சிவப்பிரகாசம் சிவப்பிரகாசம் ஆனார்”.
பகவான் ஸ்ரீ ரமண மகரிஷிகளின் தலையாய உபதேசத்தை விளக்கும் “நான் யார்?” என்ற நூல் உருவாகக் காரணமானவர் திரு. மு. சிவப்பிரகாசம் பிள்ளை ஆவார். சிவப்பிரகாசம் பிள்ளை அவர்களின் ஆராதனை தினமான இன்று
சிவப்பிரகாசம் பிள்ளை 1875 ஆம் ஆண்டு சிதம்பரத்திற்கு அருகிலுள்ள இடையன்பால்சொரி எனும் ஊரில் முத்துசாமிப் பிள்ளை-சொர்ணாம்பாள் தம்பதிக்கு மூத்த மகனாகப் பிறந்தார்.
சென்னையில் படித்துவந்த காரணத்தால் ‘பட்டணத்துப் பிள்ளை’ என்று அழைக்கப்பட்ட இவர் 1900 ஆம் ஆண்டில் தென்னாற்காடு ஜில்லா கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த்துறையில் பணியாற்றி வந்தார்.
அலுவல் காரணமாக 1902 இல் திருவண்ணாமலைக்கு வந்தபோது, மலைமேல் குகை நமச்சிவாயர் ஆலயத்தில் இருந்து வந்த பிராமண சுவாமிகளைப் பற்றி கேள்வியுற்று அவரைத் தரிசித்து வெகுகாலம் அவருள் இருந்த நானார் எனும் வினாவிற்கு விடை வேண்டினார்.
அப்போது மௌனத்தில் இருந்துவந்த பிராமண சுவாமி (பகவான் ரமணர்) பிள்ளையவர்களின் கேள்விகளுக்கு எழுத்து மூலமாக தக்க விடையருளினார். அவைகளே பின்னர் நானார் எனும் தனிப் புத்தகமாக உருவானது.
1910 ல் பிள்ளையவர்கள் பணியை ராஜினாமா செய்தார். இடையன்பால்சொரியில் ஆன்ம சாதனையில் ஈடுபட்டு வந்த இவர் அவ்வப்போது பகவான் ரமண மகரிஷிகளையும் தரிசித்து வந்தார். தமது 72 ஆவது வயதில் (1948 ஆம் ஆண்டு மார்கழி 29) அன்று தேக உபாதியை விட்டு குருபதத்தில் ஐக்கியமானார்.
இவர் மறைந்த செய்தியைக் கேட்டு பகவான் “சிவப்பிரகாசம் சிவப்பிரகாசம் ஆனார்” என்று இவரின் முக்தியை உறுதி செய்தார்.
ஸ்ரீ ரமண சரித அகல், அனுக்கிரக அகவல், ஸ்ரீ ரமண சற்குருமாலை, தேவமாலை, விண்ணப்பம், பாதமாலை, மற்றும் பல தனிப்பாடல்களாகும்.











