சித்திரை மாத ராசிபலன் (14.4.2019 முதல் 14.5.2019 வரை)
மேஷ ராசி அன்பர்களே.
ராகு உங்கள் ராசிக்கு 3ல் அமர்ந்தும், குரு 9ல் அமர்ந்தும் தொடர்ந்து நன்மை தருவார்கள். இந்த மாதத்தை பொறுத்த வரை சுக்கிரன் ஏப்.16 வரையும், செவ்வாய் மே7ல் இருந்தும் நற்பலன் கொடுப்பர்.
புதன் ஏப்.26லும், மே 12லும் இடம் மாறுகிறார். இருப்பினும் அவரால் நன்மை தர முடியாது. தற்போது புதன் உங்கள் ராசிக்கு 12ல் இருப்பது சுமாரான பலன் தரும். ஏப்.26க்கு பிறகு அவரால் குடும்பத்தில் பிரச்னை வரலாம்.
உறவினர் வகையில் கருத்துவேறுபாடு ஏற்படலாம். பணஇழப்பு ஏற்படலாம். பணியாளர்கள் இடமாற்றத்தைச் சந்திக்கலாம்.
குருவால் மனமகிழ்ச்சி அதிகரிக்கும். மனதில் உற்சாகம் பிறக்கும். நினைத்ததை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும்.
உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். மே4,5ல் பெண்களால் பணம் கிடைக்கும். விருந்து, விழா எனச் சென்று வருவீர்கள்.
ஏப். 14,15,16ல் சுக்கிரனால் பண வரவு இருக்கும். மே 12க்கு பிறகு புதனால் அவப்பெயர் வரலாம். உங்கள் செல்வாக்குக்கு பாதிப்பு ஏற்படலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். சிலருக்கு வீண் மனக்கவலை வரலாம்.
மே7 முதல் செவ்வாயால் மனதில் பக்தி எண்ணம் மேம்படும். புதிய வீடு கட்ட, புதிய மனை, வாகனம் வாங்க யோகம் கை கூடி வரும்.
பணியாளர்களைப் பொறுத்தவரையில், தனியார்துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு அலைச்சல், வேலை பளு இருக்கும். உங்கள் உழைப்புக்கு தகுந்த மதிப்பு, செல்வாக்கு இல்லாமல் போகலாம்.
வேலையில் பொறுமையுடன் விட்டுக் கொடுத்து போகவும். அரசு ஊழியர்கள் பணியில் கவனமுடன் இருக்கவும். இருப்பினும் குருபகவானால் உயர்வு காணலாம். ஏப்.26,27,28 ஆகியவை சிறப்பான நாட்களாக இருக்கும்.
வியாபாரிகளுக்கு ராகு,குருவால் நல்ல பொருளாதார வளம், தொழில் விருத்தி உண்டாகும். மே1,2,3,6,7ல் சிறு தடைகள் வரலாம். பணவிரயம் ஏற்படலாம். ஆனால் ஏப்.17,18ல் எதிர்பாராத வகையில் பணவரவு கிடைக்கும்.
பகைவர்களை எதிர்த்து வெற்றி கொள்ளும் ஆற்றல் பிறக்கும். புதனால் கூட்டாளிகளின் வகையில் இருந்த தொல்லை, முயற்சி தடை, இடர்பாடுகள் ஏப்.26க்கு பிறகு மறையும். செவ்வாயால் ஏற்பட்ட அரசு வகையில் அனுகூலமற்ற போக்கு மே6க்கு பிறகு மறையும்.
கலைஞர்களுக்கு சுக்கிரனால் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஏப்.16க்கு பிறகு காரிய தடை, பொருள் நஷ்டம் ஏற்படலாம். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் மே7 முதல் நற்பெயர் காண்பர்.
பொருளாதர வளம் பெறுவர். ஏப்.15,16 மே12,13,14ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.
மாணவர்கள் புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. இருப்பினும் குருவால் பின்னடைவு ற்படாது.பெரும்பாலானோருக்கு தேர்வு முடிவுகள் சாதகமாக இருக்கும்.
மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.விவசாயிகளுக்கு சோளம், மஞ்சள், பழ வகைகள் நல்ல மகசூலைத் தரும். மே6 க்கு பிறகு புதிய சொத்து வாங்கலாம். பெண்களுக்கு குடும்ப வாழ்வு சிறக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.
மே8,9ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். வேலைக்கு செல்லும் பெண்கள் பொறுமையுடன் விட்டுக் கொடுத்து போகவும். செவ்வாயால் மே 7க்கு பிறகு குடும்பத்தோடு புனித தலங்களுக்கு செல்ல வாய்ப்புண்டு.
* நல்ல நாள்: ஏப். 17,18,19,20,21,26,27,28,29,30, மே 4,5,8,9
* கவன நாள்: ஏப்.22,23 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 3,5
* நிறம்:மஞ்சள், நீலம்
* பரிகாரம்:
* செவ்வாயன்று துர்கைக்கு நெய் தீபம்
* புதனன்று ஏழைக்கு பாசிப்பயறு தானம்
* ஞாயிறன்று நீராடியதும் சூரிய தரிசனம்
ரிஷப ராசி
இந்த மாதம் 10-ம் இடத்தில் இருக்கும் சுக்கிரன் ஏப்.16ல் ராசிக்கு 11ம் இடத்திற்கு வந்து நன்மை தருவார். இதனால் பணப்புழக்கத்திற்கு குறைவிருக்காது. சகோதரிகள் ஆதரவுடன் செயல்படுவர். அவர்களால் பொன்,பொருள் சேரும். சொந்தபந்தங்கள் வருகை இருக்கும்.
புதன் ஏப்.26 வரை 11ம் இடத்தில் இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொருளாதார வளம் மேம்படும். அதன் பின் அவரால் முயற்சியில் தடைகள் ஏற்படலாம்.
மற்ற கிரகங்கள் அனைத்தும் சாதகமற்ற நிலையில் இடத்தில் இருப்பதால் எந்த செயலையும் சற்று முயற்சி எடுத்தே நிறைவேற்ற வேண்டியதிருக்கும். இருப்பினும் குருவின் 5ம் இடத்துப்பார்வை சிறப்பாக உள்ளதால் மனதில் துணிச்சல் பிறக்கும்.
பண வரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர் சதி எடுபடாது. அவர்கள் சரணடையும் நிலை ஏற்படும்.
குடும்பத்தில் குதூகலம் நிலவும். உறவினர் வகையில் அனுகூலம் இருக்கும் மே1,2,3ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே நேரம் ஏப்.15,16 மே 12,13,14ல் அவர்கள் வகையில் இருந்து சற்று ஒதுங்கி இருக்கவும்.
ஏப்.22,23ல் பெண்களால் கூடுதல் நன்மை காணலாம். பொன், பொருள் சேரும். மே 6க்கு பிறகு சிலரது வீட்டில் பொருள் திருட்டு போகலாம். மே12க்கு பிறகு அண்டைவீட்டாருடன் கருத்துவேறுபாடு வரலாம். பொருள் இழப்பு ஏற்படலாம்.
மாத முற்பகுதியில் தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு சிறப்பான வளர்ச்சி உண்டாகும். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர். விண்ணப்பித்த கோரிக்கைகள் நிறைவேறும். ஏப்.26 க்கு பிறகு விடாமுயற்சி எடுத்தால் மட்டுமே கோரிக்கைகள் நிறைவேறும்.
சிலர் திடீர் இடமாற்றத்தை சந்திக்க வாய்ப்புண்டு அல்லது பணி விஷயமாக வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். எது எப்படியானாலும் ஏப்ரல்29,30ல் சிறப்பான அனுகூலம் உண்டாகும். பணியிடத்தில் அதிகாரம் கொடிகட்டி பறக்கும்.
