• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

நாட்டின் 72வது சுதந்திர தினம்

siddharbhoomi by siddharbhoomi
August 14, 2018
in செய்திகள்
0
நாட்டின் 72வது சுதந்திர தினம்
3
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

நாட்டின் 72வது சுதந்திர தினம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பல்வேறு இன்னல்கள், போராட்டங்களுக்கு இடையே சுதந்திரத்தை வாங்கிக்கொடுத்த தேசத்தலைவர்களை இந்நாளில் நினைவு கூர்வோம்..! 

1. மகாத்மா காந்தி

இந்திய விடுதலைப் போராட்டத்தை தலைமையேற்று நடத்திய மகாத்மா கந்தி சுதந்திர

இந்தியாவின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.

சத்தியாக்கிரக போராட்டம் மூலம் நாட்டின் விடுதலைக்கு வழிகோலிய காந்தியடிகள்

உலக நாடுகளுக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறார்.

பகவத் கீதை, ஜைன சமய கொள்கைகள், லியோ டால்ஸ்டாயின் எழுத்துக்கள்

போன்றவற்றால் பெரிதும் கவரப்பட்டார். வாரத்திற்கு ஒருநாள் மௌன விரதம், கதர்

உடை, சைவ உணவு, பொய் கூறாமை, அசிம்சை ஆகியவை காந்தியடிகள் உறுதியாக

பின்பற்றிய கொள்கைகள்.

மகாத்மா காந்தி குஜராத்தி மொழியில் எழுதிய சுயசரிதை நூலான சத்திய சோதனை உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

2. மகாகவி பாரதியார்

கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பன்முகங்கள் கொண்டவர் சுப்பிரமணிய பாரதி. தமிழ் கவிதையிலும் உரைநடையிலும் தன்னிகரற்று விளங்கும் பாரதி, நவீன தமிழ் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்பவர்.

தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இவரது கவித்திறனை எட்டப்ப நாயக்கர் வியந்து பாராட்டி பாரதி என்ற பட்டத்தை வழங்கினார். 1949ஆம் ஆண்டு நாட்டுடைமை ஆக்கப்பட்ட பாரதியாரின் படைப்புகள் இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமையாக்கப்பட்ட இலக்கியமாகும்.

பால கங்காதர திலகர், உ.வே.சாமிநாதையர், வ.உ.சிதம்பரனார், மகான் அரவிந்தர், விவேகானந்தரின் மாணவியான சகோதரி நிவேதிதா தேவி ஆகியோரைப் போற்றி பின்பற்றியவர்.

3. சுப்பிரமணிய சிவா

அரசியலையும் ஆன்மீகத்தையும் விடுதலைப் போராட்டத்தில் இணைத்துப் போராடியவர். தமிழக மக்களுக்கு விடுதலைத் தாகம் ஏற்படச்செய்த சிறந்த பேச்சாளர் ‘ஞானபாநு’ என்ற இதழை நடத்தியவர்.

தனது வீரமிக்க பேச்ச்சால் விடுதலை வேட்கையைத்த தூண்டியதால் ’வீரமுரசு’ என்று போற்றப்படுபவர்.

வ.உ.சிதம்பரனார் மற்றும் மகாகவி பாரதியார் ஆகியோருடன் இணைந்து விடுதலைப் போராட்டங்களில் தீவிரமாக செயல்பட்டவர். தேசிங்குராஜன், சிவாஜி உள்ளிட்ட நாடகங்க நூல்களையும் வேதாந்த ரகஸ்யம், மோட்ச சாதனை ரகசியம் உள்ளிட்ட ஆன்மீக நூல்களையும் எழுதியுள்ளார்.

4. கொடிகாத்த குமரன்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில் பிறந்தார் குமரன். 1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் தமிழகம் முழுவதும் தீவிரமடைந்தது. அப்போது,

திருப்பூரில் ’தேசபந்து இளைஞர் மன்றம்’ மறியல் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்தது.
1932 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி நடந்த போராட்ட அணிவகுப்பின் போது கையில் இந்திய தேசியக் கொடியினை ஏந்தி, தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று முன் நடந்தார் குமரன். அந்த போராட்டத்தின் போது ஆங்கிலேய காவலர்களால் தலையில் தடியால் தாக்கப்பட்டார்.

