காரைக்கால் அம்மையார்
அ
சிவாயநம
நமசிவாய
இன்று பங்குனிமாதம் சுவாதி நட்சத்திரம் காரைக்கால் அம்மையார் குருபூஜையை முன்னிட்டு
ஈசன் திருவருளாலும் அடியேன் குருநாதரின் குருவருளாலும் வரையப்பட்ட 63 நாயன்மார்களில் ஒருவராக திகழும்
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் அவதரித்தவர். இவருடைய இயற்பெயர் புனிதவதியார். இவருடைய கணவர் பரமதத்தனைத் தேடி வந்த நண்பர் இருமாங்கனிகளைக் கொடுக்க அதில் ஒன்றைப் புனிதவதியார் சிவனடியாருக்கு கொடுத்து உணவளித்தார்.
பரமதத்தனுக்கு மீதியுள்ள ஒரு மாங்கனியை வைத்து உணவு பறிமாற அவர் மற்றொரு கனியையும் கேட்டார். புனிதவதியார் இறைவனை வேண்டி ஒரு மாங்கனியைப் பெற்றார்.
அதை உண்ட பரமதத்தன் சுவை மிகுதியால் நடந்தததை கேட்க, புனிதவதியார் இறைவன் கொடுத்த பழம் என்று கூற அவற்றை நம்பாத பரமதத்தன் மீண்டும் ஒரு பழம் வாங்கிவா பார்க்கலாம் என்று கூற, புனிதவதியார் இறைவனிடம், கணவனின் சந்தேகம் போக்க மீண்டும் ஒரு பழத்தை தா என்று கேட்ட மறுநொடியே இறைவன் ஒரு பழத்தை அளித்தார்.
மனைவியின் தெய்வீக தன்மையினை உணர்ந்து வேற்றூர் சென்று மறுமணம் புரிந்து ஒரு குழந்தையும் பெற்றுகொண்டு வாழ, இதை அறிந்து புனிதவதியார் சென்றபோது தன்புதிய மனைவி,மகளுடன் அம்மையாரின் காலில் விழுந்து வணங்க அம்மையார் உலக வாழ்வை துறந்து ஈசனிடம் பேய் உருவம் வேண்டி இறைவனை காண தன் தலையாலேயே நடந்து சென்று பின் இறைவன் கட்டளைப்படி திருவாலங்காட்டிற்குச் செல்ல அங்கே சிவபெருமான் உமையோடு நடனம் புரியும் காட்சியளித்து ஆட்கொண்டார்.
இவ்வாறு இறைவனின் பாதத்தில் அமர்ந்து அவரின் திருதாண்டவத்தை நித்தமும் கண்டு மகிழும்
“”காரைக்கால் அம்மையார்””