மே 6க்கு பிறகு நெருப்பு, மின்சாரம் தொடர்பான வேலையில் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். அரசுப்பணியாளர்கள் வேலையில் கூடுதல் அக்கறையுடன் இருக்கவும்.
வியாபாரிகளுக்கு புதனால் லாபம் இருக்கும். வாடிக்கையாளர் மத்தியில் அனுகூலமான போக்கு காணப்படும். சூரியனால் பொருள் விரயம் ஏற்படும். ஏப்.16க்கு பிறகு பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் பெறும்.
ஏப்.26க்கு பிறகு புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் வீண்செலவுகள் உருவாகலாம். செவ்வாயால் எதிரிகள் வகையில் சற்று கவனம் தேவை. மே6க்கு பிறகு பொருள் களவு ஏற்பட வாய்ப்புண்டு. பகைவர் வகையில் தொல்லை வரலாம்.
அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். மே1,2,3,6,7ல் சிறு தடைகள் வரலாம். பண விரயம் ஆகலாம். ஏப்ரல் 19,20,21ல் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். சலுகை கிடைக்கும்.
கலைஞர்களுக்கு எதிரிகள் வகையில் இருந்த தொல்லைகள், அவப்பெயர், போட்டிகள் முதலியன ஏப்.16க்கு பிறகு மறையும். அதன் பிறகு அவர்கள் முன்னேற்றமான பலனைக் காண்பர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் உழைப்புக்கேற்ற பலனைக் காணலாம்.
மாணவர்கள் ஆசிரியர்களின் ஆலோசனையை பின்பற்றி கல்வியில் சிறப்படைவர். போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர். ஏப்.26க்குப் பின் புதன் சாதகமற்ற இடத்திற்கு செல்வதால் கூடுதல் அக்கறையுடன் படிக்க வேண்டியதிருக்கும் .
விவசாயிகளுக்கு எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும். பாசிபயறு, பழவகைகள், காய்கறி வகைகள் போன்றவை மூலம் அதிக வருமானத்தைக் காணலாம். கால்நடை வகையில் நல்ல ஆதாயம் பெறலாம். பெண்கள் குடும்பத்தில் முக்கிய அம்சமாக திகழ்வர்.
வேலைக்கு செல்லும் பெண்கள் உயர்ந்த நிலையை அடைவர். ஏப்.26க்கு பிறகு கணவன், மனைவி இடையே பிரச்னை வந்து மறையும். ஏப்.14, மே10,11ல் புத்தாடை, நகைகள் வாங்கலாம்.
* நல்ல நாள்: ஏப்.14,19,20,21,22,23,29,30, மே1,2,3,6,7,10,11
* கவன நாள்: ஏப்.24,25 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 6,8
* நிறம்: வெள்ளை, பச்சை
* பரிகாரம்:
* சனிக்கிழமையில் நவக்கிரக வழிபாடு
* செவ்வாயன்று முருகனுக்கு நெய்தீபம்
* வியாழனன்று குருபகவான் தரிசனம்
மிதுன ராசி
ராசிக்கு 7ம் இடத்தில் இருக்கும் குருவும், 11-ல் சூரியனும் மாதம் முழுவதும் நற்பலன் கொடுப்பர். புதன் ஏப்.26ல் இடம் மாறினாலும் சதகமான பலன் கொடுப்பார். பெண்களின் ஆதரவு இருக்கும். பெண்களால் பொன், பொருள் சேரும்.
சுக்கிரன் ஏப்.16 வரை 9-ம் இடத்தில் இருப்பதால் பொருளாதார வளம் இருக்கும். சூரியனால் சுபயோகம் உண்டாகும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். அரசு வகையில் அனுகூலம் உண்டாகும்.
குடும்பத்தில் தேவை அனைத்தும் பூர்த்தியாகும். மனதில் குதூகலம் அதிகரிக்கும். கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும். குருவால் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். புதுமணத்தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
இதனால் வாழ்வில் வளம் காணலாம். செல்வாக்கு மேம்படும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். எண்ணற்ற ஆடம்பர வசதிகள் கிடைக்கும். சகோதரிகளால் மேன்மை உண்டாகும். குறிப்பாக ஏப்.24,25ல் அவர்கள் உதவிகரமாக இருப்பர்.
விருந்து, விழா என சென்று வருவீர்கள். மே4,5ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே நேரம் ஏப்.17,18ல் உறவினர் வகையில் மனக்கசப்பு வர வாய்ப்புண்டு. எனவே சற்று விலகி இருக்கவும்.
தனியார் துறையில் பணிபுரிபவர்கள் முன்னேற்றம் காணலாம். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. மேலதிகாரிகளின் கருணை பார்வை கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக செயல்படுவர்.
அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி எளிதில் கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேறும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இடமாற்ற பீதி மறையும்.
குரு சாதகமாக இருப்பதால் வேலைப்பளு இருந்தாலும் அதற்கான பலன்கள் கிடைக்காமல் போகாது. மே1,2,3 சிறப்பான நாட்களாக அமையும். பணியிடத்தில் அதிகாரம் கொடிகட்டி பறக்கும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம்.
வியாபாரம் செய்பவர்கள் நல்ல வளர்ச்சியைக் காணலாம். புதிய தொழில் அனுகூலத்தை கொடுக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். சுய தொழில் முன்னேற்ற பாதையில் இருக்கும்.
குருபகவான் பொருளாதார வளத்தை அதிகரிக்கச் செய்வார். சனிபகவானால் அலைச்சல் அதிகரிக்கும் வெளியூர் வாசம் நிகழும்.சிலர் தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்குவர். ஏப்ரல் 14 மே6,7,10,11ல் சந்திரனால் தடைகள் வரலாம்.
ஏப்.22,23ல் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். மே3க்கு பிறகு. பொருளாதார வளம் மேம்படும். லாபம் அதிகரிக்கும். எடுத்த முயற்சி வெற்றி அடையும்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். வருமானம் படிப்படியாக பெருகும். நடன கலைஞர்கள் சிறப்பான பலன் பெறுவர். புகழ், பாராட்டு கிடைக்கும். ஏப்.16க்கு பிறகு எதிரி தொல்லைகள் அதிகரிக்கும். மறைமுகப்போட்டிகள் அதிகரிக்கும். அவப்பெயர் உருவாகலாம்.
அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் பிரதிபலன் எதிர்பாராமல் பாடுபட வேண்டியிருக்கும். மாணவர்கள் புதன் சாதகமான இடத்தில் உள்ளதால் பிற்போக்கான நிலையில் இருந்து விடுபடுவர். குருவால் கல்வி வளர்ச்சி உண்டாகும்.
ஆசிரியர்களின் ஆலோசனை வளர்ச்சிக்கு துணைநிற்கும். தேர்வில் சிறப்பான முடிவு கிடைக்கும். மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். சிலர் வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு கிடைக்கப் பெறுவர்.
விவசாயிகள் போதிய மகசூல் கிடைக்கப் பெறுவர். அதிக முதலீடு செய்ய வேண்டாம் அதிக உழைப்பை சிந்த வேண்டியதிருக்கும். கால்நடை வளர்ப்பின் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும்.
பெண்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வு நடத்துவர். தடைபட்ட திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். கணவன் மற்றும் குடும்பத்தாரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்கலாம். அக்கம்பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர்.
வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். சுய தொழில் புரியும் பெண்களுக்கு வங்கிக்கடன் எளிதாக கிடைக்கும்.
