ஆடி மாத ராசி பலன் (17.7.2019 முதல் 17.8.2019 வரை)
மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்)
சுக்கிரன், ராகு தொடர்ந்து வளர்ச்சிக்கு வழிவகுப்பர். உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் இருக்கும் புதன் ஆக. 3ல் மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு மாறுகிறார். அதன் பிறகு அவரால் பொன், பொருள் சேரும்.
சுக்கிரனால் கணவன், மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை இருக்கும். புதுமணத் தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். அவரால் ஜூலை24க்கு பிறகு மதிப்பு, மரியாதை உயரும். உறவினர்களிடம் சுமுக நிலை ஏற்படும். புதிய உறவினரால் உதவி கிடைக்கும்.
குறிப்பாக ஜூலை20,21,ஆக.16,17ல் உறவினர் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே நேரம் ஜூலை31, ஆக.1,2 ல் அவர்கள் வகையில் மனக்கசப்பு வர வாய்ப்பு உண்டு. குருபகவான் மனவேதனையும், நிலையற்ற தன்மையைக் கொடுப்பார். பொருளாதார சரிவை ஏற்படுத்துவார். வீண் விரோதத்தை உருவாக்குவார்.
இருப்பினும் அவரது 7-ம் இடத்துப் பார்வை சிறப்பாக உள்ளதால் அதை ஈடுகட்டும் வகையில் பணவரவு கூடும். மனதில் துணிச்சல் பிறக்கும். தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர்கள் சரணடையும் நிலை ஏற்படும்.
பணியாளர்களுக்கு சுக்கிரனால் பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசு வேலையில் இருப்பவர்கள் வேலையில் அக்கறையுடன் இருக்கவும். ஆக.24க்கு பிறகு சிறப்பான முன்னேற்றத்தைக் காணலாம்.
அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ஜூலை17,18,19, ஆக.14,15 ஆகியவை உன்னதமான நாளாக அமையும். வியாபாரத்தில் ராகு முயற்சியில் வெற்றி, பொருளாதார வளம், தொழில் வளர்ச்சியை தந்து கொண்டிருக்கிறார். பெண்களிடம் விரோத உணர்வு ஏற்படலாம்.
சற்று ஒதுங்கிஇருக்கவும். புதனால் போட்டியாளர் வகையில் இருந்த இடையூறு, அரசு வகையில் ஏற்பட்ட அனுகூலமற்ற போக்கு ஆக.2 க்கு பிறகு மறையும். அது வரை வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். ஆக.5,6ல் எதிர்பாராத வருமானம் கிடைக்கும்.
கலைஞர்கள் தொடர்ந்து ஸ்திர தன்மையில் இருப்பர். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் எதிர்பார்த்த பலன் பெற முடியாது. பிரதிபலன் எதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும்.
மாணவர்களுக்கு புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் சிரத்தை எடுத்தால்தான் வெற்றி கிடைக்கும். ஆக.2க்கு பிறகு சிறப்பான வளர்ச்சி காணலாம். ஆசிரியர்களின் ஆலோசனையால் நன்மை கிடைக்கும். விடாமுயற்சியால் போட்டிகளில் வெற்றி காணலாம்.
விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். கறுப்பு நிற தானியம் மூலம் லாபம் கிடைக்கும். ஆக.2க்கு பிறகு பாசிப்பயறு, நெல், சோளம், பழ வகைகள் மூலம் நல்ல வருவாய் கிடைக்கும். கால்நடை வளர்ப்பின் மூலம் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும்.
பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். சுபநிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்து கொள்வர். குடும்பத்தாரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். ஆக.2க்கு பிறகு வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். சுய தொழில் புரியும் பெண்களுக்கு லாபத்துக்கு குறைவிருக்காது. உடல் நலம் சிறப்படையும்.
ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2)
பொருளாதார வளம் பெருகும் மாதமாக அமையும். சூரியன், சுக்கிரன், குரு மாதம் முழுவதும் நன்மை செய்வர். செவ்வாய் ஆக.10 வரை 3-ம் இடத்தில் இருப்பதால் பல்வேறு முன்னேற்றத்தைக் கொடுப்பார்.
கடவுளின் கருணை உங்களுக்கு கிடைக்கும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகமுண்டு. சூரியனால் பணவரவு சிறப்பாக இருக்கும்.
குடும்பத்தில் சுக்கிரனால் தேவையான வசதிகள் கிடைக்கும். ஜூலை 24க்கு பிறகு மகிழ்ச்சி அதிகரிக்கும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவன்,மனைவி இடையே அன்பு பெருகும். ஜூலை27,28ல் பெண்கள் மிகவும் உதவிகரமாக செயல்படுவர்.
ஜூலை 22,23,24ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே நேரம் ஆக.3,4 ல் உறவினர் வகையில் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்புண்டு. சற்று ஒதுங்கி இருக்கவும். ஜூலை31,ஆக.1,2ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். புதனால் உங்களுக்கு ஏற்பட்ட அவப்பெயர், செல்வாக்கு பாதிப்பு, வீண்கவலை முதலியன ஆக.2க்கு பிறகு மறையும்.
ராணுவம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் நன்மையை எதிர்பார்க்கலாம். கோரிக்கைகளை ஆக.10க்குள் கேட்டுப் பெறவும். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். கோரிக்கைகள் விடாமுயற்சியால் நிறைவேறும்.
இருப்பினும் சுக்கிரனால் அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். ஜூலை24க்கு பிறகு பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும். ஆக.2க்கு பிறகு அரசு ஊழியர்கள் கவனமுடன் செயல்படவும். ஜூலை 20,21,ஆக.16,17 சிறப்பான நாட்களாக அமையும்.
வியாபாரத்தில் லாபம் சிறப்பாக இருக்கும். மாதத் தொடக்கத்தில் வியாபாரிகளுக்கு அரசு வகையில் சலுகை கிடைக்கும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும். ஆன்மிக சம்பந்தப்பட்ட மற்றும் பூஜை பொருள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபம் பெறுவர். புதன் ஆக.3ல் கடகத்திற்கு மாறுகிறார்.
அப்போது பகைவரால் இடையூறு வரலாம். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். ஆக.7,8ல் எதிர்பாராத வகையில் பணம் வர வாய்ப்புண்டு. கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். சக கலைஞர்களின் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும்.
அரசிடம் இருந்து விருது, பாராட்டு போன்றவை கிடைக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சீரான பலனைக் காண்பர். மக்கள் மத்தியில் மதிப்பு உயரும். ஆக.10க்கு பிறகு எதிர்பார்த்த பலனை பெற முடியாது.