தலையிலிருந்து ரத்தம் வழிய கீழே சரிந்தபோதும், கையில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி தேசியக்கொடி தரையில் விழாமல் காத்தார். சிகிச்சைக்காக மருத்துவமனை சென்றவர் அங்கேயே உயிர் துறந்தார். திருப்பூரில் நடந்த போராட்டதில் உயிர்நீத்த்தால் திருப்பூர் குமரன் என்றும் தேசியக் கொடியை ஏந்தியபடி வீரமரணம் அடைந்ததால் கொடிகாத்த குமரன் என்றும் அழைக்கப்படுகிறார்.

5. சுந்தரலிங்கம்

வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட பிறகு அவருடன் போரில் பங்கு பெற்றவர்களை பற்றி நாட்டுபுற பாடல்களும், கூத்துகளும் இயற்றப்பட்டன. இப்படியாக இப்பகுதியில் வழங்கப்பட்ட நாட்டுப்புற பாடல்களை

ஆய்வாளர் நா.வானமாமலை தொகுத்துள்ளார். இதனின் ஊடாக இப்போரில் பங்கு பெற்ற சுந்தரலிங்கம், வெள்ளையன், கந்தன் பகடை, முத்தன் பகடை , கட்டன கருப்பணன் போன்றவர்களை அறிய முடிகிறது.

சுந்தரலிங்கத்தின் பொறுப்பில்தான் கட்டபொம்மனின் தானியக்கிடங்கும், வெடிமருந்துக் கிடங்கும் இருந்தன. கட்டபொம்மனுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் மோதல் உருவானபோது சுந்தரலிங்கம் கட்டபொம்மனுக்கு பக்கபலமாக விளங்கினர்.

1799 செப்டம்பர் 8ம் தேதி சுந்தரலிங்கம் தனது முறைப்பெண்ணான வடிவுடன் ஆடுமேய்ப்பவர்களைப் போல வெள்ளையர்களின் வெடிமருந்து கிடங்குப் பகுதிக்குப் போனான். தீப்பந்தத்தைக் கொளுத்தியபடி சுந்தரலிங்கமும்,

வடிவும் வெடிமருந்துக் கிடங்கிற்குள் பாய்ந்தார்கள். பலத்த வெடிச்சத்தத்துடன் கிடங்கு தீப்பிடித்து எரிந்தது. சுந்தரலிங்கமும், வடிவும் இந்திய சுதந்திரப் போரின் முதல் தற்கொலைப் படை தாக்குதல் தொடுத்தவர்களானார்கள்.

அவர்களது வீரமரணத்திற்கு அடுத்த நாள் நடைபெற்ற போரில் பாஞ்சாலங்குறிச்சி ஆங்கிலேயர் வசமானது.

வ.உ.சி. ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வணிகம் செய்யவே வந்தனர். ஆனால் இந்திய ஆட்சியைக் கைப்பற்றி இந்திய நாட்டின் செல்வங்களை கொள்ளையடித்துக் கொண்டிருந்தனர். வ.உ.சி.யை இது கடுமையாகப் பாதித்தது. அவர் தனது எதிர்ப்பைத் தெரிவிக்க ஆங்கிலேயர்களின் வணிகத்தையே முதலில் எதிர்த்தார்.

“பிரிட்டிஷ் இந்திய ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி”, இந்தியா, இலங்கை இடையே கப்பல்களை இயக்கிக் கொண்டு இருந்தது. அது ஆங்கிலேயர்களின் வணிகத்துக்கே முக்கியத்துவம் கொடுத்தது. ஆதலால் வ.உ.சி. இந்தியர்களுக்காக ஒரு கப்பல் நிறுவனம் துவங்க தீர்மானித்தார்.

6. வ.உ.சிதம்பரனார்

1906-ஆம் ஆண்டு அக்டோபர் 16-ஆம் நாள் “சுதேசி நாவாய்ச் சங்கம்” என்ற கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தார். (அதன் தலைவர் மதுரை தமிழ்ச்சங்கத் தலைவர், வள்ளல் பாண்டித்துரைதேவர்; சட்ட ஆலோசகர் சேலம் சி.விஜயராகவாச்சாரியார்). நிறுவனத்தின் மூலதனம் ரூ.10,00,000.

சுதேசி கப்பல் நிறுவனத்தின் வெற்றியுடன் வ.உ.சி. திருப்தியடையவில்லை. அவர் மக்களிடையே விடுதலைப் போராட்ட உணர்வைத் தூண்ட நினைத்தார். இந்திய தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக செயல்பட வ.உ.சி.க்கு ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டது.

லார்டு. ராய் இந்தியாவில் இருந்த ஆங்கில அரசு அதிகாரி. அவர் 1905-ஆம் ஆண்டு லண்டனில் நடந்த ஆங்கிலேய வணிகப் பெருமக்களின் கூட்டத்தில்,”இந்தியாவில் முதலீடு செய்யலாம். ஏனெனில் அங்கே தொழிற்சங்கம் இல்லை.