* நல்ல நாள்: ஏப்.15,16,22,23,24,25,மே1,2,3,4,5,8,9,12,13,14
* கவன நாள்: ஏப். 26,27,28 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்:1,7,9
* நிறம்:சிவப்பு, மஞ்சள்
* பரிகாரம்:
* வெள்ளியன்று ராகுவுக்கு அர்ச்சனை
* ஞாயிறன்று பைரவருக்கு நெய்தீபம்
* சனிக்கிழமையில் சனீஸ்வரர் வழிபாடு
கடக ராசி
உங்களுக்கு இந்த மாதம் வளர்முகமான காலம். சூரியன் சாதகமான இடத்திற்கு வந்துள்ளார். ஏப்.26க்கு பிறகு புதனும், மே6 வரை செவ்வாயும் நன்மைகளை தருவார்.
உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் இணைந்து இருக்கும் கேது மற்றும் சனிபகவான் மாதம் முழுவதும் நற்பலனை தருவார்கள். செவ்வாய் 11-ம் இடத்தில் இருப்பது சிறப்பானது.
காரிய அனுகூலம் ஏற்படும். ஏப்ரல் 26 வரை புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் மனதில் வேதனை வரலாம். சிலர் பொல்லாப்பை சந்திக்கலாம்.
பொறுமையுடன் இருக்கவும், விட்டுக்கொடுத்து போகவும். சிலர் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகலாம். எனவே யாரிடமும் பார்த்து எச்சரிக்கையுடன் பழகவும்.அதன் பிறகு பெண்களின் ஆதரவு இருக்கும். பெண்களால் நன்மை கிடைக்கும். பொன், பொருள் சேரும்.
குடும்பத்தில் வசதிகள் பெருகும். தடைபட்ட திருமணப்பேச்சு நடக்கும். சுபநிகழ்ச்சிகள் கைகூடும். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். நினைத்தது நிறைவேறும். பண வரவு அதிகரிக்கும். கேதுவால் பொருளாதார வளம் பெருகும்.
அபார ஆற்றல் பிறக்கும். நகை, ஆபரணங்கள் வாங்கலாம். புதிய வீடு, வாகனம் வாங்க யோகமுண்டு. சகோதரர்கள் ஆதரவுடன் இருப்பர். குறிப்பாக ஏப்.14 மே10,11ல் அவர்களால் நன்மை கிடைக்கும்.
ஏப்ரல் 19,20,21ல் உறவினர் வகையில் மனக்கசப்பு வர வாய்ப்பு உண்டு. அப்போது அவர்களிடம் நெருக்கம் வேண்டாம். ஆனால் மே6,7ல் அவர்கள் வருகையால் நன்மை கிடைக்கும்.
பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றத்தைக் காணலாம். புதிய பதவியும் தேடி வரும்.அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
அவர்கள் தங்கள் கோரிக்கைகளை மே6க்குள் கேட்டு பெற்று கொள்ளவும். ஏப்.26க்கு பிறகு தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு வேலைப்பளு குறையும். சக பெண் ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர். மே4,5ம் தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும்.
வியாபாரிகள் நல்ல வளர்ச்சியை காணலாம். தொழிலில் ஆற்றல் மேம்படும். லாபத்திற்கு குறைவிருக்காது. புதிய தொழில் அனுகூலத்தைக் கொடுக்கும். தரம் தாழ்ந்த பெண்ணின் சேர்க்கையால் அவப்பெயரையும் பணத்தை விரயமாக்கியவர்கள் அவர்கள் பிடியில் இருந்து ஏப்.26க்கு பிறகு விடுபடுவர்.
அதன்பின் தொழிலில் லாபம் அதிகரிக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும். கூட்டுத்தொழில் நல்ல வளர்ச்சியைத் தரும்.
நண்பர்கள் தக்க சமயத்தில் உதவிக்கரம் நீட்டுவர். பகைவர்களின் சதியை முறியடிக்கும் வலிமை பெறுவீர்கள். ஏப்.26 வரை உழைப்புக்கேற்ற வளர்ச்சி தானாகவே வரும். ஏப்.15,16 மே8,9,12,13ல் சந்திரனால் தடைகள் வரலாம். ஆனால் ஏப்.22,23ல் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும்.
கலைஞர்கள் முன்னேற்றம் காண்பர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசியல்வாதிகள், சமூக சேவகர்கள் நற்பெயர் எடுப்பர். சிலருக்கு புதிய பதவி கிடைக்கும். மே1,2,3ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.
மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். ஏப்.26க்கு பிறகு முன்னேற்றம் காண்பர். தீய சகவாசத்திற்கு விடைகொடுப்பர். தேர்வில் நல்ல மதிப்பெண் கிடைக்கும். போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர்.
விவசாயிகள் கரும்பு, எள், பழவகைகள், பாசிப்பயறு, கிழங்கு வகைகளில் கூடுதல் வருமானம் கிடைக்கும். கால்நடை செல்வம் பெருகும். புதிய சொத்து மே 6க்குள் வாங்கலாம் அதன் பிறகு வழக்கு, விவகாரங்களில் சுமாரான முடிவு கிடைக்கும். புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம்.
பெண்கள் குடும்பத்தாரிடம் நன்மதிப்பை பெறுவர். ஏப்.26க்கு பிறகு சொந்தபந்தங்களின் வருகை இருக்கும். கணவரின் அரவணைப்பு கிடைக்கும். சிலர் குழந்தை பாக்கியம் பெறுவர். அக்கம்பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர்.
வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். சிலருக்கு புதிய பதவி தேடி வரும். ஏப்.17,18ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். ஏப்.26,27,28ல் விருந்து, விழா என சென்று வருவீர்கள். சிறப்பான நாட்களாக இருக்கும்.
சகோதர வழியில் உதவி கிடைக்கும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். செவ்வாயால் மே6க்கு பின் பணவிரயம் ஏற்படலாம்.
* நல்ல நாள்: ஏப்.16,17,18,19,20,23,24,27,28 மே4,5,6,7,8,14
* கவன நாள்: ஏப்.29,30 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 3,5
* நிறம்: வெள்ளை, பச்சை
* பரிகாரம்:
* சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகர் வழிபாடு
* வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு வில்வம்
* பிரதோஷத்தன்று நந்தீஸ்வரருக்கு நெய் தீபம்
சிம்ம ராசி
குடும்பத்தில் வசதிகள் பெருகும். மகிழ்ச்சி நிலைக்கும். ஏப்.15,16 மே12,13,14ல் பெண்கள் உதவிகரமாக இருப்பர். விருந்து, விழா என சென்று வருவீர்கள்.
ஏப்.26 முதல் மே12 வரை கணவன், மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை இருக்காது. சிறு பிரச்னைகள் உருவாகி மறையும்.
பணியாளர்களுக்கு சக பெண் ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர். தனியார் துறையில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பர். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை ஏப்.26க்குள் கேட்டு பெற்று கொள்ளவும். அதன் பிறகு வேலைப்பளுவும், அலைச்சலும் அதிகமாக இருக்கும்.
வேலையில் பொறுமையும், நிதானமும் தேவை. இருப்பினும் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றுக்கு தடை இருக்காது. மே6க்கு பிறகு போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர். அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். மே6,7 சிறப்பான நாட்களாக அமையும்.
கலைஞர்களுக்கு பெண்கள் வகையில் இருந்த இடர்பாடுகள் ஏப்.16க்கு பிறகு மறையும். அதன் பின் அதே பெண்கள் தவறை உணர்ந்து உங்களுக்கு உதவிகரமாக இருப்பர்.
புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பணவிஷயத்தில் குறைவிருக்காது. அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சுமாரான பலன் பெறுவர். மே 6க்கு பிறகு எதிர்பார்த்த பதவி கிடைக்கும்.
