மதுரை மீனாட்சி அம்மன் – நவராத்திரி
ஆஹா !!! இதோ கண்களுக்கு விருந்தாய் மிகமிக அழகானதோர் அருட்காட்சி !!!
மதுரை மீனாட்சி அம்மன் – நவராத்திரி மஹோற்சவம் 2020 – மூன்றாம் நாள் – சுவாமி தன்னைத்தானே பூஜிக்கும் திருக்கோலம் !!!
பாண்டிமாநகரில் ஆனந்தமாக மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெற்ற பின், அம்பிகைக்கு அடுத்ததாக மதுரையின் அரசனாக சோமசுந்தரப்பெருமான் பட்டம் ஏற்று அரசு கட்டிலில் அமருகிரார் !!! அவ்வாறு ஆட்சிப்பொறுப்பு ஏற்கும் முன் சிவலிங்க பூஜை செய்து பின் பட்டாபிஷேகம் செய்து கொள்வது பாண்டியர்களின் வழக்கம் !!!
அம்பிகைக்கு சம்ப்ரதாயேஸ்வரி எங்கிற திருநாமம் ஒன்று உண்டு !! அவ்வாறு இருக்க அவளது கணவன் சம்ப்ரதாயங்களை விட்டுக்கொடுப்பாரா ??? தானே சாட்சாத் பரமேஸ்வரனாக இருந்தாலும் கூட மதுரையின் வழக்கத்தை கட்டிக்காக்கவும், தானே லோகத்திற்கு முன் உதாரணமாய் விளங்கவும்,
மதுரை நகருக்குளாயே , மீனாட்சி அம்மன் திருக்கோவிலின் மேற்கே தனது திருக்கைகளாலே ஓர் சிவலிங்கத்தை ப்ரதிஷ்டை செய்து, பட்டாபிஷேகத்திற்கு முன் தம்பதி சமேதராய் அச்சிவலிங்கத்திற்கு தானே க்ரம்ப்படி பூஜையும் செய்தார் !!!
இன்றும் மத்யபுரிநாயகி சமேத இம்மையிலும் நன்மை தருவார் என்னும் திருநாமத்துடன் மேலமாசிவீதியில் இச்சிவலிங்கம் விளங்குகிறது !!! வருடாவருடம் ஆவணி மூலத்தன்று சுவாமி பட்டாபிஷக்கதிற்கு முன் இங்கே மீனாட்சி சுந்தரேஸ்வராள் எழுந்தருளி தன்னைத்தானே பூஜிக்கும் வைபவமும் சிறப்பாக நடைபெறும் !!!
இம்முறை கொரோனே தொற்றின் காரணமாக இவ்வைபவம் நடைபெறவில்லை. அவ்வருத்தம் அடியோடு மறையும் வண்ணம் இதோ இன்று மீனாட்சி அம்மன் கொலுவில் அந்த தன்னைத்தானே பூஜிக்கும் திருக்கோலம் மிகமிக நேர்த்தியாக அலங்கரிக்கப்ட்டு அம்பிகை நமக்கு காட்சி அளிப்பது நாம் செய்த பாக்யம் !!!











