ஒத்தைவேட்டி சித்தர் 65 ஆண்டுகளுக்கு முன் #மகாசமாதி அடைந்த சித்தர் அதாவது கண் சிமிட்டா மகான் எனவும் அழைக்கக்கூடிய ஒத்தைவேட்டி சித்தருடைய மகாசமாதி #கரூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய கடம்பன் குறிச்சி என்ற ஊர்ல 1895 ஆம் ஆனி மாதத்துல வைத்தியநாத சாஸ்திரி அவர்களுக்கும் அலங்காரவல்லி அம்மையாருக்கும் மகனாகப் பிறக்கிறார்.
இவருடைய வம்சாவளி ராமப்பட்டலா என்ற வம்சாவளியைச் சேர்ந்தவர்.
சித்தர் அவர்கள் கடவுள் மேல் வச்சிருந்த அளவு கடந்த அன்பினால் 16 வயசுல துரவரம் மேற்கொள்கிறார்.
பன்னிரண்டாவது வயசுல வட தேசத்தை நோக்கி யாத்திரை போறாங்க.
சித்தருடைய இயற்பெயர் சிக்நானந்த சரஸ்வதி. மக்கள் எல்லாரும் இவரை ஒத்தைவேட்டி சித்தர் கண் சிமிட்டா மகான் என அழைச்சிருக்காங்க.
இவருக்கு கண் சிமிட்டா மகான் பேர் வரக் காரணம் சுவாமி அவர்கள் கண்ணை சிமிட்டாமல் சூரியனை வெகு நேரம் பாத்துக்கிட்டே இருப்பாங்க. அந்த காரணத்தால தான் இவருக்கு கண் சிமிட்டா மகான் அப்படின்னு அழைக்கப்படுறார் மக்களால்.
அது மட்டும் இல்லாம ஆற்று நீரில் மூழ்கி பல நாட்கள் தவமும் செஞ்சிருக்காங்க.
ஒத்தைவேட்டி சித்தர் அவர்கள் வாழ்ந்த காலத்துல அந்த ஊர் மக்களுடைய உணவு பற்றாக்குறையோ, பொருளாதார குறைவோ, உடல்நலக் குறைவோ எதுவும் இல்லாம எல்லாரையும் நல்ல சிறப்பான முறையில வச்சிருந்திருக்கார்.
சித்தர் அவர்களை ஒத்தைவேட்டி சித்தர் என அழைக்கக் காரணம் என்னன்னு பார்த்தீங்கன்னா, சித்தர் அவர்கள் ஒரே ஒரு வேட்டியை மட்டும் தன்னுடைய தோளில் போட்டு உலா வந்திருக்காங்க. அந்தப் காரணத்தால தான் இவரை ஒத்தைவேட்டி சித்தர் அப்படின்னு அழைச்சிருக்காங்க.
ஒத்தைவேட்டி சித்தருடைய மகாசமாதி கோவில் எங்க அமைஞ்சிருக்குன்னு பார்த்தீங்கன்னா கரூர் மாவட்டத்தில் லைட் ஹவுஸ் என்ற இடத்துல அதாவது அமராவதி ஆற்றங்கரை பக்கத்துல இருக்கக்கூடிய படிக்கட்டுத்துறை என்ற இடத்துல தான் இவருடைய #ஜீவசமாதி கோவில் அமைஞ்சிருக்கு.











