மனிதனின் சகல பிரச்சினைகளையும் தவிர்ப்பதற்கு
“லூஜான்” (Luzon Water falls) என்ற மாபெரும் நீர்வீழ்ச்சியை கன்ஃபூசியஸ் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார்!!
அது சுமார் 200 அடிக்கு மேலே இருந்து விழுந்து கொண்டிருக்கிறது!! அதனுடைய அலைகள் மற்றும் நுரையின் தாக்கம் பல மைல்கள் தூரம் வரை ஆற்றலுடன் பாய்ந்து செல்கிறது!! அவ்வளவு வேகம்!!
பலவீனமான மென்மையான பொருட்கள் என்றில்லை, யானை போன்ற பலமான மிருகங்கள் அந்த நீர்வீழ்ச்சியில் இறங்கினாலே உயிரோடு இருக்காது!!
அந்த சமயத்தில் அதனுள் ஒரு கிழவன் செல்வதை கன்ஃபூசியஸ் பார்த்து விட்டார்!! அந்த கிழவனுக்கு கண் தெரியவில்லையா?? அல்லது ஒருவேளை, தற்கொலை செய்து கொள்ளப்போகிறானோ? என்று திகைத்துவிட்டார்!!
சீடர் ஒருவரை அழைத்து “ஓடிச் சென்று
அந்த கிழவனை காப்பாற்றுங்கள்” என்றார். ஆனால் அதற்குள் அந்த கிழவன் அந்த நீர்வீழ்ச்சியில் இறங்கி விட்டான்!!
இவருக்கு ஒரே பதைபதைப்பு. சிறிது நேரம் கழித்து, சுமார் 100 அடி தூரத்தில் அந்த கிழவன் நீர் சொட்ட சொட்ட எழுந்து ஆற்றின் வேகத்திலேயே சென்று அக்கரையில் ஒதுங்கி மேலே ஏறினான்!!
கன்ஃபூசியஸ் ஆச்சரியப்பட்டு ஆர்வம் தாங்காமல், அருகில் இருந்த படகில் ஏறி படகை வேகமாக செலுத்தச் சொல்லி அந்த கிழவனை அடைந்து அவனிடம் சென்று கேட்டார்…
இந்த சக்தி வாய்ந்த நீர்வீழ்ச்சியில்
விழுந்து எப்படி கரை ஏறினீர்கள்?!
அதற்கு அந்த கிழவன், “நான் எதுவும் எதிர்த்து செய்ய மாட்டேன்!! அப்படி எதிர்க்கவும் எனக்குத் தெரியாது”!!
“எப்பொழுதும் இந்த நீர்வீழ்ச்சியை கடக்க வேண்டுமெனில் அந்த சுழற்சியின் போக்கிலேயே எந்தவித மறுப்பும் சொல்லாமல் செல்வேன்!! வெள்ளத்தின் போக்கில் சென்று, அதன்பிறகு சுலபமாக வெளியே வந்து விடுவேன்” என்றான்!!
இயல்பாகச் செல்லும் வாழ்க்கையை
அதன் போக்கிலேயே விட்டுவிடுங்கள்!! வாழ்க்கையின் சம்பவங்களை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள்!! அதனுடன் முரண்பட்டு அதனை எதிர்த்துப் போராடாதீர்கள்!!
#மனிதனின்_சகல_பிரச்சினைகளையும் #தவிர்ப்பதற்கு
#இது_ஒன்றுதான்_ஒரே_வழி.
~~ஓஷோ