அதனால் தொழிலாளர்களின் கூலி மிகக் குறைவு” என்று பேசினார். இந்த வகையான பேச்சிலிருந்து இந்தியாவில் அந்த கால கட்டத்தில் தொழிலாளர்களின் நிலையை நாம் அறியலாம். தூத்துக்குடியில் கோரல் நூற்பாலை என்று ஒரு தொழிற்சாலை இருந்தது.

அங்கே தொழிலாளர்களுக்குக் கூலி மிகக் குறைவு.ஆனால் அவர்கள் நாள் முழுவதும் இடைவேளை இல்லாமல் பன்னிரண்டு மணி நேரத்திற்கு அதிகமாக கடினமாக உழைக்கவேண்டும். அவர்களுக்கு விடுமுறை கிடையாது. தொழிலாளர்கள் ஏதேனும் தவறு செய்தால் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர்.

தொழிலாளர்களின் அவல நிலையைப் பார்த்து வ.உ.சி. மிகவும் வருந்தினார். நூற்பாலை தொழிலாளர்களை வேலை நிறுத்தம் செய்யும்படி தூண்டினார். வ.உ.சி.யும் சுப்ரமணிய சிவாவும் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு அளித்தனர்.

பால கங்காதர திலகரின் சீடரான வ.உ.சிதம்பரனார் தென்னாட்டுத் திலகர் என்று போற்றப்படுபவர்.

7. புலித்தேவர்

இந்திய விடுதலை வரலாற்றில் `வெள்ளையனே வெளியேறு’ என்று முதன் முதலாக 1751 ஆம் ஆண்டில் வீர முழக்கமிட்டவர். இதனால் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும் சிப்பாய்க்கலகத்திற்கும் (1857) முன்னோடியாகக் கருதப்படுகிறார்.

1756 மார்ச்சு மாதம் திருநெல்வேலியில் மாபஸ்கானுடன் புலித்தேவர் நடத்திய போரில் புலித்தேவனின் உயிர்த்தோழன் மூடேமியாவை ஆங்கிலேயர்கள் துண்டு துண்டாக வெட்டி எறிந்ததால் மனமுடைந்த புலித்தேவன் போரை நிறுத்தித் திரும்பினார். அதனால் மாபஸ்கான் திருநெல்வேலியை தன்வசப்படுத்தினான்

நெருக்கடியான சூழ்நிலையிலும் கூட ஆங்கிலேயருக்கு எதிரான போரில் டச்சுக்காரர்கள் மற்றும் பிரெஞ்சுக்காரர்களின் உதவியையும் புலித்தேவர் மறுத்துவிட்டார்.

8. தி. சே. சௌ. ராஜன்

திருவேங்கிமலை சேஷ செளந்தர ராஜன் என்ற தி. சே. சௌ. ராஜன் ராஜாஜியுடன் ஏற்பட்ட நட்பினால் இந்தியத் தேசியக் காங்கிரசில் இணைந்தார். ரௌலட் சட்டத்துக்கு எதிரான போராட்டங்களில் பங்கு கொண்டு சிறை சென்றார்.

1920-22ல் கிலாபத் ஒருங்கிணைப்பு குழுவில் உறுப்பினராக இருந்தார். உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்றுப் பதினெட்டு மாதங்கள் சிறை தண்டை பெற்றார். இந்தியத் தேசியக் காங்கிரசில் தேசிய அளவிலும் மாநில அளவிலும் பொதுச் செயலாளர்,

தலைவர், மாநிலச் செயலாளர் என பல பதவிகளை வகித்தார். மருத்துவருமான இவர் தனது மருத்துவ மேல்படிப்பை இங்கிலாந்தில் முடித்துவந்து, தனியாக மருத்துவமனை நடத்தி வந்தார். வ.வே.சு.ஐயர், காந்தியடிகள் உள்ளிடவர்களைப் பற்றிய நூல்களையும் ‘நினைவு அலைகள்’ என்ற சுயசரிதையையும் எழுதியுள்ளார்.

9. கோவை சுப்ரமணியம் என்கிற சுப்ரி

1925இல் அகில இந்திய நூற்போர் சங்கம் திருப்பூரில் தொடங்கப்பட்டது. இதனைத் தொடங்க கதர் இயக்கத்தின் நாயகரான கோவை அய்யாமுத்து அவர்களோடு சேர்ந்து சுப்ரியின் பங்களிப்பு முக்கியமானது.

