மகரிஷி அவர்கள் 2000+ பாடல்களை எழுதியுள்ளார். அவற்றுள் ஒன்று:
“எல்லாம் வல்ல தெய்வமது
எங்கும் உள்ளது நீக்கமற
சொல்லால் மட்டும் நம்பாதே
சுயமாய்ச் சிந்தித்தே தெளிவாய்
வல்லாய் உடலில் இயக்கமவன்
வாழ்வில் உயிரில் அறிவுமவன்.
கல்லார் கற்றார் செயல் விளைவாய்க்
காணும் இன்ப துன்பமவன்.
அவனின் இயக்கம் அணுவாற்றல்
அணுவின் கூட்டுப் பக்குவம் நீ
அவனில் தான் நீ உன்னில் அவன்
அவன் யார்? நீயார்? பிரிவேது?
அவனை மறந்தால் நீ சிறியோன்
அவனை அறிந்தால் நீ பெரியோன்
அவன் நீ ஒன்றாய் அறிந்த இடம்
அறிவு முழுமை அது முக்தி. ”
அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் அடியவர்கள் , உலகம் முழுவதும் பரவியுள்ளனர். அவரின் வழிகாட்டலில் அருட்பணி ஆற்றி உலகத்தாரின் ஆன்மிக வாழ்வை வளப்ட்டுத்திக் கொண்டு வருகின்றனர்.
மகரிஷியின் இந்த வைர வரிகள் உலகப் புகழ் பெற்றவை.
“வாழ்க வையகம்” “வாழ்க வளமுடன்”