விவசாயிகள் பழ வகைகள், மஞ்சள், கேழ்வரகு, சோளம் போன்ற பயிர்கள் மூலம் அதிக வருமானம் காண்பர். கால்நடை வகையில் எதிர்பார்த்த பலன் கிடைக்காது. புதிய சொத்து வாங்கும் எண்ணம் ஆக.10க்குள் கைகூடும்.
வழக்கு, விவகாரத்தில் சாதகமான முடிவு அமையும். மாணவர்கள் கல்வியில் சீரான பலனை காண்பர். குருவால் ஆசிரியர்கள், ஆன்றோர்களின் ஆதரவு கிடைக்கும்.
பெண்கள் வாழ்வில் குதூகலமாக இருப்பர். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவர். குருவால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுபநிகழ்ச்சி நடந்தேறும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர வசதிகள் கிடைக்கும்.
கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் பொறுமையுடன் விட்டுக் கொடுத்து செயல்படவும். ஆக.9,10 சிறப்பான நாட்களாக அமையும். பிறந்த வீட்டில் இருந்து சீதனப் பொருள் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும்.
மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3)
இந்த மாதம் சுக்கிரனால் பெருமையுடன் வாழ்வீர்கள். தற்போது செவ்வாய் கடக ராசியில் இருக்கிறார். அவர் ஆக.10ல் சிம்ம ராசிக்கு மாறுவதன் மூலம் நன்மை தர உள்ளார். மற்ற கிரகங்கள் அனைத்தும் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் எந்த ஒரு செயலையும் முயற்சி எடுத்தே நிறைவேற்ற வேண்டியதிருக்கும்.
குடும்பத்தில் பெண்களுக்கு சாதகமான திசையில் காற்று வீசுவதால் முக்கிய பொறுப்புகளை அவர்கள் வசம் ஒப்படையுங்கள். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் பெண்கள் வகையில் பெருமை காண்பீர்கள். பணஉதவி கிடைக்கும். அவர்களால் பொன், பொருள் சேரும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். ஜூலை 24க்கு பிறகு அவரால் பொருளாதார வளம் சிறக்கும்.
மதிப்பு, மரியாதை உயரும். செவ்வாயால் ஆக.10க்கு பிறகு மனதில் பக்தி எண்ணம் மேம்படும். எடுத்த செயல் அனைத்திலும் வெற்றி காணலாம். புதிய வீடு-மனை வாகனம் வாங்க யோகம் கூடி வரும். ஜூலை 25,26ல் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே நேரம் ஆக.5,6ல் அவர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று விலகி இருக்கவும். ஆக.3,4ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம்.
பணியாளர்கள் சுக்கிரனால் சிறப்பான நிலையில் இருப்பர். சக பெண் ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் செயல்படுவர். அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். தனியார் துறையில் வேலைபார்ப்பவர்களுக்கு பொறுமையும் நிதானமும் தேவை.
உங்கள் பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் செய்யவும். மேலதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். ஆக.2க்கு பிறகு இடமாற்ற பீதி மறையும். வேலைப்பளு குறையும். ஆக.22,23,24ல் அலுவலக ரீதியாக முன்னேற்றமான சம்பவம் நடக்கும். நெருப்பு, மின்சாரம் தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது.
தொழில், வியாபாரத்தில் நிர்வாகச் செலவு அதிகரிக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் முன்னேற்றம் பெறும். ஜூலை 24க்கு பிறகு வியாபாரிகளுக்கு அரசு வகையில் சலுகை கிடைக்கும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும்.
செவ்வாயால் பொருள் களவு ஏற்பட வாய்ப்புண்டு. வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். ஆக.10க்கு பிறகு கோவில் மற்றும் புண்ணிய காரியங்களுக்கான தொழில் சிறந்து விளங்கும். ஜூலை 27,28,31,ஆக.1,2ல் சந்திரனால் தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும்.
ஆக.9,10ல் பகைவர்களை வெற்றி கொள்ளும் ஆற்றல் பிறக்கும். எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். சனிபகவானால் அலைச்சல் அதிகரிக்கும் வெளியூரில் தங்கும் நிலை வரலாம்.
கலைஞர்கள் முன்னேற்ற பாதையில் செல்வர். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை கூடும். ஜூலை24க்குள் அரசிடம் இருந்து விருது, பாராட்டு கிடைக்கும்.
அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சுமாரான நிலையில் இருப்பர். பணப்புழக்கத்தில் எந்த குறையும் இருக்காது. ஆக.10க்கு பிறகு புதிய பதவி கிடைக்க வாய்ப்புண்டு.
மாணவர்கள் அக்கறையுடன் படிப்பது நல்லது. புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் போட்டிகளில் வெற்றி பெற விடாமுயற்சி தேவைப்படும்.
விவசாயிகள் உழைப்புக்கேற்ற வருமானம் கிடைக்க பெறலாம்.
ஆக.10க்கு பிறகு புதிய சொத்து வாங்குவதற்கான அனுகூலம் உண்டாகும்.
பெண்களுக்கு அண்டை வீட்டார் அனுகூலமாக இருப்பர். உங்களால்
குடும்பம் சிறந்து விளங்கும்.
வேலைக்கு செல்லும் பெண்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். ஆக. 11,12,13 ஆகியவை சிறப்பான நாட்களாக அமையும். உடல்நலனில் அக்கறை தேவை.
கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்)
சனி, கேது, குருவால் மாதம் முழுவதும் நற்பலனை எதிர்பார்க்கலாம். மற்ற கிரகங்களின் பாதிப்புகளை இந்த மூன்று கிரகங்களும் தடுக்கும். சுக்கிரன் ஜூலை 24ல் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு மாறுவதன் மூலம் நன்மை தர உள்ளார்.
புதன் ஆக.2 வரை உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் இருந்து முயற்சிகளில் தடைகளை ஏற்படுத்தலாம். அதன்பின் அவர் உங்கள் ராசிக்கு மாறுவதும் சிறப்பானது அல்ல. இதனால் வீட்டில் பிரச்னை உருவாகலாம். குடும்ப வாழ்வில் குரு பகவான் குதூகலத்தை கொடுப்பார். சுபநிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார்.
பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பெண்களால் மேன்மை கிடைக்கும். அவர்களால் பொன், பொருள் சேரும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். ஜூலை31, ஆக.1,2ல் பெண்கள் மிகவும் உதவிகரமாக செயல்படுவர்.
ஜூலை 27,28ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் இருக்கும். ஆனால் ஆக.7,8ல் அவர்கள் வகையில் கருத்துவேறுபாடு ஏற்படலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். செவ்வாயால் ஆக.10க்குப்பின் பிறகு சிலரது வீட்டில் திருட்டு போகலாம். மின்சாரம், நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது.
பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு ஓரளவு கிடைக்கும்.சக பெண் ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். வழக்கமாக கிடைக்க வேண்டிய சம்பள உயர்வு, பதவி உயர்வுக்கு தடையிருக்காது.
ஆக.2க்கு சிலர் இடமாற்றத்தை சந்திப்பர். ஜூலை 25,26ல் சிறப்பான பலன் காணலாம். பணியிடத்தில் அதிகாரம் கொடிகட்டி பறக்கும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம்.
தொழில், வியாபாரத்தில் ஆற்றல் மேம்படும். பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமையை பெறுவீர்கள். கூட்டாளிகள் உதவிகரமாக செயல்படுவர். வாடிக்கையாளர் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். ஜூலை 29,30 ஆக.3,4ல் சந்திரனால் தடைகள் வரலாம்.
ஆக.11,12,13ல் திடீர் பணவரவுக்கு வாய்ப்புண்டு. பின்னர் பகைவர் வகையில் தொல்லை வரும். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை.
கலைஞர்களுக்கு இருந்த காரியத்தடை, பொருள் நஷ்டம் முதலியன ஜூலை 23க்கு பிறகு மறையும்.அதன் பிறகு. புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சீரான நிலையில் இருப்பர். எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் தாமதம் ஆகலாம்.
மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். ஆசிரியர்களிடம் அறிவுரையை பின்பற்றவும். குரு சாதகமான இடத்தில் இருப்பதால் படிப்பதற்கான சூழ்நிலை அமையும். அதை பயன்படுத்திக் கொள்வது நல்லது.
விவசாயிகள் எதிர்பார்த்த மகசூல் கிடைக்கப் பெறுவர். மஞ்சள், எள், கரும்பு, கோதுமை போன்ற பயிர்களில் சிறப்பான மகசூலை வரும். புதிய சொத்து வாங்க சில காலம் பொறுத்திருக்கவும்.
பெண்கள் குடும்ப வாழ்வில் குதூகலமாக இருப்பர். உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். மனம் போல ஆடை, ஆபரணங்கள் வாங்கலாம். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலையில் பொறுமையும் நிதானமும் தேவை. ஜூலை 24க்கு பிறகு சிறப்பான பலனை காணலாம்.
குடும்பத்தில் உங்களால் மகிழ்ச்சி பெருகும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலையில் நிம்மதியும் திருப்தியும் கிடைக்கும். சுய தொழில் செய்து வரும் பெண்களுக்கு லாபம் சிறப்பாக இருக்கும்.ஜூலை17,18,19, ஆக. 14,15 ஆகியவை சிறப்பான நாட்களாக அமையும். சூரியனால் அலைச்சலும் சோர்வும் ஏற்படும்.
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1)
இந்த மாதம் சுக்கிரன் ஜூலை 23 வரையும், புதன் ஆக.2 வரையும் நற்பலனை தருவார்கள். அதன் பிறகு முக்கிய கிரகங்கள் அனைத்தும் சாதகமற்ற நிலையில் இருந்தாலும் கவலை கொள்ள வேண்டாம். ராகு மாதம் முழுவதும் நன்மை தருவார்.
செவ்வாய் ஆக.3ல் கடகத்தில் இருந்து உங்கள் ராசிக்கு வந்தாலும் நன்மை பெற முடியாது. சூரியன், கேது,குரு,சனி நன்மை தர இயலாதவராக இருக்கிறார்கள்.
சுக்கிரனால் வருமானம் அதிகரிக்கும். சொந்தபந்தங்களின் வருகை இருக்கும். குடும்ப பெரியோர்களால் நன்மை கிடைக்கும். எனவே முக்கிய முடிவுகளை அவர்கள் வசம் ஒப்படையுங்கள்.
அது வெற்றிகரமாக முடியும். சமூகத்தில் மதிப்பு உயரும். ராகுவால் பொன், பொருள் கிடைக்கும். பெண்கள் உறுதுணையாக இருப்பர்.
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். உங்களின் வளர்ச்சிக்கு சகோதரிகள் பின்னணியாக இருப்பர். ஆக.3,4ல் அவர்கள் உறுதுணையாக இருப்பர். ஜூலை 29,30ல் விருந்தினர் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும்.
அதே நேரம் ஆக. 9,10ல் உறவினர் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும். ஆக.7,8ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பணியாளர்கள் சக பெண் ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு இருக்கும்.
தனியார் துறையில் வேலைபார்ப்பவர்கள் தங்கள் கோரிக்கைகளை ஆக.2க்குள் கேட்டு பெறவும். அதன் பிறகு ஒரு பிடிப்பு நிலை இல்லாத நிலை இருந்து வரலாம். வேலையில் பணிச்சுமையும், வீண் அலைச்சலும் அதிகரிக்கும்.
அரசு வேலையில் இருப்பவர்கள் சிலர் இடமாற்றத்தை சந்திப்பர். வேலையில் கூடுதல் அக்கறையுடன் இருக்கவும். சம்பள உயர்வு கிடைப்பதில் தடை இருக்காது. ஜூலை 27,28ல் சிறப்பான நாட்களாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் அதிகாரம் கொடிகட்டி பறக்கும்.
தொழில், வியாபாரத்தில் பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் முன்னேற்றம் அடையும். புதனால் ஆக.2 வரை பொருளாதார வளம் மேம்படும். முயற்சி வெற்றி அடையும். அதன் பிறகு அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். தொழில் விஷயமாக யாரிடமும் வாக்குவாதத்தை வைத்துக் கொள்ள வேண்டாம்.
ஜூலை17,18,19 ஆக.14,15ல் திடீர் பணவரவு இருக்கும். ஜூலை 31,ஆக.1,2,5,6ல் சந்திரனால் தடைகள் வரலாம். சனிபகவானால் வாடிக்கையாளர்கள் மத்தியில் குழப்பம் உருவாகலாம். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். ஜூலை 24க்கு பிறகு விடாமுயற்சி தேவைப்படும். அரசியல்வாதிகள் சுமாரான நிலையில் இருப்பர்.
ஆனால் கவுரவத்திற்கு பங்கம் வராது. ஆக.11,12,13 ல் வீண்மன உளைச்சல் ஏற்படலாம். மாணவர்கள் புதனால் போட்டிகளில் வெற்றி காண்பர். மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும்.
