இந்த வருட பொதிகைமலை அகஸ்தியர் தரிசன ஆன்லைன் முன்பதிவு ஜனவரி 6-ம் தேதி காலை 11 மணிக்கு தொடங்குவதாக கேரள வனத்துறை அறிவித்துள்ளது! நபர் ஒருவருக்கு 1331 வீதம் 5 அல்லது 10 நபர்கள் கொண்ட குழுவாக முன்பதிவு செய்யலாம்!
அகத்தியர் தரிசனம் ஜனவரி 14 முதல் பிப்ரவரி 26 வரை நாள் ஒன்றுக்கு 100 பேர் வீதம் அனுமதிக்கப்படுவர்!
முன்பதிவு செய்பவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே
forest.kerala.gov.in
என்ற கேரள வனத்துறை இணையதளத்திற்கு சென்று USERNAME & PASSWORD தயாராக்கி கொள்ள வேண்டும்!
யாத்திரை வரும் பக்தர்கள் அனைவரும் போட்டோவுடன் கூடிய அடையாள அட்டையான வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஆதார் நம்பர் மற்றும் பெயர்களை ஆன்லைன் பாரத்தில் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே தயாராக நிரப்பி வைத்திருக்க வேண்டும்!
ரெயில்வே டிக்கட் போல 15 நிமிடங்களுக்குள் டிக்கட் விற்று தீர்ந்துவிடும் என்பதால், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே ஆன்லைன் பாரங்களை நிரப்பி தயாராக இருக்க வேண்டும்!
ஒரு நபருக்கு ரூபாய் 1331வீதம் அதிகபட்சமாக ஒரே நேரத்தில் 10 பேருக்கு மட்டுமே முன்பதிவு செய்யலாம்!
முன்பதிவு கட்டணங்களை Internet Banking, Mobile Banking, Debit Card, Credit Card முறையில் செலுத்தலாம்!
அதிவேக இணைப்புள்ள இன்டர்நெட்டை பயன்படுத்தலாம்! அல்லது அருகில் உள்ள E-சேவை மையங்கள் மூலம் டிக்கட் எடுக்கலாம்!
நண்பர்கள் அனைவரின் வேண்டுகோளுக்கு இணங்க அனைத்து விபரங்களையும் முன்கூட்டியே வெளியிட்டுள்ளேன்!
பொதிகை மலை யாத்திரை மீது விருப்பமுள்ள அன்பர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும்!
மேலும் விபரங்களுக்கு கேரள அரசு வனத்துறை அலுவலக போன் நம்பரான 04712360762 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்! தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கூட பதில் சொல்வார்கள்!
ஓம் அகத்தீஸ்வராய நமக!
கும்பமுனிக்கு அரோகரா!
குருமுனிக்கு அரோகரா!











