திருமூலர் கூறும் யாேகநெறி அனுட்டானத்தின் ஒழுக்கங்கள்
1) கொல்லான்,
2) பொய் கூறான்,
3) களவு இலான்,
4) எண் குணன்,
5) நல்லான்,
6) அடக்கம் உடையான்,
7) நடுச்செய்ய வல்லான்,
8) பகுத்து உண்பான்,
9) மாசு இலான்,
10) கள்,
11) காமம், இல்லான்
சிவாயநம
திருச்சிற்றம்பலம்
கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பாய்
காணார்க்கும் கண்டார்க்கும் கண்ணளிக்கும் கண்ணாய்
நல்லார்க்கும் பாெல்லார்க்கும் நலங்காெடுக்கும் நலமாய்
நரர்களுக்கும் சுரர்களுக்கும் நடுநின்ற நடுவாய்
வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரங்காெடுக்கும் வரமாய்
வலியார்க்கும எளியார்க்கும் வாழ்வளிக்கும் வாழ்வாய்
எல்லார்க்கும் பாெதுவில் நடமிடும் அம்பலத்தரசே
நல்லான்நின் மைந்தன்எனும் நலமெனக் கருளே!! 1:5:9
நிலந்தானும் நலமேவி நலங்காணும் நலமும்
நெடுவானம் அதுதானும் நெகிழ்கின்ற உயர்வும்
சலந்தானும் குறைவிலா வரவைக்கும் தவமும்
தீநெருப்பும் அகம்மகிழும் தீயாேம்பும் அறமும்
கலந்தெங்கும் வீசுமாேர் காற்றிற்கு வரமும்
கந்தருவர் அகம்மகிழும் கலக்கமிலா அறிவும்
தலந்தாங்கும் அம்பலத்தில் தனிநின்றச் சிவமே
இவன்தானும் யாரென்று சித்தர்மகிழ் நலமருளே!! 1:5:10
(இத்துடன் நல்லான் முற்றியது)