மாணவர்கள் சிறப்பான நிலையை அடைவர். போட்டி, பந்தயங்களில் பங்கேற்று வெற்றி காண்பர். ஆசிரியர்கள், சான்றோர்களின் ஆதரவு கிடைக்கும். ஏப்.26 முதல் மே12 வரை நண்பர்களின் விஷயத்தில் விழிப்புடன் இருக்கவும்.
மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். சிலர் வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பு கிடைக்க பெறுவர்.
விவசாயிகள் எதிர்பார்த்த மகசூலை பெறலாம். நெல், மஞ்சள், கேழ்வரகு, பழ வகைகள், காய்கறி வகைகள் போன்றவை மூலம் கூடுதல் வருமானத்தை காணலாம். கால்நடை செல்வம் பெருகும். புதிய சொத்து வாங்க நினைப்பவர்களின் எண்ணம் மே6 க்கு பிறகு கைகூடும்.
பெண்கள் சிறப்பான நிலையில் இருப்பர். பிள்ளைகளால் பெருமை சேரும். குருவால் சுபநிகழ்ச்சிகள் கைகூடும். வேலைக்கு செல்லும் பெண்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும் முக்கிய பொறுப்புகளை யாரிடமும் ஒப்படைக்க வேண்டாம்.
ஏப்.19,20,21ல் புத்தாடை, நகைகள் வாங்கலாம். ஏப்.29,30 சிறப்பான நாட்களாக அமையும். மே6க்கு பிறகு செவ்வாயால் பதவி தேடி வரும். புதிய வீடு, மனை வாகனம் வாங்க யோகம் கூடி வரும்.
* நல்ல நாள்: ஏப்.15,16,19,20,21,26,27,28,29,30, மே 6,7,8,9,12,13,14
* கவன நாள்: மே 1,2,3 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்- 2,7
* நிறம்:மஞ்சள், நீலம்
* பரிகாரம்:
* ஏகாதசியன்று பெருமாளுக்கு துளசிமாலை
* சனிக்கிழமையில் அனுமனுக்கு அர்ச்சனை
* தினமும் காலையில் நீராடி சூரிய தரிசனம்
கன்னி ராசி
உங்களுக்கு இந்த மாதம் புதன் ஏப். 26 முதல் மே12 வரை நற்பலன் கொடுப்பார். மற்ற கிரகங்கள் அனைத்தும் சாதகமற்ற நிலையில் இடத்தில் இருப்பதால் எந்த ஒரு செயலையும் முயற்சி எடுத்தே நிறைவேற்ற வேண்டியதிருக்கும். ஆனால் உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்காமல் போகாது.
சனிபகவானின் 3-ம் இடத்துப்பார்வை சிறப்பாக அமைந்து உள்ளதால் அவர் உங்களுக்கு நன்மையை வாரி வழங்குவார். குறிப்பாக பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். ஆற்றல் மேம்படும். சந்திரனும் பெரும்பாலான நாட்கள் நன்மை தருவார்.
குடும்பத்தில் சகோதரர் வழியில் ஆதரவு கிடைக்கும். ஏப்.26க்கு பிறகு மனதில் இருந்த வேதனை, கணவன், மனைவி இடையே இருந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். அதன் பின் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தம்பதியிடையே அன்பு பெருகும்.
முயற்சியில் வெற்றி கிடைக்கும். புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பிள்ளைகளால் பெருமை சேரும். ஏப்.17,18 ல் பெண்களால் நன்மை கிடைக்கப் பெறுவீர்கள். விருந்து, விழா என சென்று வருவீர்கள். ஏப்.14,மே10,11ல் உறவினர் வருகையால் நன்மை கிடைக்கும். அதே நேரம் ஏப்.24,25ல் உறவினருடன் மனக்கசப்பு வர வாய்ப்புண்டு.
தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் ஏப்.26 வரை அதிக பளுவை சுமக்க வேண்டியதிருக்கும். புதனால் நல்ல முன்னேற்றம் காணலாம். அதிகாரிகள் அனுசரணையாக இருப்பர். பதவி உயர்வும் சிலருக்கு கிடைக்கும். கோரிக்கைகள் நிறைவேறும்.
வேலை விஷயமாக மனைவியை பிரிந்தவர்கள் ஒன்று சேர வாய்ப்புண்டு. ஆனால் அரசு பணியாளர்களுக்கு வேலையில் அதிக அக்கறை தேவை. கோரிக்ககைள் நிறைவேற விடாமுயற்சி தேவைப்படும். மே8,9ல் உங்கள் அதிகாரம் கொடிகட்டி பறக்கும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம்.
வியாபாரத்தில் எதிர்கால வளர்ச்சியை மனதில் கொண்டு உழையுங்கள். ஆனாலும் தற்போது போதிய வருமானம் கிடைக்கும். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். வெளியூர் பயணம் ஏற்படலாம்.
ஏப்.15,16,19,20,21, மே12,13,14ல் சந்திரனால் சிறு தடைகள் வரலாம். ஏப்.29,30ல் எதிர்பாராத வகையில் பணவரவு கிடைக்கும். எதிரிகளின் இடையூறை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். ஏப்.26க்கு பிறகு முயற்சியில் இருந்த தடைகள் மறையும்.
மே12க்கு பிறகு சிலர் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகலாம். எனவே யாரிடமும் பார்த்து எச்சரிக்கையுடன் பழகவும். ராகுவால் சிலருக்கு பெண்கள் வகையில் இடையூறுகள் வரலாம்.
கலைஞர்களுக்கு முயற்சியில் இருந்த தடையும், மனதில் ஏற்பட்ட சோர்வும் ஏப்.16க்கு பிறகு மறையும். ஆனால் அதன் பிறகு பெண்கள் விஷயத்தில் சற்று ஒதுங்கி இருக்கவும்.
தொழில் விஷயமாக வெளியூர் செல்ல நேரிடும். அரசியல்வாதிகளுக்கு பணப்புழக்கத்திற்கு குறைவிருக்காது.
மாணவர்கள் ஏப்.26க்கு பிறகு சிறப்பான நிலையை அடைவர். புதனால் நல்ல மதிப்பெண்கள், போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர். மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும்.
விவசாயிகள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். ஏப்.26 முதல் மே12 வரை கால்நடை வளர்ப்பின் மூலம் ஆதாயம் பெருகும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப் போகும்.
பெண்கள் குருபகவானால் உறவினர் வகையில் வீண் பகையை சந்திப்பர். ஏப்.26க்கு பிறகு உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்களின் மேன்மை அறிந்து சரணடையும் நிலை வரும்.
சுபநிகழ்ச்சிகள் கைகூடும். குழந்தைகளால் பெருமை கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர் ஏப்.22,23ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். மே1,2,3 சிறப்பான நாட்களாக அமையும்.
கடந்த மாதம் இருந்த அலைச்சல், அவப்பெயர், வயிறு தொடர்பான உபாதைகள் மறையும். செவ்வாயால் மே6க்கு பிறகு பயணத்தின் போது கவனம் தேவை.
* நல்ல நாள்: ஏப்.14,17,18,22,23,29,30,மே 1,2,3,8,9,10,11
* கவன நாள்: மே 4,5 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்- 4,6
* நிறம்: பச்சை
* பரிகாரம்:
* செவ்வாயன்று முருகனுக்கு நெய்தீபம்
* வெள்ளியன்று லட்சுமிதாயார் தரிசனம்
* பிரதோஷத்தன்று நந்தீஸ்வரர் வழிபாடு
துலாம் ராசி
இந்த மாதம் 3-ம் இடத்தில் இணைந்து இருக்கும் சனி, கேது தொடர்ந்து நற்பலன் கொடுப்பர். சுக்கிரன் ஏப்.16 வரையும், புதன் ஏப்.26 வரையும்,மே 25க்கு பிறகும் சாதகமான இடத்தில் இருக்கிறார்கள்.
