சிவ பெருமானின் ஐந்து முகங்கள் உணர்த்தும் தத்துவம் பற்றிய பதிவுகள் :
பஞ்சபூதங்களின் வடிவமாகவும், அவற்றின் தலைவனாகவும் விளங்கும் சிவ பெருமான், பஞ்சமுகங்களை உடையவர். ஐந்து என்ற எண் சிவனுடன் நெருங்கிய தொடர்புடையதாகும்.
பஞ்ச பூதங்கள், பஞ்சாட்சரம், பஞ்சதொழில்கள், பஞ்சமுகங்கள் என ஐந்து சிவ பெருமானுக்குரிய சிறப்புடையதாகும். சிவ பெருமானின் 5 முகங்களும், அவற்றில் இருந்து தோன்றிய 25 முகங்களும் பற்றி நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் விரிவாக தெரிந்துக் கொள்ளலாம்.
சிவ பெருமானுக்கு மூன்று கண்கள் மட்டுமின்றி, ஐந்து முகங்களும் உள்ளது. இந்த ஐந்து முகங்களும் சிவ பெருமானின் படைத்தல், காத்தல் அருளல், மறைத்தல், அழித்தல் என்னும் ஐந்து விதமான தொழில்களை குறிக்கிறது.
இந்த ஐந்து முகங்களில் இருந்து தான் 25 விதமான சிவ வடிவங்கள் தோன்றியது. பலரும் அறியாத சிவனின் 5 முகங்களில் இருந்து தோன்றிய 25 உருவங்கள் பற்றியும் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
1. ஈசான முகம்
2. தத்புருஷ முகம்
3. அகோர முகம்
4. வாமதேவ முகம்
5. சத்யோஜாத முகம்
ஒவ்வொரு முகத்திலிருந்தும் ஐந்து வடிவங்கள் தோன்றின.
ஈசான முகத்திலிருந்து தோன்றிய 5 வடிவங்கள் :
1. சோமாஸ்கந்தர்
2. நடராசர்
3. ரிஷபாரூடர்
4. கல்யாணசுந்தரர்
5. சந்திரசேகரர்
தத்புருஷ முகத்திலிருந்து தோன்றிய 5 வடிவங்கள் :
1. பிட்சாடனர்
2. காமாரி
3. காலாரி
4. சலந்தராரி
5. திரிபுராரி
அகோர முகத்திலிருந்து தோன்றிய 5 வடிவங்கள் :
1. கஜசம்ஹாரர்
2. வீரபத்திரர்
3. தக்ஷிணாமூர்த்தி
4. கிராதமூர்த்தி
5. நீலகண்டர்
வாமதேவ முகத்திலிருந்து தோன்றிய 5 முகங்கள் :
1. கங்காதரர்
2. சக்ரவரதர்
3. கஜாந்திகர்
4. சண்டேசானுக்கிரகர்
5. ஏகபாதர்











