12 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் மஹா கும்ப மேளா ஜனவரி 13
12 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் மஹா கும்ப மேளா ஜனவரி 13 முதல் உத்தரபிரதேச மாநிலம் பிரயாகராஜில் துவங்குகிறது.
இதற்காக மிக பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
உலகின் மிகப் பெரிய விழாவாகவும், அதிகமான மக்கள் கூடும் விழாவாகவும் யுனெஸ்கோவால் அங்கிகரிக்கப்பட்டுள்ள விழா இந்தியாவின் பிரயாக்ராஜில் நடைபெறும் கும்பமேளா தான். சன்னியாசிகள், துறவிகள், சாமானிய மக்கள்.
ஆண்கள், பெண்கள், வேத பண்டிதர்கள் என கோடிக் கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் திருவிழாவாக கும்பமேளா கருதப்படுகிறது.
கும்பமேளா திருவிழா ஹரித்வார், பிரயாக்ராஜ், உஜ்ஜைனி மற்றும் நாசிக் ஆகிய நான்கு இடங்களில் தான் நடத்தப்படும். இருந்தாலும் பிரயாக்ராஜில் நடைபெறும் கும்பமேளா தான் பிரசித்தி பெற்றதாக திகழ்கிறது.
இதற்காக தற்காலிகமாக ஒரு நகரமே உருவாக்கப்பட்டிருக்கிறது. சாலைகள், தற்காலிக டென்ட்கள், கழிவறைகள், தற்காலிக பாலங்கள், மருத்துவமனைகள் என கும்பமேளா நடக்கவிருக்கும் இடம் முழுமையாக மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. இது மட்டுமில்லாமல், 56 காவல் நிலையங்கள் மற்றும் 144 கட்டுப்பாட்டு சாவடிகள், மற்றும் தற்காலிக நிர்வாக அலுவலகங்களும் உருவாக்கப் பட்டுள்ளன.
இந்த ஆண்டு கொண்டாடப்படும் மகா கும்ப மேளா, மகர சங்கிராந்தி தொடங்கி, மகா சிவராத்திரி வரை 44 நாட்கள் நடைபெறுகிறது. பிப்ரவரி 26ஆம் தேதி வரை நடைபெறும் இந்த திருவிழாவில் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 45 கோடி பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கும்பமேளா என்பதை மிகப்பெரும் திருவிழாவாக பார்த்தாலும் இன்னொரு புறம் கும்பமேளாவில் காணாமல் செல்பவர்களின் எண்ணிக்கை மிக மிக அதிகம். அதே போல் கடந்த கால கும்பமேளாக்களில் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவது தொடர்கதையாக இருந்திருக்கிறது.
இந்த வருடம் நடக்கும் கும்பமேளா முழுவதுமாக அப்கிரேட் செய்யயப்பட்டு டிஜிட்டல் முறையில் கண்காணிக்கப்பட இருக்கிறது. இதற்காக லேட்டஸ்ட் டெக்னாலஜிகள் அனைத்தும் பயன்படுத்தப்படுகின்றன.
AI கேமராக்கள், டிரோன்கள் தயாராக இருக்கின்றன. இதன் மூலம் எவ்வளவு மக்கள் கூடுவார்கள் என்று கணிக்க முடியும். மேலும் கூட்ட நெரிசல் ஏற்படுவதை கண்காணித்து தடுக்க முடியும். அனைத்தும் AI முறையில் கண்காணிக்க படவிருக்கிறது. AI face recognition சிஸ்டம் முறையில் கும்பமேளாவிற்கு வருபவர்கள் அனைவரையும் கண்காணிக்க போகிறார்கள்.
கும்பமேளாவிற்கு வரும் வெளிநாட்டு பக்தர்கள் Real Time Google Chat தொழில் நுட்பத்தை பயன்படுத்தலாம் என்று கூகிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
தண்ணீருக்கு அடியில் செல்லும் டிரோன்கள் மூலம் மக்கள் ஆற்றுக்குள் இறுங்குவது கண்காணிக்கப்பட இருக்கிறது.
குப்பைகளை அகற்றுவதற்கென்று தனி பட்ஜெட் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் கழிவறைகள் அமைக்கப்பட்டிருக்கிறது.
மேலும் கும்பமேளா பகுதியில் AI முறையில் பார்க்கிங் செய்து கொள்ளும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்கள் பார்க்கிங் பகுதியை அட்வான்ஸாக புக்கிங் செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
எலெட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. மேலும் வாகனங்களை பராமரிக்கும் நிலையங்களும் தற்காலிகமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.
கும்பமேளா மக்கள் பயனடையும் வகையில் பலவித போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான பேருந்துகள், சிறப்பு ரயில்கள் மற்றும் ஹெலிகாப்டர் வசதியும் புதிதாக சேர்ந்திருக்கிறது,
ஒரு மத நிகழ்வுக்காக இவ்வளவு செலவு செய்ய வேண்டுமா, இவ்வளவு பிரம்மாண்டமாக நடத்த வேண்டுமா என்று கேள்விகள் எழுப்புவார்கள்.
கும்பமேளாவின் பொருளாதாரக கணக்குகள் நம்மை தலைசுற்ற வைக்கும். 2013 ம் ஆண்டு நடந்த கும்பமேளாவில் 12000 கோடி வருமானம் கிடைத்துள்ளது. 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மினி கும்ப மேளா நிகழ்வு கடந்த 2019 ம் ஆண்டு நடத்தப்பட்ட போது 1 .2 லட்சம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்தது.
இந்த ஆண்டும் 2 லட்சம் கோடி வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு சிறிய உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், தண்ணீர் பாட்டில்கள் வியாபாரம் மட்டும் 17000 கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. 800 கோடி ரூபாய் அளவுக்கும் பூக்கள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹோட்டல்கள் வியாபாரம் உச்சத்தில் இருக்கிறது. கங்கை கரையில் ஆடம்பர டூம்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
இந்த நிகழ்வை மிகச்சிறப்பாக நடத்துவதற்கு உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்கள் பல மாதங்களாக திட்டமிட்டு உழைத்து வருகிறார். இந்த ஆண்டு நிகழ்வில் ஆக்ஸ்போர்ட், ஸ்தான்போர்ட் பல்கலை கழகத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு கிரவுட் மேனேஜ்மேண்ட், வேஸ்ட் மேனேஜ்மேண்ட் எக்கனாமிக் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ளவிருக்கிறார்கள்.
இந்த பிரபஞ்சத்தில் மிக அதிக மக்கள் கூடும் நிகழ்வாக நடக்கவிருக்கும் மஹா கும்பமேளா சிறப்பாக நடந்து முடிய வாழ்த்துவோம்.