குருவின் அனைத்து பார்வைகளும் சிறப்பாக அமைந்து உள்ளதால் எந்த பிரச்னையையும் முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம்.
கேதுவால் பக்தி உயர்வு மேம்படும். சனிபகவானின் பலத்தால் பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.எடுத்த முயற்சி வெற்றி அடையும்.
சூரியன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் அவ்வப்போது சிற்சில பிரச்னை தலைதூக்கலாம். மதிப்பு, மரியாதை சுமாராகவே இருக்கும். வீண் விவாதத்தை தவிர்க்கவும்.
கடவுளின் கருணை உங்களுக்கு கிடைக்கும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்கலாம். புதனால் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பெருமையும் கிடைக்கும். மாதத் தொடக்கத்தில் சுக்கிரனால் பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும்.
நண்பர்கள் உதவிகரமாக செயல்படுவர். ஏப்.19,20,21ல் பெண்களால் நன்மை பெருகும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். ஏப்.15,16,மே12,13,14ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும்.
அதே நேரம் ஏப்.26,27,28ல் உறவினர் வகையில் கருத்துவேறுபாடு வரலாம். எனவே அப்போது சற்று விலகி இருக்கவும். ஏப்.26க்கு பிறகு குடும்பத்தில் குழப்பம் நிலவும். மனைவி வகையில் கருத்துவேறுபாடு ஏற்படலாம்.
பொறுமையுடன் விட்டுக் கொடுத்து போகவும். மே12க்கு பிறகு புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். கணவன்,மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை இருக்கும்.
பணியாளர்கள் நல்ல வளர்ச்சியைக் காண்பர். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். தனியார் துறையில் வேலைபார்ப்பவர்கள் தங்களின் கோரிக்கைகளை ஏப்ரல் 26க்குள் கேட்டு பெறவும்.
அதன் பிறகு வேலைப்பளு அதிகரித்தாலும் அதற்குரிய வருமானம் கிடைக்கும். அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றத்தைக் காணலாம். புதிய பதவியும் தேடி வரும். ஏப்.14,மே 10,11 சிறப்பான நாட்களாக அமையும்.
தொழில், வியாபாரத்தில் சனி பகவான் தொழில் விருத்தியை தந்து கொண்டிருக்கிறார். லாபம் அதிகரிக்கும். வெளியூர் பயணம் ஏற்படும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். ஆன்மிக சம்பந்தப்பட்ட மற்றும் பூஜை பொருட்கள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபம் காண்பர்.
ஏப்ரல் 17,18,22,23 ல் சந்திரனால் சிறு தடைகள் வரலாம். மே1,2,3ல் எதிர்பாராத வகையில் வருமானம் வரும். ராகுவால் எதிரிகளின் இடையூறு தலைதூக்கலாம். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகலாம்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். ஏப்.16க்கு பிறகு முயற்சியில் தடையும், மனதில் சோர்வும் ஏற்படும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் எதிர்பார்த்த பதவி கிடைக்கப் பெறலாம். ஏப்.29,30ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.
மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண் பெறுவர். போட்டிகளில் பங்கேற்று வெற்றி காணலாம். ஏப்.26 முதல் மே12 வரை மெத்தனமாக இருக்க வேண்டாம். சிரத்தை எடுத்து படிப்பது நல்லது.
விவசாயிகளுக்கு மானாவாரி பயிர்களின் மூலம் அதிக மகசூல் கிடைக்கும். கரும்பு, எள், கொள்ளு போன்ற பயிர்களில் நல்ல வருமானம் கிடைக்கும். புதிய சொத்து வாங்க யோகமுண்டு. அதன் பிறகு வழக்கு, விவகாரங்கள் சுமாரான முடிவு கிடைக்கும்.
பெண்கள் மகிழ்ச்சிகரமாக காணப்படுவர். உங்களால் குடும்பம் பெருமை பெறும். தோழிகள் உதவிகரமாக இருப்பர். தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு செல்வர்.
வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனைப் பெறுவர். ஏப்.26- முதல் மே12 வரை சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டியதிருக்கும். மே4,5 சிறப்பான நாட்களாக அமையும். ஏப்.24,25ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம்.
* நல்ல நாள்: ஏப்.14,15,16,19,20,21,24,25 மே 1,2,3,4,5,10,11,12,13,14
* கவன நாள்: மே 6,7 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்-4,7
* நிறம்: சிவப்பு, கறுப்பு
* பரிகாரம்:
* தினமும் காலையில் சூரிய வழிபாடு
* செவ்வாயன்று முருகனுக்கு நெய்தீபம்
* ஏகாதசியன்று பெருமாளுக்கு அர்ச்சனை
விருச்சிக ராசி
இந்த மாதம் சூரியன் சாதகமான இடத்துக்கு வருவதால் எதிர்பார்ப்பு விரைவில் நிறைவேறும். புதன் ஏப்.26 முதல் மே12 வரை நற்பலனை கொடுப்பார். 2-ம் இடத்தில் இருக்கும் குரு, 4-ம் இடத்தில் இருக்கும் சுக்கிரனால் மாதம் முழுவதும் சுகமான வாழ்வு அமையும்.
மனதில் துணிச்சல் பிறக்கும். பண வரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கி மகிழலாம். சூரியனின் பலத்தால் பகைவரை வெற்றி கொள்வீர்கள். பொருளாதார வளம் கூடும். சமூக மதிப்பு சிறப்பாக இருக்கும்.
குடும்பத்தில் உறவினர்களிடம் சுமுக நிலை ஏற்படும். புதிய உறவினரால் உதவி கிடைக்கும். க்கம்பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். ஏப்.16க்கு பிறகு பெரியோர் ஆலோசனை வளர்ச்சிக்கு வழிவகுக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். லாபம் அதிகரிக்கும்.
பக்தி எண்ணம் மேம்படும். ஏப்.26 வரை புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் சில பிரச்னை வரலாம். கணவன், மனைவி இடையே கருத்துவேறுபாடு உருவாக வாய்ப்புண்டு. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போவது நல்லது. அதன் பிறகு முயற்சியில் வெற்றி கிடைக்கும்.
திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடைபெறலாம். ஏப்.17,18ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே நேரம் ஏப்.29,30ல் உறவினர் வகையில் கருத்துவேறுபாடு ஏற்படலாம் என்பதால் ஒதுங்கி இருக்கவும்.
ஏப்.22,23ல் பெண்கள் உதவிகரமாக இருப்பர். விருந்து, விழா என சென்று வருவீர்கள்.
பணியாளர்களுக்கு சூரியனால் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும் இருப்பினும் புதன் ஏப்.26 வரை சாதகமற்ற இடத்தில் இருப்பதால் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும்.
அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். முக்கிய பொறுப்புகளை மற்றவரிடம் ஒப்படைக்க வேண்டாம். அதன்பின் கோரிக்கைகள் நிறைவேறும். வேலை விஷயமாக குடும்பத்தை பிரிந்தவர்கள் ஒன்று சேர வாய்ப்புண்டு.
ஏப்.15,16, மே12,13,14ல் சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம். நெருப்பு, மின்சாரம் தொடர்பான வேலையில் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
வியாபாரிகளுக்கு தொழிலில் லாபத்துக்கு குறை இருக்காது. தொழிலில் வரும் தடங்கல்களை முறியடித்து முன்னேற்றம் காண்பீர்கள். ஆனால் அதற்காக எதிலும் புதிதாக முதலீடு செய்ய வேண்டாம்.
