பிறந்த நாள் என்பது வாழ்க்கையில் ஒரு முக்கியமான நாள். அந்த குறிப்பிட்ட நாளில் பரமபுருஷன் நம்முள்ளே வந்து இறங்குகிறார். அன்று சாசுவதப் பரமனை நேருக்கு நேர் அணுகுகிறோம்.
அன்று நமது ஜீவன் பரமனுடன் தொடர்பு கொள்கிறது. சற்றே முயற்சி எடுத்துக் கொள்வோமானால் பல பிறவிகளுக்கான பணியை மின்னல் வேகத்தில் முடித்து விடுவோம்.
வாழ்க்கையின் குறிக்கோள் அருட் கொடையாக அளிக்கும் நாள். பரம புருஷன் நமக்காக கதவை அகலமாக திறந்து வைத்து காத்திருக்கும் நாள்.
இந்நாளில் ஜீவன் உடலை விட்டு மேலே பயணம் செய்து தனது மூலஸ்தானத்தை அடைந்து அங்கிருந்து அடுத்த ஒரு ஆண்டுக்கான பேராற்றலை உட்கொண்டு புத்துணர்வு பெற்று திரும்புகிறது.
ஆண்டுதோறும் இவ்வாறு பயணம் செய்து செயல் திறனையும் வலிமையையும் பெற்று வரும் இந்நாளில் உனக்கு நான் எத்தனையோ ஐஸ்வர்யங்களையும் அளித்து உதவ முடியும்.
இறையருள் உன்மீது சுரக்கும் இனிய இந்நாளில் எனது ஆசிகள் எப்போதும் உனக்கு உண்டு.
ஸ்ரீ அன்னை.











