சுவாமி சிவானந்த பரமஹம்சர் போதித்த வாசியோகத்திற்கும் மற்றும் வள்ளலார் பெயரிலும் சித்தர்கள் பெயரிலும் போதிக்கப்படும் வாசியோகத்திற்கும் தாங்கள் கூறும் தசகாரிய வாசி யோகத்திற்கும் என்ன வித்தியாசம் என்பதை விளக்க முடியுமா?
யோக அறிவியல் என்பது ஒரு பொருளின் திட, திரவ, வாயு, நெருப்பு மற்றும் ஆகாய நிலைகளைப்பற்றி அதாவது பஞ்சபூதங்களைப்பற்றி அக்குவேறு, ஆணிவேறாக தெரிந்துவைத்திருப்பது.
உங்கள் உடல்நிலையில், மனநிலையில், சக்திநிலையில் இன்னும் ஆழமான விஞ்ஞானநிலையில் இந்த பஞ்சபூதங்கள் எவ்வாறு ஆளுமை செலுத்துகிறது என்பதை நீங்கள் ஐயம்திரிபற உணரும் பட்சத்தில்
“நான் “என்று நீங்கள் உணர்வது ஒரு குட்டி பிரபஞ்சம் என்று அறிவீர்கள்.
இந்த சிறிய பிரபஞ்சத்தை நீங்கள் நன்றாகத் தெரிந்துகொண்டால், பிறகு நீங்கள் எல்லாவற்றையும் தெரிந்துகொண்டவர் ஆகிறீர்கள்.
இந்நிலையை அடையும் மனிதன் யோகி ஆகிறார்.அவர் பஞ்சபூதங்களையும் கட்டுப்படுத்தும் வல்லமையை அடைகிறார்.
அதன்பிறகு பஞ்ச பூதங்களில் எதனாலும் அழிக்கமுடியாத ஞானஒளிதேக உடலைப்பெற்றுக்கொள்கிறார்.
இதனை சாதிக்கும் யோகி அதன்பின்பு இறப்பதில்லை, பிறப்பதில்லை.இதுவே மரணமிலா பெருவாழ்வு.
இவ்வித உயர் ஆன்மீக நிலையை அடைய முழுமூச்சோடு முயல தயாராகவுள்ள தீவிரதர ஆன்மாக்களுக்கு உதவுவதே இதுவரை ரகசியமாகவே இருந்து தற்போது வள்ளலார், விபூதிசித்தர், அகத்தியர் முதலான சித்தர்களின் ஆசியுடன் இங்கு இனி வெளிப்படுத்தப்படவுள்ள நவீன குவாண்ட்டம் இயற்பியலை அடிப்படையாகக் கொண்ட தசகாரிய வாசி யோகம்.
இது சிவபெருமானாலேயே சொல்லித் தரப்பட்ட விஞ்ஞானபூர்வமான சாகா கல்வி. இந்த தசகாரிய வாசி யோக சாகா கல்வியில் அஷ்டாங்க யோகம், அஷ்டகர்ம யோகம் ,அஷ்டமா சித்தி யோகம் என்ற மூன்று படிநிலைகள் இருக்கின்றன.
இந்த மூன்று படிநிலைகளையும் படித்து முடிக்கும் ஒரு மாணவன் தான் மரணமில்லா பெருவாழ்வை அடைய முடியும் இவ்வாறு சகா கல்வியை கற்று வள்ளலார், சைவ சமய நால்வர் பெருமக்கள் ஆதிசங்கரர் போன்றோர் எல்லாம் கடவுள் நிலைக்கு உயர்ந்தார்கள்.