உங்கள் அறிவை பயன்படுத்தி முன்னேற்றம் காணலாம். அரசிடம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பது அரிது. அரசு வகையில் சிலர் பிரச்னைகளை சந்திக்க நேரிடலாம். எனவே வரவு, செலவு கணக்குகளை சரியாக வைத்துக் கொள்ளவும்.
எதிரிகளால் இருந்த முட்டுக்கட்டைகள் விலகும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் சென்றவர்கள் ஏப்.26க்கு பிறகு வீடு திரும்புவர். ஏப்.19,20,21,24,25ல் சந்திரனால் தடைகள் வரலாம். மே 4,5ல் எதிர்பாராத வகையில் பணவரவு கிடைக்கும்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். பணவிஷயத்தில் குறை இருக்காது. ஏப்.16க்கு பிறகு சக கலைஞர்கள் ஆதரவுடன் இருப்பர். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் சுமாரான பலனையே காணமுடியும்.
மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும். பின் தங்கிய நிலையில் இருந்து ஏப்.26க்கு பிறகு மீண்டும் முன்னேற்ற பாதையில் வெற்றி நடை போடுவர். போட்டிகளில் வெற்றி காணலாம்.
விவசாயிகள் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கப் பெறுவர். குறிப்பாக பழ வகைகள், மஞ்சள், பயறு வகைகள் மூலம் அதிக லாபம் கிடைக்கும். கால்நடைகள் மூலம் சீரான வருமானம் கிடைக்கும்.
புதிய சொத்து வாங்க பொறுத்திருக்க வேண்டும். பெண்கள் தோழிகளுடன் அனுசரணையாக இருப்பர். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள்.அண்டை வீட்டாரின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரணடையும் நிலை ஏற்படும்.
ஏப்.26க்கு பிறகு தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் கைகூடும். கணவரின் அன்பும், அரவணைப்பும் கிடைக்கும். சிலர் குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவர். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர்.
ஏப்.26,27,28ல் புத்தாடை, நகைகள் வாங்கலாம். மே6,7ல் விருந்து, விழா என சென்று வருவீர்கள்.
* நல்ல நாள்: ஏப்.15,16,17,18,22,23,26,27,28,மே4,5,6,7,12,13,14
* கவன நாள்: மே 8,9 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 3,9
* நிறம்: மஞ்சள், சிவப்பு
* பரிகாரம்:
* சனிக்கிழமையில் சனீஸ்வரர் அர்ச்சனை
* தேய்பிறை அஷ்டமியில் பைரவர் தரிசனம்
* திங்களன்று மாலையில் சிவாலய வழிபாடு
தனுசு ராசி
பெரும்பாலான கிரகங்கள் சாதகமான நிலையில் இல்லை. அதற்காக மனம் உடைந்து போய் விட வேண்டாம். இந்த மாதம் சுக்கிரன் ஏப்.16ல் இடம் மாறினாலும் தொடர்ந்து நற்பலன் கொடுப்பார். செவ்வாய் மே 6 வரையும், புதன் ஏப். 26 வரையும், மே 12க்கு பிறகும் நற்பலன் தருவர்.
குடும்பத்தில் கணவன், மனைவி இடையே அன்பு, பாசம் மேலோங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்கலாம். மனதில் மகிழ்ச்சி நிலைக்கும். அபார ஆற்றல் பிறக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்கலாம்.
ஏப்.16க்கு பிறகு உறவினர்களிடம் சுமுக நிலை ஏற்படும். ஏப்.26க்கு பிறகு கணவன், மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை இருக்காது. பிரச்னை உருவாகி மறையும். ஏப்.24,25ல் பெண்களால் முன்னேற்றம் காணலாம். அவர்களால் உதவி கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள்.
ஏப்.19,20,21ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் மே1,2,3ல் உறவினர் வகையில் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்புண்டு என்பதால் சற்று விலகி இருக்கவும். மே 12க்கு பிறகு புதிய முயற்சியில் வெற்றி கிடைக்கும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும்.
தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு ஏப்.26 வரை கோரிக்கைகள் நிறைவேறும். மேலதிகாரிகளின் ஆதரவு இருக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். வேலை நிமித்தமாக சிலர் குடும்பத்தை விட்டு பிரியும் நிலை ஏற்படலாம். நெருப்பு, மின்சாரம் தொடர்பான வேலையில் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
ஏப்.17,18 சிறப்பான நாட்களாக அமையும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம். மே12 க்கு பிறகு வேலை விஷயமாக குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேருவர். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றத்தைக் காணலாம். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை மே 6க்குள் கேட்டு பெறவும்.
வியாபாரிகள் நல்ல முன்னேற்றம் பெறும் மாதமாக இது அமையும். வாடிக்கையாளர் மத்தியில் நற்பெயர் உண்டாகும். ஏப்.26 க்கு பிறகு தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம். சூரியனால் கடந்த மாதம் பெண்கள் வகையில் இருந்த இடர்பாடுகள் மறையும்.
ஆனால் இந்த மாதம் பகைவர் தொல்லை அதிகரிக்கும். ஆனாலும் பணவிஷயத்தில் எந்த பிற்போக்கான நிலையும் உண்டாகாது. மே 6,7ல் எதிர்பாராத வகையில் வருமானம் கிடைக்கும். ஏப்.22,23,26,27,28ல் சந்திரனால் தடைகள் வரலாம். மே 12க்கு பிறகு தொழில் ரீதியாக வெளியூர் பயணம் சென்றவர்கள் வீடு திரும்புவர்.
கலைஞர்களுக்கு புகழும் பாராட்டும் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஏப்.16க்கு பிறகு சக கலைஞர்கள் உங்களுக்கு உதவிகரமாக செயல்படுவர். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சுமாரான பலனைக் காண்பர்.
மாணவர்கள் கல்வியில் நல்ல வளர்ச்சி காண்பர். ஆசிரியர்களின் ஆலோசனை தக்க சமயத்தில் கிடைக்கும். புதன் சாதகமாக காணப்படுவதால் முன்னேற்றம் உண்டாகும். தேர்வில் அதிக மதிப்பெண் கிடைக்கும். போட்டிகளில் வெற்றி பெறுவர்.
ஏப்.27ல் இருந்து மே 12 வரை மெத்தனமாக இருக்க வேண்டாம் சிரத்தை எடுத்து படித்தால் மட்டுமே பலன் கிடைக்கும். இருப்பினும் குருவின் பார்வை சாதகமாக இருப்பதால் பின்தங்கிய நிலை உண்டாகாது.
விவசாயிகள் பழவகைகள், கீரை வகைகளில் நல்ல வருவாய் பெறுவர். கால்நடைகள் மூலம் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். வழக்கு, விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
பெண்கள் அடிக்கடி சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்பர். குடும்பத்தோடு புண்ணிய தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிட்டும்.கணவர் மற்றும் குடும்பத்தாரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும்.
பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். தோழிகள் ஆதரவுடன் இருப்பர். ஏப்.26க்கு பிறகு குடும்பத்தினருடன் பொறுமையாக விட்டுக் கொடுத்து போகவும். வேலைக்கு செல்லும் பெண்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். ஏப்.29,30ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம்.
* நல்ல நாள்: ஏப்.17,18,19,20,21,24,25,29,30, மே 6,7,8,9
* கவன நாள்: ஏப்.14, மே10,11 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்:3,7
* நிறம்: வெள்ளை, சிவப்பு,
* பரிகாரம்:
* ஞாயிறன்று நீராடி சூரிய நமஸ்காரம்
* சனிக்கிழமையில் அனுமனுக்கு விளக்கு
* சுவாதியன்று லட்சுமி நரசிம்மர் வழிபாடு
மகர ராசி
இந்த மாதம் சுக்கிரன் ஏப்.16ல் இடம் மாறினாலும் மாதம் முழுவதும் நன்மை தருவார். செவ்வாய் மே7ல் சாதகமான இடமான மேஷத்திற்கு வருகிறார். புதன் ஏப்.27ல் இருந்து மே12 வரை நன்மை தருவார். மற்றும் ராகுவால் நற்பலன்கள் தொடர்ந்து கிடைக்கும்.