ஆக.2க்கு பிறகு கஷ்டப்பட்டு படிக்க வேண்டியதிருக்கும். விவசாயிகள் சீரான மகசூல் கிடைக்கப் பெறுவர். பழவகைகள், கீரை வகைகளில் நல்ல வருமானம் கிடைக்கும். கால்நடைகள் மூலம் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும்.
பெண்களுக்கு நற்பலன் கிடைக்கும். கணவரின் அன்பும், ஆதரவும் கண்டு நெகிழ்வர். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். சிலருக்கு புதிய பதவி தேடி வரும். வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர்.
ஆக.7,8ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம் பிறந்த வீட்டில் இருந்து சீதனம் கிடைக்கப் பெறலாம். ஜூலை 20,21, ஆக.16,17 சிறப்பான நாளாக அமையும். உடல்நிலை சிறப்பாக இருக்கும்.
கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2)
முக்கிய கிரகங்கள் சாதகமாக இருப்பதால் முன்னேற்றம் தரும் மாதமாக அமையும். 11-ல் உள்ள சூரியன் நல்ல வளத்தை கொடுப்பார். புதன் ஆக.3ல் மிதுன ராசியில் இருந்து கடகத்திற்கு மாறினாலும் நன்மை தருவார். சுக்கிரன் ஜூலை24ல் கடகத்திற்கு வந்து நன்மை தருவார். செவ்வாய் ஆக.10 வரை கடகத்தில் இருந்து நன்மை தருவார்.
சூரியனால் நல்ல பணப்புழக்கம் இருக்கும். கையிலுள்ள பணத்தை நிரந்தர சேமிப்பில் முதலீடு செய்வது நல்லது. எடுத்த முயற்சி அனைத்தும் சிறப்பாக நிறைவேறும். சமூகத்தில் மரியாதை மேம்படும். மக்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். அரசு வகையில் அனுகூலம் ஏற்படும்.
குடும்பத்தில் குதூகலம் தொடரும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்கலாம். பெண்களின் ஆதரவு இருக்கும். அவர்களால் பொன், பொருள் சேரும். ஜூலை24க்கு பிறகு பண வரவு கூடும். சொந்தபந்தங்களின் வருகை இருக்கும். ஜூலை31, ஆக.1,2ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் ஆக.11,12,13ல் உறவினர் வகையில் பிரச்னை ஏற்படலாம். சற்று ஒதுங்கி இருக்கவும்.
பணியாளர்கள் திருப்தியுடன் பணியில் ஈடுபடுவர். சிலருக்கு விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கலாம். அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். வேலையின்றி இருக்கும் படித்தவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்புண்டு.
அரசு ஊழியர்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். போலீஸ் மற்றும் ராணுவத்தில் வேலை பார்ப்பவர்கள் நற்பலனை எதிர்பார்க்கலாம். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை ஆக.10க்குள் கேட்டு பெற்று கொள்ளவும். ஜூலை 29,30ல் எதிர்பாராத நன்மை கிடைக்கும். பணியிடத்தில் அதிகாரம் கொடிகட்டி பறக்கும்.
வியாபாரிகளுக்கு அரசு வகையில் சலுகை கிடைக்கும். புதிய தொழில் முயற்சி அனுகூலத்தை கொடுக்கும். பகைவர்களின் இடையூறுகள் இடம் தெரியாமல் போகும். புதனால் ஆக.2க்கு பிறகு பொருளாதார வளம் மேம்படும். லாபம் அதிகரிக்கும்.
வேலையின்றி இருப்பவர்கள் குறைந்த முதலீட்டில் புதிய தொழில் தொடங்கலாம். ஜூலை20,21,ஆக.16,17ல் எதிர்பாராத பணவரவு கிடைக்கும். ஆக.3,4,7,8ல் சந்திரனால் தடைகள் வரலாம்.
கலைஞர்களுக்கு இருந்த எதிரி தொல்லைகள், அவப்பெயர், போட்டிகள் முதலியன ஜூலை 23க்கு பிறகு மறையும். அதன் பிறகு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். சமூகநல சேவகர்கள், அரசியல்வாதிகள் சிறப்பான வளர்ச்சி காண்பர். ஆக.10க்குள் எதிர்பார்த்த பதவி கிடைக்கும்.
மாணவர்கள் முன்னேற்றமான நிலையில் இருப்பர். படிப்பு மட்டுமில்லாமல் விளையாட்டு போட்டிகளிலும் வெற்றி காண்பர். புதன் சாதகமான இடத்தில் இருப்பதால் கூடுதல் நற்பலனை எதிர்பார்க்கலாம்.
விவசாயிகளுக்கு செலவு கட்டுக்குள் வரும். வருமானம் அதிகரிக்கும். நெல், பாசிப்பயறு, சோளம்,காய்கறி, பழ வகைகள் மூலம் அதிக வருமானம் கிடைக்கும். கால்நடை வளர்ப்பின் மூலம் ஆதாயம் அதிகரிக்கும்.
வழக்கு, விவகாரங்களில் முடிவு சாதகமாக அமைய வாய்ப்புண்டு. புதிய சொத்து ஆக.10க்குள் வாங்கலாம். அதன்பின் வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.
பெண்கள் கணவரின் அன்பும், ஆதரவும் பெற்று மகிழ்வர். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும்.
புதிய பதவியும் தேடி வரும். வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். ஆக.9,10ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். ஜூலை 22,23,24 சிறப்பான நாட்களாக அமையும். உடல்நிலை சீராகும்.
துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3)
இந்த மாதம் வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள். கடந்த காலத்தில் ஏற்பட்ட பாதக பலனை சனி, கேது, குரு பகவான் முறியடித்து உங்களை பாதுகாத்து இருப்பார்கள். இந்த மாதம் மேலும் பல கிரகங்கள் சாதகமான நிலைக்கு வருகின்றன.
சூரியன் மாதம் முழுவதும் சுகவாழ்வு அளிப்பார். சுக்கிரன் ஜூலை24 வரையும், புதன் ஆக.2க்கு பிறகும், செவ்வாய் ஆக.10க்கு பிறகும் நன்மை தருவார்கள்.
தெய்வ அனுகூலம் தொடர்ந்து கிடைக்கும். நினைத்தது விரைவில் நிறைவேறும். பெண்களால் ஏற்பட்ட களங்கம் மறையும். ஆக.2க்கு பிறகு பெண்களின் ஆதரவு கிடைக்கும். அவர்களால் பொன், பொருள் சேரும். குடும்பத்தில் தனி அந்தஸ்துடன் இருப்பீர்கள்.
கணவன், மனைவி இடையே அன்பு மேம்படும். பணவரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம். ஆக.2க்கு பிறகு சகோதர வழியில் நன்மையை எதிர்பார்க்கலாம். ஆக.10க்கு பிறகு புதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகம் கூடி வரும்.
