உலகிலேயே மூன்று கால்களை உடைய முனிவர் பிருங்கி ரிஷி. சிவபெருமானைத் தவிர பிற தெய்வத்தை வழிபடக் கூடாது என்ற கொள்கை கொண்டவர். இவர் நாள் தோறும் சிவனை மட்டும் வழிபட்டு அம்பாளை கண்ணெடுத்தும் பார்ப்பதில்லை.
இதைக் கண்ட சக்தி சிவனிடம் முறையிட்டு நாம் ஒரே உருவமாய் நிற்போம் என்று கூறி அம்மையப்பனாய் நின்றனர்.
அன்று பூஜைக்கு வந்த பிருங்கி அம்மையும் அப்பனும் ஓருருவாய் இருப்பதைக்கண்டு யோசித்து பின்னர் வண்டு உருவம் எடுத்து அம்மையப்பனின் தொப்புள் வழியே துளையிட்டு சிவனை சுற்றி வணங்கிச் சென்றார்.
இதைக்கண்டு சினமுற்ற அம்மை பிருங்கின் உடற்பாகத்திலுள்ள தசைக்கூறாகிய சக்தியை நீக்கினாள். அதனால் வலிமை இழந்து பிருங்கி தடுமாறினார் உடனே சிவபெருமான் வலிமையுள்ள மூன்றாவது கால் ஒன்றை கொடுத்து அருளினார்.
அருளிய தோடு முனிவரே ,சக்தி இல்லையேல் சிவன் இல்லை என்பதை உணர்ந்திடு. சிவசக்தி வழிபாடே சிறந்தது என்பதை புரிந்து கொள் என்றார்.
பிருங்கியும் அப்பனே என்னை அறியாது நான் செய்த தவறுகளை மன்னித்து அருள வேண்டும் என பராசக்தி இடம் மன்னிப்பு கோரினார்.
அறியாமல் செய்த தவறை மன்னித்தேன் என அன்னையும் அருள் கூறினார்.
திருச்சி திருவானைக்காவில் ஜம்புகேஸ்வரர் திருக்கோவில்
சிவலிங்க சன்னதிக்கு இடது புறம் அமைந்துள்ள வெளிப்பிரகார தூணில் உள்ள சிற்பம் இது.










