ஆடி மாதத்தில் புதுமணதம்பதியரை பிரித்துவைப்பது ஏன்?
ஒவ்வொரு மாதமும் பெண்ணுக்கு மாதப்பிரவிடை நேர்ந்த பிறகு, கோச்சாரப்படி சந்திரன் உபஜெய ராசிகளில் இருக்கும்போது, சந்திரனை குரு பார்க்கும் போது தம்பதியர் தாம்பத்தியம் விரும்புவர்.
ஜென்மராசிக்கு 3. 6. 10. 11 ஆகிய ராசிகள் உபஜெய ராசிகளாகும்.
இதன்பின் சந்திரன் அபஜெயராசிகளில் இருக்கும்போது பெண் கருவுருவாள்.
ஜென்மராசிக்கு 1. 2. 4. 5. 7. 8. 9. 12 ஆகிய ராசிகள் அபஜெய ராசிகள்.
மனக்கட்டுப்பாடு நிறைந்த மூத்த தம்பதியர்கள், மேற்கண்ட காலகட்டங்களை அறிந்து நடந்துகொண்டனர். மேற்கண்ட காலங்கள் ஆடியில் வரும்போது தாம்பத்தியத்தை தவிர்த்தனர்.
இம்மெய்ஞான குடும்ப நலத்திட்டத்தை மூத்த தம்பதியர்கள் மனக்கட்டுப்பாடுடன் கடைபிடித்ததனால், ஆடியில் அவர்களை பிரிக்க வேண்டிய அவசியமில்லாமல் போனது.
மேற்கண்ட சாஸ்த்திர, சம்பிரதாயங்களை, கவனமுடன் கடைபிடித்து வந்தபோதும்,
அக்காலத்திலும் சில சாஸ்த்திர, சம்பிரதாய மீறல்கள் தெரிந்தோ, தெரியாமலோ நடந்தன. அதனால் எலும்பு வளர்ச்சிக்குறைபாடுள்ள குழந்தைகள் பிறக்கவே செய்தன. அத்தகையோரில் கூன்பாண்டியனும், அஷ்டவக்கிரனும் முன்மாதிரிகள்.
மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்களில் ஒருவரான, கூன்பாண்டியனுக்கு, பெயருக்கேற்றவாறு, பிறவிலிருந்தே முதுகு வளைந்திருந்தது.
இந்த குறையை ஸ்ரீஞானசம்பந்தர் ” திருநீற்றுப் பதிகம் “, பாடி, திருநீறு தடவி, கூனைப்போக்கினார். அன்று முதல் பாண்டியன், நின்றசீர் நெடுமாறனானான்.
அஷ்டவக்கிரனுக்கு, உடம்பில் ஏற்பட்ட எலும்புக்குறைபாடால் எட்டு இடங்களில் vவளைவும், கோணலும் இருந்தது.
இதை அஷ்டலிங்க மூர்த்தியாக எழுதருளியிருக்கும் ஸ்ரீசிவபெருமான் போக்கியருளினார். இவ்வதிசயம் நடந்த இத்தலத்தில் இன்றும் இதற்கான பரிகார வழிபாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறன.
தவறுதலாக ஆடி மாதம் கருவுற்றுவிட்டால், ஐப்பசி மாதத்தில் அஷ்டலிங்க வழிபாடு செய்து, எலும்பு ஆரோக்கியமுள்ள குழந்தையை பெற்றுக்கொள்ளலாம். 4 ஆவது மாதம், கருவை மருத்துவர் அனுமதியுடன், ஸ்கேன் செய்து பார்த்தோமானால், அதன் எலும்பு வளர்ச்சி பற்றிய முழுதகவல் நமக்கு கிடைத்துவிடும்.
குறைபாடு இருப்பின், மருத்துவம் மேற்கொள்வதோடு, பரிகார வழிபாடும் மேற்கொள்ள வேண்டும்.
கும்பகோணத்திலிருந்து, திருவைக்காவூர் செல்லும் பாதையில் கூனன்சேரி என்றொரு சிவத்தலம் உள்ளது. இது அஷ்டவக்கிரனுடைய குறையை நீக்கிய தலம்.
அக்குறையை நீக்கிய அஷ்டலிங்கங்களுக்கு அபிஷேக ஆராதனை செய்து, வஸ்த்திரம் சாற்றி வழிபடவேண்டும். இக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீகைலாசனாதருக்கும்,
ஸ்ரீஅம்பாளுக்கும் அர்ச்சனை செய்து வழிபடல் வேண்டும். இறைவன் திருவருளால் குறை நீங்கப்பெறும். குழந்தை பிறந்தவுடன் இக்குறை இருப்பது தெரிந்தாலும்,
இத்தலத்தில் வழிபாடு செய்து நிவாரணம் பெறலாம். ஆனால் காலம் கடந்த நிலையில், எலும்பு முழுவளர்ச்சி அடைந்து முற்றிப்போன பின்பு, இப்பரிகார வழிபாடு பயனில்லாமல் போகும்.
இதே போல், இக்குறையை போக்கும் வைஷ்ணவ ஸ்தலமும் உள்ளது.
தலத்தின் பெயர் ஊனமாஞ்சேரி.
ஊனம் மாய்தல் சேரி என்பது காலப்போக்கில் ஊனமாஞ்சேரி என்று மாறிவிட்டது.
சென்னைக்கு அருகே வண்டலூர்……திருப்போரூர் சாலையில் 5 கி.மி தொலைவில் கொளப்பாக்கம் அருகில் ஊனமாஞ்சேரி அமைந்துள்ளது.
எலும்புக்குறைபாடை தீர்க்கும் mதெய்வமாக இங்கு ஸ்ரீராகவப்பெருமாள் விளங்குகிறார்.
நம் முன்னோர்கள் நமக்கு வகுத்துதந்த சாஸ்த்திர சம்பிரதாயங்கள்.