புதன் ஏப்.26க்கு பிறகு நன்மைகளை வாரி வழங்குவார். அதுவரை முக்கிய முடிவுகளை சிந்தித்தே செயல்படுத்த வேண்டும். அதன்பின் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும்.
பொருளாதார வளம் சிறக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை கூடும். ஏப்.16 க்கு பிறகு பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
ஏப்.26,27,28ல் சகோதர வழியில் பணஉதவி கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். ஏப்.22,23ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் மே4,5ல் உறவினர்கள் வகையில் கருத்துவேறுபாடு வரலாம்.
எனவே அப்போது சற்று விலகி இருக்கவும். மே6க்கு பிறகு உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்கலாம். அண்டை வீட்டார் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். புதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகம் கூடி வரும்.
பணியாளர்கள் அதிக சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியதிருக்கும். பெண்களிடம் விரோதம் ஏற்படலாம். வீண் அலைச்சல் ஏற்படும். அரசு வேலையில் இருப்பவர்கள் வேலையில் கூடுதல் அக்கறை செலுத்தவும். ஏப்.26 க்கு பிறகு பதவி உயர்வு கிடைக்கும். கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும்.
அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி எளிதில் கிடைக்கும். ஏப்.19,20,21ல் பணியிடத்தில் அதிகாரம் கொடிகட்டி பறக்கும்.
மே6 க்கு பிறகு போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர். மே12க்கு பிறகு வேலை விஷயமாக குடும்பத்தை விட்டு பிரிய நேரிடலாம்.
தொழில், வியாபார முயற்சிகளில் வெற்றி உண்டாகும். பகைவர் சதியை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். அறிமுகம் இல்லாத பெண்களால் பிரச்னை ஏற்படலாம். ஏப்.24,25,29ல் சந்திரனால் தடைகள் வரலாம். மே8,9ல் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும்.
பகைவர் தொல்லை, அரசு வகையில் அனுகூலமற்ற போக்கு முதலியன ஏப்.26க்கு பிறகு மறையும். வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். மே12 க்கு பிறகு தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம்.
கலைஞர்கள் உற்சாகமான பணியில் ஈடுபடுவர். சக கலைஞர்கள் உதவிகரமாக இருப்பர். புதிய ஒப்பந்தம் எதிர்பார்த்தபடி கையெழுத்தாகும். அரசிடம் இருந்து விருது, பாராட்டு போன்றவை கிடைக்கும்.
அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் சீரான வளர்ச்சி காண்பர். மே6க்கு பிறகு புகழ், பாராட்டு கிடைக்கும்.
மாணவர்கள் சிரத்தை எடுத்து படிப்பது நல்லது. ஏப்.26க்கு பிறகு ஆசிரியர்களின் ஆலோசனை கிடைக்கும். தேர்வு முடிவு சாதகமாக அமையும். போட்டிகளில் பங்கேற்று வெற்றி காணலாம்.
விவசாயிகள் எதிர்பார்த்ததை விட மகசூல் அதிகரிக்கும். வருமானம் உயரும். கால்நடை வளர்ப்பில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மே 6க்கு பிறகு புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். வழக்கு, விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
கைவிட்டு போன பொருள் மீண்டும் கிடைக்கும். பக்கத்து நிலத்துக்காரர்களால் உதவி உண்டு.
பெண்கள் உற்சாக மனப்பான்மையுடன் செயல்படுவர். உங்களை புரிந்துகொள்ளாமல் இருந்தவர்களும் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். ஏப். 26க்கு பிறகு குடும்பத்தில் இருந்த பின்னடைவு மறையும். தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும்.
தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு. தோழிகள் உதவிகரமாக செயல்படுவர். மே 1,2,3ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து உதவி கிடைக்கப் பெறலாம். ஏப்.14, மே11ல் விருந்து, விழா என சென்று வருவர்.
சகோதரர் வழியில் பணஉதவி கிடைக்கும். மே12 க்கு பிறகு பொறுமையுடன் விட்டுக் கொடுத்து போகவும். வேலையில் முக்கிய பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் செய்யவும். உடல்நிலை அதிருப்தி அளிக்கும்.
* நல்ல நாள்: ஏப்.14,19,20,21,22,23,26,27,28, மே1,2,3,8,9,10,11
* கவன நாள்: ஏப்.15,16, மே12,13,14 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 4,8
* நிறம்:வெள்ளை, நீலம்
* பரிகாரம்:
* சனிக்கிழமையில் நவக்கிரக அர்ச்சனை
* ஏகாதசியன்று பெருமாளுக்கு துளசிமாலை
* திருவாதிரையன்று நடராஜருக்கு தீபம்
கும்ப ராசி
இந்த மாதம் ராசியில் இருக்கும் சுக்கிரன் ஏப்.16ல் இடம் மாறினாலும் மாதம் முழுவதும் நன்மை தருவார். 11-ம் இடத்தில் இணைந்திருக்கும் குரு,சனி,கேது தொடர்ந்து நற்பலன் கொடுப்பார்கள்.
புதன் மே12க்கு பிறகு சாதகமாக நின்று நற்பலன் தருவார். சூரியன் சாதகமான இடத்துக்கு வந்திருப்பதால் செல்வாக்கு அதிகரிக்கும். பொருளாதார வளம் கூடும்.
பெரும்பாலான கிரகங்கள் சாதகமாக காணப்படுவதால் திட்டமிட்ட செயல்களை கச்சிதமாக முடிப்பீர்கள். பகைவர் சதியை முறியடிக்கும் வல்லமை உண்டாகும். அபார ஆற்றல் மேம்படும். பொன், பொருள் சேரும். பெண்கள் உறுதுணையாக இருப்பர்.
குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். ஏப்.16க்கு பிறகு மதிப்பு, மரியாதை கூடும். ஏப். 29,30ல் சகோதரவழியில் ஆதரவு கிடைக்கும். ஏப்.24,25ல் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும்.
அதே நேரம் மே 6,7ல் உறவினர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். அவர்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம். ஏப்.16,17ல் புத்தாடை, ஆபரணம் வாங்க யோகமுண்டு.
மாத முற்பகுதியில் புதன் 2ம் இடத்தில் இருப்பதால் சிலருக்கு வீண் மனக்கவலை வரலாம். மே 12க்கு பிறகு கணவன், மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை இருக்கும்.
பணியாளர்களுக்கு புதனால் ஏற்பட்ட அவப்பெயர், செல்வாக்கு பாதிப்பு, வீண் மனக்கவலை முதலியன ஏப்.26க்கு பிறகு மறையும். அரசு பணியாளர்கள் வேலையில் கூடுதல் அக்கறையுடன் இருப்பது அவசியம். ஏப்.22,23 சிறப்பான நாட்களாக அமையும்.
முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம். மே12க்கு பிறகு புதன் சாதகமான நிலையில் இருப்பதால் பணியிடத்தில் செல்வாக்கு உயரும். பிறரது உதவி இல்லாமல் பணிகளை திறம்பட முடிப்பீர்கள். சக பெண் ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர்.
வியாபாரத்தில் சூரியன்,சனி பலத்தால் லாபம் கிடைக்கும். புதிய வாய்ப்புகளால் முன்னேற்ற பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். கடந்த காலத்தில் குறுக்கிட்ட தடைகளில் இருந்து விடுபட்டு வியாபாரத்தில் முழு கவனம் செலுத்தலாம்.