பணியாளர்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும். அரசு ஊழியர்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். உங்கள் திறமைக்கு உகந்த மரியாதை கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் வந்து சேரும்.
தனியார் துறையில் வேலைபார்ப்பவர்களுக்கு புதனால் ஏற்பட்ட அவப்பெயர், செல்வாக்கு பாதிப்பு, வீண் மனக்கவலை முதலியன ஆக.2க்கு பிறகு மறையும். அதன்பிறகு சக பெண்ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர். ஜூலை 31,ஆக.1,2ல் எதிர்பாராத நன்மைகள் நடக்கும். உங்கள் அதிகாரம் கொடிகட்டி பறக்கும்.
ஆன்மிக சம்பந்தப்பட்ட மற்றும் பூஜை பொருட்கள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர். பகைவர்களின் இடையூறுகளை உடைத்தெறிவீர்கள். தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்கியவர்கள் அவர்கள் பிடியில் இருந்து ஆக.2க்கு பிறகு விடுபடுவர்.
அதன் பின் தொழிலில் லாபம் அதிகரிக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும். ஜூலை 22,23,24ல் நல்ல வருமானத்தை காணலாம். ஆக.5,6,9,10 ல் சந்திரனால் தடைகள் வரலாம்.
கலைஞர்கள் ஜூலை 24க்கு பிறகு புதிய ஒப்பந்தம் பெற தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைப்பதில் தாமதம் ஆகலாம். எதிரிகளால் தொல்லைகள் அதிகரிக்கும். போட்டிகள் அதிகம் இருக்கும். அவப்பெயர் உருவாகலாம்.
பொதுநல சேவகர்கள், அரசியல்வாதிகள் பலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியது இருக்கும். ஆக.10க்கு பிறகு எதிர்பார்த்த பதவி கிடைக்கப் பெறலாம். பணப்புழக்கத்திற்கும் குறைவிருக்காது. ஜூலை20,21,
மாணவர்கள் அதிக வளர்ச்சியை எதிர்பார்க்கலாம். ஆசிரியர்களின் அறிவுரையை பின்பற்றுவீர்கள். ஆக.10க்கு பிறகு புதன் சாதகமாக இருப்பதால் நல்ல முன்னேற்றம் காணலாம். போட்டிகளில் வெற்றி காணலாம். கெட்ட சகவாசத்தில் இருந்து சிலர் விடைபெறுவர். கல்விக்கான உதவித்தொகை கிடைக்கும்.
விவசாயிகள் நல்ல வளம் காண்பர். விளைச்சல் சிறப்பாக இருக்கும். குறிப்பாக நெல், மஞ்சள்,பழ வகைகள், சோளம், கேழ்வரகு, தக்காளி போன்ற பயிர்கள் மூலம் அதிக லாபம் காண்பர். புதிய சொத்து வாங்க நினைப்பவர்களுக்கு ஆக.௧௦க்கு பிறகு அனுகூலமான காற்று வீசத் தொடங்கும்.
பக்கத்து நிலத்துக்காரர்கள் வகையில் இருந்த தொல்லைகள் மறையும். அவர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். பசு வளர்ப்பின் மூலம் நல்ல வருமானத்தை காணலாம்.
பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். ஆக.11,12 சிறப்பான நாட்களாக இருக்கும்.
விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை)
சுக்கிரன் மாதம் முழுவதும் நற்பலன் கொடுப்பார். புதன் ஆக.2 வரை நன்மை தர காத்திருக்கிறார். தற்போது குரு,சனி சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவர்கள் வக்ரமாக உள்ளனர். அவர்கள் வக்கிரம் அடைந்தாலும் அதே ராசியிலேயே இருக்கிறார்கள்.
ஒரு கிரகம் வக்கிரம் அடையும் போது அந்த கிரகத்தால் இயல்பாக செயல்பட முடியாது. ஆதலால் கெடுபலன் உண்டாகாது.
சுக்கிரனால் பொருளாதார வளம் கூடும். வசதி வாய்ப்பு பெருகும். அத்யாவசிய தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். பெண்கள் ஆதரவுடன் செயல்படுவர். சூரியனால் அவப்பெயர் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே வீண் விவாதங்களை தவிர்க்கவும். சிலர் பொல்லாப்பை சந்திக்கலாம். பொறுமையுடன் விட்டுக் கொடுத்து போகவும்.
முயற்சிகளில் வெற்றி கிட்டும். புத்தாடை, அணிகலன்கள் வாங்க யோகமுண்டு. பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பெருமையும் கிடைக்கும். புதன் ஆக.3ல் இடம் மாறுவதால் முயற்சியில் தடைகள் குறுக்கிடலாம். அதை வெற்றிகரமாக செய்து முடிக்க பெண்கள் வசம் பொறுப்புகளை ஒப்படையுங்கள்.
ஆக.9,10ல் பெண்களால் நன்மை காண்பீர்கள். ஆக.5,6ல் உறவினர்கள் வருகையும், அவர்கள் மூலம் நன்மையும் கிடைக்கும். ஆனால் ஜூலை 20,21,ஆக.16,17ல் அவர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். ஜூலை17,18,19ல் புத்தாடை, நகைகள் வாங்கலாம்.
பணியாளர்கள் புதனின் பலத்தால் சிறப்பான பலன் கிடைக்கப் பெறுவர். அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். வீண் அலைச்சல், வேலைப்பளு குறையும். சக பெண் ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர். ஆக.2க்கு பிறகு சக ஊழியர்களின் பொல்லாப்பை சந்திக்கலாம். பொறுமையுடன் விட்டுக் கொடுத்து போகவும். அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும்.
சிலர் இடமாற்றத்தை சந்திக்கலாம். ஆக.3,4ல் அதிர்ஷ்டவசமாக வருமானம் கிடைக்கும். மின்சாரம், நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் விழிப்புடன் இருப்பது நல்லது.
பெண்களை பங்குதாரராக கொண்ட தொழில் வளர்ச்சி அடையும். அரசிடம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பது அரிது. அதோடு சிலர் அரசு வகையில் பிரச்னைகளை சந்திக்கலாம். எனவே வரவு, செலவு கணக்குகளை சரியாக வைத்துக் கொள்ளவும்.
ஆக.2க்கு பிறகு சிலர் தீயோர் சேர்க்கையால் பணஇழப்பைச் சந்திக்கலாம். எனவே யாரிடமும் பார்த்து எச்சரிக்கையுடன் பழகவும். ஜூலை 7,8,11,12,13ல் சந்திரனால் தடைகள் வரலாம். ஜூலை 25,26ல் பகைவர்களை எதிர்த்து வெற்றி கொள்ளும் ஆற்றல் உருவாகும். எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும்.
கலைஞர்களுக்கு சுக்கிரன் சாதகமாக இருப்பதால் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். வருமானம் அதிகரிக்கும். பொதுநல சேவகர்கள், அரசியல்வாதிகள் சீரான வளர்ச்சி காண்பர். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்காமல் போகலாம்.
ஜூலை 22,23,24ல் மனக்குழப்பம் ஏற்படலாம். விவசாயிகள் உழைப்புக்கு ஏற்ற வருமானத்தை காண்பர். பாசிப்பயறு, நெல் போன்ற தானிய வகைகளில் நல்ல மகசூல் கிடைக்கும். கால்நடை வளர்ப்பின் மூலம் வருவாய் பெருகும். வழக்கு, விவகாரங்களில் முடிவு சுமாராக இருக்கும். புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம். சொத்து வாங்க சில காலம் பொறுத்திருக்கவும்.
பெண்கள் ஆடம்பர பொருட்கள் வாங்குவர். குருவின் பார்வையால் சுபவிஷய பேச்சு நடக்க வாய்ப்புண்டு. குழந்தை பாக்கியம் கிடைக்கும். சகோதரவழியில் உதவி கிடைக்கும். ஆக.14,15ல் சிறப்பான நன்மையை எதிர்பார்க்கலாம். பிறந்த வீட்டில் இருந்து சீதனப் பொருள் வரலாம். ஜூலை27,28 சிறப்பான நாட்களாக அமையும். நண்பர்களால் உதவி கிடைக்கும்.
தனுசு:(மூலம், பூராடம், உத்திராடம் 1)
இந்த மாதம் சுக்கிரன் ஜூலை 23க்கு பிறகும், புதன் ஆக.2க்கு பிறகும் நற்பலன் கொடுப்பர். சந்திரனும் பெரும்பாலான நாட்கள் வெற்றியும், நன்மையும் தருவார். மற்ற கிரகங்கள் அனைத்தும் சாதகமற்ற நிலையில் இருப்பதால் எந்த ஒரு செயலையும் சற்று முயற்சி எடுத்தே நிறைவேற்ற வேண்டியதிருக்கும்.
புதனால் ஆக.1 வரை குடும்பத்தில் குழப்பம் நிலவும். மனைவி வகையில் கருத்துவேறுபாடு ஏற்படலாம். அதன் பின்னர் முயற்சியில் வெற்றி கிட்டும். புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர்.
கணவன், மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பெருமையும் கிடைக்கும். கையில் பெரும்பணம் புழங்கும். சமூகத்தில் மதிப்பு உயரும். நண்பர்களால் உதவி கிடைக்கும்.
குடும்பத்தில் சுக்கிரன் ஜூலை 24 முதல் சாதகமாக இருப்பதால் ஆடம்பர வசதிகள் பெருகும். மனதில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத்துடன் விருந்து, விழாவில் அடிக்கடி பங்கேற்பீர்கள்.
ஆக.11,12,13ல் பெண்களால் நன்மை கிடைக்கும். ஜூலை 22,23,24ல் உறவினர் வகையில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். சற்று விலகி இருக்கவும். அதே நேரம் ஆக.7,8ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும்.
பணியாளர்களுக்கு புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் வேலையில் பொறுமையும், நிதானமும் தேவைப்படும். அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். வெளியூரில் தங்கும் சூழ்நிலை ஏற்படலாம். விடாமுயற்சி எடுத்தால் மட்டுமே கோரிக்கைகள் நிறைவேறும்.
ஆனாலும் திறமைக்கு ஏற்ப கவுரவம் கிடைக்கும். ஆக.2க்கு பிறகு வேலைப்பளு குறையும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். ஆக.5,6ல் அலுவலக ரீதியாக முன்னேற்றமான சம்பவம் நடக்கும்.
முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம்தொழில், வியாபாரத்தில் லாபம் குறையாது. அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். எதிலும் அதிக முதலீடு செய்ய வேண்டாம்.
சனி, ராகுவால் அலைச்சல் அதிகரிக்கும் சிலர் தீயோர் சேர்க்கையால் அவதியுறுவர். இருப்பினும் அவரது 3-ம் இடத்துப் பார்வை சிறப்பாக உள்ளதால் தொழில் வளர்ச்சியைக் கொடுப்பார். ஜூலை 27,28ல் எதிர்பாராத பணவரவு கிடைக்கும்.
கலைஞர்களுக்கு பெண்கள் வகையில் இருந்த இடர்பாடுகள் ஜூலை 23க்கு பிறகு மறையும். அதன் பின் அதே பெண்கள் தவறை உணர்ந்து தங்களுக்கு உதவிகரமாக செயல்படுவர். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் எதிர்பார்த்த பதவியை அடைய முடியாது. ஆனாலும் கட்சிப்பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். தொண்டர்கள் வகையில் செலவு வரலாம்.
மாணவர்கள் படிப்பில் மெத்தனமாக இருக்க வேண்டாம். ஆக.2க்கு பிறகு புதன் சாதகமாக இருப்பதால் போட்டிகளில் வெற்றி கிடைக்கும். பரிசு, பாராட்டு பெற்று மகிழ்வர்.
விவசாயிகள் சீரான மகசூலை பெறுவர். ஆக2 க்கு பிறகு கால்நடை வளர்ப்பின் மூலம் கூடுதல் வருவாய் கிடைக்கும். நெல், பாசிப்பயறு, சோளம் போன்ற பயிர்களில் எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும். புதிய சொத்து வாங்க பொறுத்திருக்க வேண்டும். வழக்கு, விவகாரங்களில் முடிவு சுமாராக இருக்கும். புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம்.
பெண்கள் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும். வியாபாரம் செய்யும் பெண்களுக்கு ஆதாயம் அதிகரிக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். சிலர் பதவி உயர்வு காண்பர்.
மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2)
இந்த மாதம் குரு, ராகுவால் அபார ஆற்றல் பிறக்கும். பொருளாதார வளம் மேம்படும். சுபவிஷயம் பற்றிய பேச்சு நடக்கும். பகைவர் சதியை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். புதன் ஆக.2 வரை நன்மை தருவார். உங்கள் ஆற்றல் மேம்படும். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். குறிப்பாக மாத முற்பகுதில் கையிருப்பு அதிகரிக்கும்.
