பிரச்னைகளைப் போக்க 13 ரகசியங்கள்-புத்தர்
இந்தியாவில் நிறைய தத்துவ ஞானிகள் பிறந்து வாழ்ந்த இடம் என்ற பெருமை நமக்கு உண்டு. அந்த வகையில் புத்தரிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை (Life Secrets) என்னென்ன எனப் பார்க்கலாம்.
புத்தர் தமது போதனையில், ” பிறர் உனக்கு எவைகளை செய்ய வேண்டும் என நினைக்கிறாயோ அவற்றை நீயும் செய்ய வேண்டும். பிறர் உனக்கு எது செய்ய கூடாது என நினைக்கிறாயோ அதை நீயும் செய்ய கூடாது” என்றார்.
வாழ்க்கையில் உள்ள பிரச்னைகளை போக்க புத்தரின் அறிவுரைகள்
- தான் செய்த பாவம் தன்னை கெடுக்கவே செய்கிறது.
- விருப்பு-வெறுப்புகள் எல்லாம் தற்காலிகமானவை, நிலையற்றவை என மனதில் பதித்து வைத்துக் கொள்ளுங்கள்.
- அறியாமையில் இருப்பது கூடாது.
- மூட நம்பிக்கையில் உழல்வது குற்றம்.
- கெட்ட எண்ணங்களை நீக்கி, எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செய்.
- நல்லெண்ணம் இருந்தால் மனம் அமைதியாகும்.
- பிறரை நேசித்தால் வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும்.
- தேவையற்ற பேச்சுகளைத் தவிர்த்து அளவாக பேசுங்கள்.
- பொருளற்ற 1000 வார்த்தைகளைவிட ஒரு நல்ல சொல் அமைதியைக் கொடுக்கும்.
- மனிதனுக்கு அன்பும் கருணையும் உதவியும் அவசியம். அதை அனைவருக்கும் கொடுத்து நீங்களும் அதையே பெறுங்கள்.
- நல்ல நோக்கத்துடன் நல்ல முயற்சிகளில் செயல்படுங்கள்.
- அறிவு விழித்திருக்கும் நிலையில் தியானம் செய்யுங்கள்.
- அன்பும் சாந்தமும் மகிழ்ச்சியைத் தரும்