சிலர் தங்கள் வணிகத்தை விரிவுப்படுத்த வாய்ப்புண்டு. ஏப்.16 க்கு பிறகு வியாபாரிகளுக்கு அரசு வகையில் சலுகை கிடைக்கும்.
விண்ணப்பித்த வங்கி கடன் கிடைக்கும். ஏப்.26க்கு பிறகு அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.
ஏப்.26,27,28, மே1,2,3ல் சந்திரனால் தடைகள் வரலாம். ஏப்.14,மே 10,11 ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும்.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் பெற்று வளர்ச்சி காண்பர். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். தொழில்ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பொதுநல சேவகர்கள், அரசியல்வாதிகள் பலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும்.
பணத்தை விரயமாக்கியவர்கள் தீயவர்களின் பிடியில் இருந்து மே 6க்கு பிறகு விடுபடுவர். தொண்டர்களின் மத்தியில் செல்வாக்கு பெருகும். மே8,9ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.
மாணவர்களுக்கு குரு சாதகமான நிலையில் இருப்பதால் வளர்ச்சி காண்பர். ஆசிரியரின் வழிகாட்டுதல் மூலம் முன்னேற வழி உண்டாகும். கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்குவர்.
போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர். மே12க்கு பிறகு மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். சிலர் வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு கிடைக்கும்.
விவசாயிகள் பணியில் முன்னேற்றம் அடைவர். எந்த பயிர் செய்தாலும் அதில் நல்ல வருமானத்தை காணலாம். புதிய சொத்து வாங்க யோகமுண்டு. மே12க்கு பிறகு கால்நடை வளர்ப்பின் மூலம் முன்னேற்றம் காணலாம்.
பெண்களுக்கு குருபகவான் சாதகமான நிலையில் உள்ளதால் நினைத்த செயலை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கலாம்.
தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு. தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். மே 6க்கு பிறகு செவ்வாயால் உடல்நலம் பாதிக்கப்படலாம்.
* நல்ல நாள்: ஏப்.14,15,16,22,23,24,25,29,30, மே 4,5,10,11,12,13,14
* கவன நாள்: ஏப்.17,18 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 1,7,9
* நிறம்: சிவப்பு, மஞ்சள்
* பரிகாரம்:
* செவ்வாயன்று முருகனுக்கு அர்ச்சனை
* ஞாயிறன்று நீராடியதும் சூரிய தரிசனம்
* பிரதோஷத்தன்று நந்தீஸ்வரர் வழிபாடு
மீன ராசி
பெரும்பாலான கிரகங்கள் சாதகமான நிலையில் இல்லை. அதற்காக மனம் உடைந்து போய் விட வேண்டாம். சுக்கிரன் ஏப்.16ல் இடம்மாறி நற்பலனை தருவார். செவ்வாய் மே 6 வரை சாதகமாக இருப்பதால் செல்வாக்கு உயரும். மனதில் பக்தி எண்ணம் மேம்படும்.
எடுத்த செயல் அனைத்திலும் விடாமுயற்சியால் வெற்றி காணலாம். பொருளாதார வளம் ஓரளவு மேம்படும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.
குருபகவானின் 5-ம் இடத்துப்பார்வை சிறப்பாக அமைந்து உள்ளதால் மனதில் துணிச்சல் பிறக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கலாம்.
தெய்வ அனுகூலத்தால் மனதில் குதூகலம் உண்டாகும். சுக்கிரனால் ஏப்.16க்கு பிறகு தேவையான சகல வசதிகளும் கிடைக்கும். பெண்களால் நன்மை கிடைக்கும். அவர்களால் பொன், பொருள் சேரும்.
புதனால் ஏற்பட்ட உறவினர் கருத்துவேறுபாடு, வீண்விரயம், குடும்ப பிரச்னை போன்றவை ஏப்.26க்கு பிறகு மறையும். அதுவரை கவனம் தேவை. ஏப். 26,27,28ல் உறவினர் வருகையால் நன்மை ஏற்படும்.
பணியாளர்கள் சீரான நிலையில் காணப்படுவர். சுக்கிரனால் ஏப்.16க்கு பிறகு பதவி உயர்வு கிடைக்கும். போலீஸ் மற்றும் ராணுவத்தில் பணிபுரிபவர்கள் வளர்ச்சி காண்பர். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை மே 6க்குள் கேட்பது நல்லது. ஏப்.24,25 சிறப்பான நாட்களாக அமையும்.
உங்கள் அதிகாரம் கொடிகட்டி பறக்கும். தனியார் துறையில் வேலைபார்ப்பவர்கள் பணிச்சுமையால் அவதிப்பட வேண்டியதிருக்கும். இடமாற்ற பீதி ஏப்.26க்கு பிறகு மறையும். மே12க்கு பிறகு அரசு வேலையில் இருப்பவர்கள் கூடுதல் அக்கறையுடன் பணியில் ஈடுபடவும். எதிர்பார்த்த கோரிக்கைகள் நிறைவேறாமல் போகலாம்.
தொழில், வியாபாரத்தில் செவ்வாயின் அனுகூலத்தால் பொருளாதார வளம் மேம்படும். ஆன்மிக சம்பந்தப்பட்ட மற்றும் பூஜை பொருள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தைப் பெறுவர். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் முன்னேற்றம் அடையும்.
பங்கு வர்த்தகத்தில் நல்ல ஆதாயம் கிடைக்கும். ஏப்.29,30 மே4,5ல் சந்திரனால் தடைகள் வரலாம்.
ஏப்.15,16 மே12,13,14ல் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். சனிபகவானால் எதிரிகளின் இடையூறு தலைதூக்கலாம். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும். ஆனால் குருவின் பார்வையால் பகைவர் சதியை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள்.
மே12க்குப் பிறகு அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை.
கலைஞர்களுக்கு சுக்கிரன் சாதகமாக இருப்பதால் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அதிக வருமானம் இருக்கும். சமூகநல சேவகர்கள் மக்கள் மத்தியில் நற்புகழ் பெறுவர். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைக்கும்.
மாணவர்கள் கல்வியில் அதிக அக்கறை காட்ட வேண்டியதிருக்கும். குருவின் 5-ம் இடத்துப்பார்வை சிறப்பாக அமைந்து உள்ளதால் ஆசிரியர்களின் ஆலோசனை வளர்ச்சிக்கு வழிவகுக்கும். தேர்வில் அதிக மதிப்பெண்கள் கிடைக்கும்.
விவசாயிகள் கோதுமை, கேழ்வரகு, சோளம் போன்ற பயிர்கள் மூலம் அதிக மகசூல் பெறுவர். புதிய சொத்து வாங்கும் எண்ணம் மே 6க்குள் கைகூடும்.
பெண்கள் குடும்பத்தில் முக்கிய அங்கமாக திகழ்வர். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு செல்ல வாய்ப்புண்டு. குருவின் 5-ம் இடத்துப்பார்வை சிறப்பாக உள்ளதால் தேவைகள் பூர்த்தியாகும். தனியார் துறையில் வேலைபார்ப்பவர்களுக்கு பொறுமை தேவை. மே6,7ல் ஆடை, அணிகலன் சேரும்.
* நல்ல நாள்: ஏப்.15,16,17,18,24,25,26,27,28,
மே1,2,3,6,7,12,13,14
* கவன நாள்: ஏப்.19,20,21 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 3,8
* நிறம்: சிவப்பு, வெள்ளை
* பரிகாரம்:
* திங்களன்று சிவனுக்கு வில்வ மாலை
* சனிக்கிழமையில் சாஸ்தா வழிபாடு
* பவுர்ணமியன்று அம்மனுக்கு நெய்தீபம்