இந்த சங்கம் திருப்பூரில் தொடங்கப்பட்ட காலத்துக்குப்பின் கதர் உற்பத்தில் பல கிராமங்களிலும் அதிகரித்தது. 1930இல் மகாத்மா காந்தி தண்டி யாத்திரை மேற்கொண்ட போது அந்த போராட்டம் நடைபெற்ற அனைத்து நாட்களும் சுப்ரி கோவையில் ஊர்வலங்களை நடத்தினார்.

அன்னிய துணி எதிர்ப்பு மற்றும் வெள்ளையனே வெளியேறு இயக்கப் போராட்டங்களில் பங்குபெற்று சிறை சென்றவர். 1941ஆம் ஆண்டு ஜாலியன் வாலாபாக் நினைவு தினம் அனுசரித்த காரணத்திற்காகவும் சிறைவாசம் அனுபவித்தார். காந்தியடிகளின் பல சொற்பொழிவுகளை தமிழில் மொழிபெயர்த்ததால்,

“மை லெளட் ஸ்பீக்கர்” என்று காந்தியடிகளாலேயே புகழ்ப்பட்டுள்ளார். முருகப் பெருமான் மீது பற்றுள்ள சுப்ரி முருக கானம் என்ற பெயரில் ஆன்மீக நூலையும் எழுதியுள்ளார்.

10. நீலகண்ட பிரம்மச்சாரி

1911ஆம் ஆண்டில் மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதனால் சுட்டுக் கொல்லப்பட்ட மாவட்ட ஆட்சியர் ஆஷ் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டபோது தான் நீலகண்டனின் பெயர் நாடு முழுவதும் பிரபலமானது. ஆஆனல், அதற்கு முன்பே இவரது விடுதலைப்

போராட்ட ஈடுபாடு அளப்பரியதாக இருந்த்து. இளம் வயதில் 20,000 போராளிகளை ஒன்று திரட்டி இந்திய விடுதலைப் போராட்டத்திற்கான புரட்சி இயக்கம் ஒன்றை தோற்றுவித்துப் போராடியவர்.
பாரதியாருடன் நெருங்கிப் பழகியவர். பாரதி புதுச்சேரியில் தலைமறைவாக இருந்த

காலத்தில், இந்தியா பத்திரிகையை பொறுப்பேற்று நடத்தியவர். வாழ்வின் பெரும்பகுதியை இந்தியா, பாகிஸ்தான், மியான்மர் நாட்டுச் சிறைகளில் கழித்தவர். உணவில்லாமல் சென்னையில் அலைந்து திரிந்த நீலகண்ட பிரம்மச்சாரியைக்

கண்டதும் தான் பாரதி ‘தனியொருவனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்’ என்று பாடினார்.
வாழ்வின் பிற்பகுதியில் துறவு மேற்கொண்டு பெற்று மைசூரில் உள்ள நந்தி

மலையடிவாரத்தில் ஆஸ்ரமம் அமைத்துக் கொண்டு வாழ்ந்தார். அப்போது தனது பெயரை ஸ்ரீ ஓம்காரானந்த சுவாமி என்றும் மாற்றிக்கொண்டார்.

11. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

சுபாஷ் சந்திர போஸ் இந்திய விடுதலைப் போராட்டத்தை தனி வழியில் நடத்திச்சென்றவர். 25வது வயதில் லண்டனில் படிப்பை முடித்துத் திரும்பிய நேதாஜியை சித்தரஞ்சன் தாஸ் தான் நிறுவிய தேசியக் கல்லூரிக்கு தலைராக நியமித்தார்.

லண்டனில் படித்தபோது மேல்நாட்டு விடுதலைப் போர் வரலாறுகளையும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் பிரித்தாளும் சூழ்ச்சிகளையும் அறிந்திருந்த நேதாஜி கல்லூரி மாணவர்களுக்கு விடுதலை உணர்வை ஊட்டும் உரைகள் ஆற்றினார்.

இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது வெளிநாடுகளில் போர்க்கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கினார். அப்படை மூலம் இந்தியாவை ஆக்கிரமித்திருந்த ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்தார்.

12. சர்தார் வல்லப்பாய் படேல்

வல்லபாய் படேல் குஜராத் மாநிலத்தில் வழக்கறிஞராக இருந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக அறவழி போராட்டங்களை நடத்தினார். இந்திய தேசிய காங்கிரஸ் தலைவவர்களுள் ஒருவராக, வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் முக்கிய அங்கம் வகித்தார்.

