தியானம் செய்வதற்கு அற்புதமான நேரமாகும் – ஞானிகள்
ஆத்மா சகோதர சகோதரிகளுக்கு ஆத்ம வணக்கம்
தியானம் செய்வதற்கு உகந்த நேரம் என்று ரிஷிகளாலும் ஞானிகளால் கடைபிடிக்கப்பட்ட ஒரு அற்புதமான நேரம் கிரகணம் நேரம் ஆகும் ஏன்
இந்த கிரகண நேரத்தில் தியானம் செய்ய வேண்டும்
அப்படி கிரகண நேரத்தில் என்ன விசேஷம் என்றால்
இந்த பிரபஞ்சம் பிரமாண்டம் எல்லையற்ற இதில் நாம் ஒரு சிறு பிரபஞ்சம் ஆகும் இதைத்தான் சித்தர்கள் அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது என்று கூறினர்
அண்டம் என்றால் உலகம்
பிண்டம் என்றால் உடலைக் குறிக்கும்
சரி கிரகணம் என்றால் என்ன கிரகணம் என்பது ஒன்பது கிரகங்களும் சீரான வேகத்தில் இப்பிரபஞ்சத்தில் சுழன்று கொண்டிருக்கிறது அதில் 7 கிரகங்கள் 2 சாயா கிரகங்கள் சாயா என்பது நிழல் அதாவது பூமி மற்றும் சந்திரனின் நிழல்களாக ராகு கேதுக்கள் ஆகும்
சூரியன் பூமி சந்திரன் இந்த மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது வரும்போது சந்திர கிரகணமும் அதாவது பவுர்ணமி தினத்தில் நிகழும்
சூரியன் அதற்கிடையில் சந்திரன் மற்றும் பூமி ஒரே நேர்கோட்டில் வரும் போது சூரிய கிரகணம் நிகழ்கிறது இது அமாவாசை தினத்தில் நடக்கும்
மூல ஒலி
கிரகமான சூரியனும் அதன் ஒளியை வாங்கிப் நமக்கு பிரதிபலிக்கும் சந்திரன் மிகவும் முக்கியம் நமது மேலான ஜோதிட சாஸ்திரத்தில் சூரியன் உயிராகும் சந்திரன் மனமாகவும் கூறப்பட்டுள்ளது மூல ஒளிக் கிரகங்கள் சூரியன் சந்திரன் மறைத்து ஸ்தம்பிக்கும் நேரமே கிரகண நேரம் ஆகும்
உயிராக சூரியனும் மணமாக சந்திரனும் ஆன்மாவாக நாமும் மூன்றும் ஸ்தம்பிக்கும் நேரத்தில் அதாவது ஒரு நேர்கோட்டில் வரும்போது தியானம் செய்யும்போது உயிரும் மனமும் ஆன்மாவும் இயல்பாகவே ஒருமுகப்பட்டு தியானம் கைகூட கைவல்யம் ஆகும் இதைத்தான்
ஞானிகள் தியானம் செய்வதற்கு அற்புதமான நேரமாகும் கடைபிடித்தனர்
.
26ம் தேதி(26-05-2021) பௌர்ணமி தினத்தில் அற்புத வானியல் நிகழ்வு நடக்க இருக்கிறது அதாவது 2:12pm லிருந்து இரவு 7:20 கிரகணம் நடக்க இருக்கிறது.
அனைவரும் முழு ஊரடங்கு வீட்டில் இருக்கும் சமயத்தில் இந்த அற்புத வாய்ப்பை பயன்படுத்தி ஆன்ம லாபம் அடையும்ப படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி ஆத்ம வணக்கம்











