ஒரு அரசர் தன் அந்தரங்க பனியாளன் ஒருவனை தவறு செய்ததற்காக மரணதண்டனை விதித்தான்
சபையினர் அதிர்ந்தனர்..
ஏனென்றால் நம்பிக்கையானவன்.
அந்த நாட்டில் தண்டனை எப்படி தெரியுமா..?
பொது இடத்தில் மக்கள் முன்னிலையில்
கட்டி வைத்து ஐம்பது நாய்களை விட்டு கடிக்கச் சொல்லி சாகடிப்பார்கள்..
அரசர் கேட்டார்..” கடைசி ஆசை என்ன “?
“எனக்கு தண்டனை இருபது நாள் கழித்து தர வேண்டும் ” என்றான்..
யோசித்த மன்னர்..ஓகே சொன்னார்..
குறிப்பிட்ட நாளில் பொது இடத்தில் கட்டிவைக்கப் பட்டான்..
நாய்கள் வேகமாய் ஓடி வந்தது..
இவனருகில் வந்து முகர்ந்து பார்த்து விட்டு வேகமாய் கூன்டுக்கே சென்று விட்டது
வாலை ஆட்டியவாறு..
ஒரு நாய் ஓடி வந்து ரொட்டியைத் தந்து விட்டுப் போனது…
அரசன் கத்தினான்..
பனியாளன் சிரித்தான்..
சொல்ல ஆரம்பித்தான்
“மன்னா கடந்த இருபது நாளாய் எங்கு சென்றேன் தெரியுமா ? ”
“இந்த நாய்களை பயிற்சியளிக்கும்
கூடாரத்தில் நாய்களுக்கு பனிவிடை
செய்தேன்
குளிப்பாட்டினேன்..சாதம் போட்டேன்
அந்த நன்றியுணர்வில் தான் இந்த நாய்கள்
வெறியை தவிர்த்து பிரியத்தை தந்தன.
இருபது நாள் தான் பழகினேன் ..நாய்களுடன்..
ஆனால் இருபது வருடமாய்உன்மையான அன்போடும் ..நன்றியோடும் பழகினேன்.
அன்பிற்கும்..நன்றிக்கும்..மரணம் தான்
பரிசா..” என்றான்
அரசருக்கு புரிந்தது..தன் தவறு
மன்னிப்பு கேட்டு ..அவனுக்கு அரசு வேலையும் தந்தான்
இது கதை தான்
நல்ல விஷயம் உள்ளடக்கியது..
அனைவரிடமும்அன்பு பாராட்டுவோம்
பகைமை..பழி வாங்கல் குணம் மறந்து..
வாழ்க்கை என்பது அன்பிற்காக..
கண்ணீருக்காக அல்ல..
I am ok, you are ok என்பது தான் சரியான
அணுகுமுறை..
You are not eqaual to me… I am more than you, என்பது,, நம்மை தனிமைப் படுத்தும்.