சுதந்திர இந்தியாவின் முதல் துணை பிரதம அமைச்சராகவும் உள்துறை அமைச்சராகவும் பணியாற்றிய சர்தார் வல்லப்பாய் படேல் சுதந்திர இந்தியாவை ஒருங்கிணைத்த சிற்பி என்று புகழப்படுகிறார்.

ஐநூறுக்கும் மேற்பட்ட சமஸ்தாங்களை ஒருங்கிணைத்து இன்றைய ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கியதால் இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படுபவர் சர்தார் வல்லபாய் படேல்.

13. கோபால கிருஷ்ண கோகலே

இந்திய சுதந்திர போராட்டத்தின்போது உருவான சமூக மற்றும் அரசியல் தலைவர்களில் ஒருவர் கோகலே. இந்திய தேசிய காங்கிரஸ்சின் மூத்த தலைவரான இவர் இந்திய சேவகர்கள் அமைப்பின் நிறுவனரும் ஆவார்.

காங்கிரஸ் மட்டுமின்றி இதர அரசியல் அமைப்புகளில் பணியாற்றியுள்ளார். ஆங்கிலேய அரசிடமிருந்து சுதந்திரத்தைப் பெறுவது மட்டும் போதாது, சமூக மாற்றத்தையும் ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்று விரும்பினார்.

இந்த இலக்கை அடைய வன்முறையைத் தவிர்த்தல் மற்றும் அரசு நிறுவனங்களுக்குள் மாற்றங்கள் செய்தல் ஆகிய கொள்கைகளை வலியுறுத்தினார்.

14. ஜவகர்லால் நேரு

இந்தியாவின் முதல் பிரதமாரன நேரு நவீன இந்தியாவின் சிற்பி என்று போற்றப்படுகிறார். இந்திய சுதந்திர இயக்கத்தின் முன்னோடியான நேரு இளம் வயதிலேயே காங்கிரஸின் இடதுசாரித் தலைவரானார்.

1920ஆம் ஆண்டு காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்தற்காக முதல் முறையாக சிறை சென்றார். தன் வாழ்நாளில் 9 வருடங்களை சிறையிலேயே கழித்தார்.

சிறையில் இருந்த நாட்களில் உலக வரலாற்றின் காட்சிகள், சுயசரிதை மற்றும் இந்தியாவின் கண்டுபிடிப்பு ஆகிய நூல்களை எழுதினார். அணி சேரா இயக்கத்தை உருவாக்கியவர்களில் முக்கியமானவர். போருக்குப் பின்னான காலத்தில் அனைத்து உலக அரசியலில் மிக முக்கிய நபரானார்.

15. பால கங்காதர திலகர்

இந்தியத் தேசியவாதி, சமூக சீர்திருத்தவாதி, விடுதலைப் போராட்ட வீரர் என பல விதங்களில் அறியப்படுபவர். இந்திய விடுதலை இயக்கத்தின் முதல் மக்கள் ஆதரவு பெற்ற தலைவரும் இவரே. இவரது பெயருடன் ‘லோகமான்ய’ கௌரவப் பெயரையும் சேர்த்து அழைப்பதுண்டு.

இந்தியாவுக்கு முதன் முதலில் தன்னாட்சி கோரியவர்களுள் திலகரும் ஒருவர். தன்னாட்சி எனது பிறப்புரிமை அதனை நான் பெறுவேன் என்னும் இவரது புகழ் பெற்ற கூற்று இன்றும் நினைவுகூரப்படுகிறது.

Previous Post

தமிழர்களின் பங்களிப்பு-அனைத்து விடுதலை வீரர்களுக்கும் வீரமங்கையருக்கும் இந்த கட்டுரை சமர்ப்பணம்.

Next Post

ஆகஸ்ட் 15 என்பது நம் திருவிழா

Next Post
ஆகஸ்ட் 15 என்பது நம் திருவிழா

ஆகஸ்ட் 15 என்பது நம் திருவிழா

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

வாழ்வு இருக்கிறதென்றால் ?

வாழ்வு இருக்கிறதென்றால் ?

March 17, 2026
மாசி கிருஷ்ண பக்ஷ பஞ்சமி – ஸ்ரீ வாராஹி அம்மன் வழிபாடு

மாசி கிருஷ்ண பக்ஷ பஞ்சமி – ஸ்ரீ வாராஹி அம்மன் வழிபாடு

March 16, 2026
ஆருத்ரா கபாலீஸ்வரர் திருக்கோயில்!

ஆருத்ரா கபாலீஸ்வரர் திருக்கோயில்!

March 15, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »