தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்கம் சார்பாக கபசுர குடிநீர் வழங்கினார்கள்.
தூத்துக்குடியில் மாநகரில் திங்கட்கிழமை காலை (13-7-2020 )
சமுக இடை வெளியுடன் கபசுர குடிநீர் வழங்கினார்கள்.
தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் வணிகர்களின் பாதுகாவலர் த.வெள்ளையன் அவர்களின் ஆணையின் படி
தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்கம் சார்பாக

கொரனா வைரஸ் தாக்குதலைத் தடுக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் ஹோமியாபதி மாத்திரை (ஆர்செனிக்கம் ஆல்பம் 30C) மற்றும் முகக் கவசம் ஆகியவற்றை
தூத்துக்குடி மாநகராட்சி உதவி ஆணையாளர் உயர்திரு D.தனசிங் அவர்கள் தலைமையில் மாநகராட்சி சுகாதார அலுவலர் திரு C.ராஜசேகர்அவர்கள் மற்றும் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி தரக்கட்டுப்பாடு அதிகாரி திரு V.பிரின்ஸ் அவர்கள் மாநகராட்சி டவுன் பிளானிங் திரு. நாகராஜன்JE அவர்களின் முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டது.

தமிழ் நாடு ஹோமியாபதி மருத்துவக் கவுன்சில் செயலாளர் டாக்டர் N.M.பாதுஷா மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர் டாக்டர் A.பெலிக்ஸ் ஆகியோர் ஹேமியோபதி மாத்திரைகளை வழங்கினார்கள்.
நிகழ்ச்சியை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில துணைப்பொதுச் செயலாளரும், மாவட்டத் தலைவருமான பழரசம் பா.விநாயக மூர்த்தி அவர்கள் ஏற்பாட்டில் நடைபெற்றது.

நிகழ்ச்சியை மாவட்ட செயலாளர் த.பாஸ்கர், மாவட்ட பொருளாளர் ஆ.செந்தில் ஆறுமுகம், மாநகர பொருளாளர் மு.ராஜலிங்கம், மாநில இளைஞர் அணி அமைப்பாளர் சொ.ராஜா,
நகர இளைஞர் அணி அமைப்பாளர் பெ.வேல்முருகன், மத்திய சங்க மேலாளர் S.ஜெயப்பிரகாஷ் மற்றும் மத்திய சங்க நிர்வாகிகள், கிளைசங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
இந்த நிகழ்ச்சி கடந்த வாரம் முதல் தொடங்கி தொடர்ச்சியாக ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை அன்று காலை சமுக இடை வெளியுடன் நடை பெறும்.











