இனிய பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள்
பொங்கலோ பொங்கல் :
பூமித் தாயே பெருமிதம்கொள்
ஆயிரம் விதைதான் விதைத்தோம்
ஆனால் நீயோ ஆயிரம்பேர்
உண்ண உணவு கொடுக்கிறாய்,
எங்கள் அறிவியல் உலகம்கூட
இன்னும் இந்த விந்தையின்
வியப்பிலிருந்து மீளாமல்தான் உள்ளது..!
பண்பட்ட கலாச்சாரத்தின்
விதைகளை ஆழ உழுது வை,
உழவர்கள் இல்லையேல் இந்த
விந்தைகள் எதுவும் இல்லை
என்பதை சிந்தையில் தை
இதோ இதோ வந்துவிட்டது தை..!
வாருங்கள் இந்த இனிய திருநாளில்
புரிதலின் உறவுகள் கொண்டு
பிரிந்த இதயங்களை ஒன்றாய் இணைத்து ஆழ உழுது
இறந்த இதயங்களில் புது சோலைகள் அமைப்போம்,
பணம் என்னும் காகிதம் மணம் என்னும்
மகுடத்தின் வேற்றுமை அறிந்து
ஆதிப்பிறப்பிடம் களிமண் கொண்டு
மனிதன் உயிர்க்கொடுத்த மண்பானைகள்
திங்கள் பார்த்து பொங்கி வழியும்
பொங்கல் பானைகளாக நம் அனைவரின்
இதயங்களிலும் சந்தோசம் பொங்கி வழியட்டும் .
அன்பின் உறவுகள் அனைவருக்கும் இதயம் கனிந்த
” இனிய பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள் !
என்றும் இறைபணியில்
பா.சுதாகர், M.பூமான்
சித்தர் பூமி மற்றும் இணைய தள குழுவினர்.
நடக்கட்டும் நம்புகிறோம் ஏன்பது மனிதர்களின் வாக்கு.
நம்பினால் நடக்கும் என்பது சித்தர்களின் வாக்கு–அகத்தியர்–
“சித்தர் பூமி” தினசரி ஆன்மீக செய்திகள் படியுங்கள்..!
உங்கள் நண்பர்களுக்கு Forward செய்யுங்கள். சித்தர் அருள் கிடைக்கும்..!
Mobile:+91-7305018180











