எல்லாவற்றிலும் முக்கியமான சரணம்
எல்லாவற்றிலும் முக்கியமான சரணம் உன்னுடைய குணத்தை, உன்னுடைய சுபாவத்தை சரணாகதி செய்வது தான், உன்னுடைய குணம் மாறுவதற்காக அதைச் சரணாகதி செய்யவேண்டும். உனது சொந்த இயற்கையையே சரணாகதி செய்யாவிட்டால் அது ஒருபோதும் மாறாது.
விஷயங்களைப் புரிந்துகொள்வதில், உன்னைத் தாக்கும் செயல்களுக்குப் பதிலளிப்பதில், உன்னுடைய உணர்ச்சிகளில், முன்னேறு வதில், எல்லாவற்றிற்கும் மேலாக வாழ்க்கையை நோக்கும் நோக்கிலும், வாழ்க்கையிலிருந்து சில விஷயங்களை எதிர் பார்ப்பதிலும் உனக்கே உரிய வழிகள் இருக்கின்றன–இதை நீ சரணாகதி செய்யவேண்டும்.
அதாவது, நீ தெய்வ ஒளியைப் பெற்று உன்னை உருமாற்றம் செய்ய விரும்பினால் உனது ஜீவன் இயங்கும் முறையையே நீ அர்ப்பணிக்கவேண்டும்- அதைத் திறப்பதன்மூலம், மேலிருந்து வரும் சக்திகளை எவ்வளவு அதிகமாகக் கிரஹிக்க முடியுமோ அவ்வளவு கிரஹிக் கும்படி செய்வதன் மூலம் அதை அர்ப்பணிக்கவேண்டும்.
அப்பொழுது நீ எப்படி இருக்கவேண்டும் என்பதை அறியும் தெய்வ உணர்வு நேரடியாகச் செயல்பட்டு, உனது இயக்கங் களையெல்லாம் அதிக உண்மையானவையாக, உனது அசல் உண்மைக்கு அதிக அளவு இசைந்தவையாக மாற்றும். நீ
உனது செயல்களை இறைவனுக்கு அர்ப்பணிப்பதைவிட இது எல்லையற்ற அளவு அதிக முக்கியமானது.
எல்லாவற்றிலும் அதிக முக்கியமானது நீ செய்யும் செயல்களல்ல (உனது செயல்கள் மிகவும் முக்கியமானவை, அதில் சந்தேகமில்லை.) நீ எதாக இருக்கிறாய் என்பதே எல்லாவற்றி லும் முக்கியமானது. நீ செய்வது எதுவாக இருந்தாலும், நீ எப்படிச் செய்கிறாய் என்பதுகூட அல்ல, நீ என்ன உணர்வு நிலையிலிருந்து அதைச் செய்கிறாய் என்பதே முக்கியமானது.
நீ சுயலாபம் கருதாது வேலை செய்யலாம். வேலை செய்வதில் உள்ள இன்பத்திற்காகவே வேலை செய்யலாம்; ஆனால் அதே சமயம் அந்த வேலையை விட்டுவிடுவதற்கு, அந்த வேலையை மாற்றுவதற்கு அல்லது முறையை மாற்றுவதற்குத் வேலை செய்யும் தயாராக இல்லாவிட்டால், நீ வேலை செய்யும் முறையை விடாது பிடித்துக்கொண்டிருந்தால், உன்னுடைய சரணம் பூரணமாகாது.
நீ எதைச் செய்தாலும் மிகத் தெளிவாக, நாளுக்குநாள் அதிக அதிகார தோரணையில் வருகிற ஓர் உள்ளுணர்வு, இதைத்தான் செய்யவேண்டும், அதை இப்படித்தான் செய்யவேண்டும் என்று சொல்லவேண்டும்; அது சொல்வதனாலேயே நீ அதைச் செய்ய உனக்குச் வேண்டும், அந்த நிலை வரவேண்டும்.
உன்னுடைய பழக்கம் காரணமாக, நீ ஒரு வேலையைச் செய்யக்கூடாது; அதுதான் சிறந்தது என்னும் கருத்து காரணமாகக்கூட அதைச் செய்யக்கூடாது–அப்படிச் செய்தால் உனது சரணம் பூரண மாகாது.
ஸ்ரீ அன்னை