எடுத்த செயலை கச்சிதமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் வசதி வாய்ப்பு பெருகும். மனதில் மகிழ்ச்சி நிலைக்கும். ஆக.2க்கு பிறகு குழப்பம் நிலவும். மனைவி வகையில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். கணவன், மனைவிக்குள் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும்.
ஜூலை 17,18,19 ஆக.14,15ல் சகோதரர்கள் ஆதரவுடன் செயல்படுவர். அவர்களால் பொன், பொருள் கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். ஜூலை 22,23,24 ல் உறவினர் வகையில் பிரச்னை வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். அதே நேரம் ஆக.9,10ல் உறவினர் வருகையும், அவர்களால் நன்மையும் ஏற்படும்.
பணியாளர்கள் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவர். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர். தனியார் துறையில் வேலைபார்ப்பவர்கள் சிறப்பான முன்னேற்றம் காண்பர். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை ஆக.2க்குள் கேட்டு பெறவும்.
அதன் பிறகு அலைச்சல் அதிகரிக்கும். யாருடைய உதவியையும் நாடாமல் தன் கையே தனக்கு உதவி என்ற எண்ணத்தில் உழைத்து முன்னேறுங்கள். இருப்பினும் குருவால் வழக்கமாக கிடைக்க வேண்டிய சம்பள உயர்வு, பதவி உயர்வுக்கு தடையிருக்காது. ஆக.7,8ல் சிறப்பான பலனை எதிர்நோக்கலாம்.
தொழில், வியாபார விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். ஆக.2 வரை பொருளாதார வளம் அதிகரிக்கும். பகைவர் தொல்லை மறையும். புதிய வியாபாரத்தில் அதிக முதலீடு செய்ய வேண்டாம். ஜூலை 29,30ல் எதிர்பாராத வகையில் பணவரவுக்கு வாய்ப்பிருக்கிறது.
கலைஞர்களுக்கு முயற்சிகளில் இருந்த தடையும், மனதில் ஏற்பட்ட சோர்வும் ஜூலை 23க்கு பிறகு மறையும். ஆனால் அதன் பிறகு பெண்கள் வகையில் தொல்லைகள் வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும்.
அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சீரான வளர்ச்சி காண்பர். பொருளாதார நிலையில் குறைவிருக்காது. செவ்வாயால் அலைச்சல் ஏற்படலாம். பெண்கள் வகையில் தொல்லை வரலாம். ஜூலை 27,28ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.
மாணவர்களுக்கு புதன் சாதகமாக காணப்படுவதால் முன்னேற்றம் காண்பர். நல்ல நிறுவனத்தில் விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும். ஆக.2க்கு பிறகு அதிக சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். ஆசிரியரின் ஆலோசனையை ஏற்பது நன்மை தரும்.
விவசாயிகள் மானாவாரி பயிர்கள் மூலம் நல்ல மகசூல் கிடைக்கப் பெறுவர். புதிய சொத்து வாங்கலாம். கால்நடை வளர்ப்பின் மூலம் ஆக.2 வரை நல்ல வருமானம் கிடைக்கும். அதன் பிறகு கடின உழைப்பு தேவைப்படும். வழக்கு, விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம். புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம்.
பெண்களுக்கு எதிர்பார்ப்பு நிறைவேறும். தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் கைகூடும். கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். புதிய பதவியும் தேடி வரும்.
சுயதொழில் புரியும் பெண்களுக்கு அரசு வகையில் சலுகை கிடைக்கும். ஆக.2க்கு பிறகு வெளியில் பெருமையாக பேசப்பட்டாலும் வீட்டில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. இல்லையென்றால் வீண்மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். ஜூலை 22,23,24 சிறப்பான நாட்களாக அமையும். ஆக.1,2ல் பொன், பொருள் கிடைக்கும்.
கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3)
சூரியன், கேது, சனி மாதம் முழுவதும் நன்மை தருவார்கள். சுக்கிரன் ஜூலை 24 வரை நற்பயன் அளிப்பார். செவ்வாய் ஆக.10 வரையும், புதன் ஆக.2 க்கு பிறகும் சாதக பலன் கொடுப்பார்கள். இதனால் எதிர்பார்ப்பு நிறைவேறும். கடந்த கால பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படும். வாழ்வில் சிறப்பான முன்னேற்றம் காண்பீர்கள்.
சூரியனால் பகைவரை வெற்றி கொள்வீர்கள். பொருளாதார வளம் பெருகும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். செவ்வாயால் அபார ஆற்றல் பிறக்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்கலாம். புதன் ஆக.2க்கு பிறகு சாதக பலனைக் கொடுப்பார்.
இதனால் எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். இழுபறி நீடித்த சுபவிஷயங்களில் நல்ல முடிவு கிடைக்கும். கணவன், மனைவி இடையே இணக்கமான சூழலால் ஒற்றுமை மேலோங்கும். குடும்பத்தில் பெரியோர் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும்.
நண்பர்கள் உதவிகரமாக செயல்படுவர். தொழிலில் லாபம் அதிகரிக்கும். மனதில் பக்தி உயர்வு மேம்படும். பொன், பொருள் சேரும். மகிழ்ச்சி நிலைக்கும். பெண்கள் உறுதுணையாக இருப்பர்.
குறிப்பாக ஜூலை 17,18,19, ஆக.14,15ல் பெண்களால் பண உதவி கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். ஜூலை 27,28ல் உறவினர்கள் வகையில் மனக்கசப்பு வர வாய்ப்புண்டு. சற்று ஒதுங்கி இருக்கவும். ஆனால் ஆக.11,12,13ல் உறவினர் வருகையால் நன்மை சேரும்.
பணியாளர்கள் வாழ்வில் முன்னேற்றம் காண்பர். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும் பதவி, சம்பள உயர்வுக்கு தடை இருக்காது. சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். போலீஸ் மற்றும் ராணுவத்தில் பணிபுரிபவர்கள் தங்கள் கோரிக்கைகளை ஆக.10க்குள் கேட்டு பெறவும்.
தனியார்துறையில் வேலை பார்ப்பவர்கள் ஆக.2க்கு பிறகு சிறப்பான வளர்ச்சி காண்பர். வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேருவர். ஆக.9,10ல் விருப்பம் நிறைவேறும். உங்கள் அதிகாரம் கொடிகட்டி பறக்கும்.
தொழில், வியாபாரத்தில் பொருளாதார வளம் சிறக்கும். எதிரிகளால் ஏற்பட்ட முட்டுக்கட்டைகள் அகலும். புதிய தொழில் முயற்சியில் வெற்றி கிடைக்கும். வேலையின்றி இருப்பவர்கள் குறைந்த முதலீட்டில் புதிய தொழிலைத் தொடங்கலாம்.
