மீக செய்திகள் Online ல் படியுங்கள்..!
உங்கள் நண்களுக்கு Forward செய்யுங்கள். சித்தர் அருள் கிடைக்கும்..!
+91-7305018180