தொழில் ரீதியாக வெளியூர் பயணம் சென்றவர்கள் ஆக.2க்கு பிறகு வீடு திரும்புவர். ஜூலை31, ஆக.1,2ல் திடீர் பணவரவுக்கு வாய்ப்புண்டு. கலைஞர்களுக்கு ஜூலை 24க்கு பிறகு முயற்சியில் தடையும், மனதில் சோர்வும் ஏற்படும்.
புதிய ஒப்பந்தம் கையெழுத்தாக விடாமுயற்சி வேண்டியிருக்கும். புகழ், பாராட்டு கிடைப்பதில் தாமதம் ஆகலாம். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் நற்பலன் காண்பர். எதிர்பார்த்த பதவி கிடைக்கும். ஆக. 10க்கு பிறகு சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டியதிருக்கும்.
மாணவர்கள் குருவின் பார்வையால் அதிக மதிப்பெண்கள் பெறுவர். நல்ல நிறுவனத்தில் விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும். ஆக.2க்கு பிறகு புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் போட்டிகளில் வெற்றி காண்பது அரிது. விவசாயிகளுக்கு வருமானத்திற்கு குறைவிருக்காது.
பயறு வகைகள், நெல், கேழ்வரகு, கரும்பு, பனைத்தொழில். பழவகைகள் போன்றவற்றில் நல்ல மகசூல் கிடைக்கும். கால்நடை வளர்ப்பால் ஆதாயம் பெருகும்.
பெண்கள் குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவர். சுபவிஷயங்கள் குறித்த பேச்சு நடந்தேறும். விரைவில் நல்ல முடிவு கிடைக்கும். வீடு, மனை, வாகனம் வாங்கலாம். ஆக.2க்கு பிறகு கணவரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். ஆக.3,4 சிறப்பான நாட்களாக இருக்கும். ஆரோக்கியம் மேம்படும்.
மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி)
குடும்ப பெரியோர்களின் ஆலோசனையும், ஒத்துழைப்பும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும். புதன் ஆக.2 வரை மிதுனத்தில் இருந்து நன்மை தருவார். தற்போது செவ்வாய் சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் ஆக.10ல் சிம்ம ராசிக்கு மாறுவதன் மூலம் நன்மை தர உள்ளார். சுக்கிரன், குரு மாதம் முழுவதும் நன்மைகளை தருவார்கள்.
சனி, ராகுவால். பெண்கள் வகையில் தொல்லை ஏற்படலாம். குடும்பத்தில் பகை, பிரிவை ஏற்படுத்துவார். எது எப்படியானாலும் குரு, சுக்கிரன் அதை தடுத்து நிறுத்தி பாதிப்பு வராமல் பார்த்து கொள்வர். புதனால் எடுத்த முயற்சி வெற்றி அடையும்.
சுபநிகழ்ச்சிகள் நடைபெறலாம். ஆக.10க்கு பிறகு பகைவர் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். அபார ஆற்றல் பிறக்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்கலாம். புதிய வீடு, மனை வாகனம் வாங்க யோகம் கூடி வரும்.
குடும்பத்தில் பெரியோர்களின் ஆலோசனை கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக செயல்படுவர். லாபம் அதிகரிக்கும். பக்தி எண்ணம் மேம்படும். தம்பதியிடையே அன்பு, பாசம் மேலோங்கும். ஆக.2க்கு பிறகு குடும்ப விஷயங்களில் பொறுமையும் நிதானமும் தேவை.
சகோதரிகள் உதவிகரமாக இருப்பர். குறிப்பாக ஜூலை 22,24ல் அவர்களால் மிகுந்த பலனை எதிர்பார்க்கலாம். ஜூலை 17,18,19, ஆக.14,15ல் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் ஜூலை 29,30ல் அவர்கள் வகையில் ஒதுங்கி இருக்கவும்.
பணியாளர்கள் பதவி உயர்வு காண்பர். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.
கடந்த கால உழைப்பின் பலன் கிடைக்கும். சக ஊழியர்கள் ஒத்துழைப்புடன் இருப்பர். ஆக.2க்கு பிறகு வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்து செல்ல நேரிடலாம்.
தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு இடமாற்றம் வர வாய்ப்புண்டு. ஆக.10க்கு பிறகு பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றம் காண்பர். அரசு ஊழியர்களுக்கு சிறப்பான காலகட்டம். கோரிக்கைகள் நிறைவேறும். ஆக.11,12,13 ல் எதிர்பாராத நன்மைகளை பெறலாம்.
தொழில், வியாபாரத்தில் பொருளாதார வளம் அதிகரிக்கும். ஆன்மிக சம்பந்தபட்ட மற்றும் பூஜை பொருட்கள் வியாபாரம் செய்பவர்கள் லாபம் காண்பர். செவ்வாயால் பகைவர் தொல்லை குறுக்கிடலாம்.
அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. ஆக.2க்கு பிறகு அலைச்சல் அதிகரிக்கும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம். ஆக.5,6ல் பகைவரை வெல்லும் ஆற்றல் பிறக்கும். எதிர்பாராத வகையில் ஆதாயம் கிடைக்கும்.
கலைஞர்கள் வாழ்வில் முன்னேற்றம் காண்பர். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சக கலைஞர்கள் உதவிகரமாக இருப்பர். அரசியல்வாதிகள் சுமாரான நிலையில் இருப்பர். பணப்புழக்கத்தில் எந்த குறையும் இருக்காது. ஆக.10க்கு பிறகு எதிர்பார்த்த பதவி கிடைக்கும்.
மாணவர்களுக்கு பின்தங்கிய நிலை இருக்காது. ஆசிரியர்களின் ஆலோசனை வளர்ச்சிக்கு வழிவகுக்கும். குருவால் மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். சிலர் வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு கிடைக்கும். புதன் சாதகமாக காணப்படுவதால் போட்டிகளில் வெற்றி காண்பர்.
விவசாயிகளுக்கு விளைச்சல் சிறப்பாக இருக்கும். பாசி பயறு, நெல், கோதுமை, சோளம், மஞ்சள், தக்காளி, பழ வகைகள் நல்ல வருவாய் கொடுக்கும். கால்நடை வளர்ப்பிலும் ஆதாயம் அதிகரிக்கும்.
ஆக.10க்கு பிறகு புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். பெண்களுக்கு சமூகத்தில் மதிப்பு உயரும். உறவினர்களால் உதவி கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். ஆக.10க்கு பிறகு சிறப்பான பலன் பெறுவர்.









