மகாலட்சுமி வாசம் செய்ய இந்த 5 குச்சிகளை கட்டி வையுங்கள்
இதை ஒரு வளர்பிறையில் செய்யுங்கள், வளர் பிறை தெரியாதென்றால் ஒரு
நல்ல நாளில் இதை செய்யுங்கள். இதற்க்கு 5 குச்சிகள் தேவைப்படும், இதை
செய்தாலே ராஜா வசியம் ஏற்படும், பணத்திற்கு தட்டுபாடு ஏற்ப்படாது. 5
வகையான குச்சிகள்
1) அரசமர குச்சி சிறியது
2) ஆல மர குச்சி
3) வேப்ப மர குச்சி
4) வில்வ மர குச்சி
5) சந்தன மர குச்சி சிறியது
இவை எல்ல்லாம் சிறிய குச்சி அளவு போதுமானது. இவை 5 யும் நன்றாக
மஞ்சள் நீரில் சுத்தம் செய்யது கொள்ளவும். இதை எந்த நேரத்திலும்
செய்யலாம்.
நீரில் கழுவிய பின் ஒவ்வொரு குச்சிக்கும் சந்தனம் வைத்து,
கும்குமத்தால் பொட்டு வைக்க வேண்டும். பின் ஒரு மஞ்சள் துணி எடுத்து
விரித்து அதில் எல்லா குச்சிகளையும் வைத்து நன்றாக சுருட்டி,
வெள்ளெருக்கன் செடியில் உள்ள நார் எடுத்து வந்து அதையும் மஞ்சள் நீரில்
கழுவி பொட்டு வைத்து நன்றாக கட்ட வேண்டும், வேர்றேதாலும் கட்ட
கூடாது.
இதை நீங்கள் உங்கள் வீட்டில் பூஜை அறையிலோ, கடையில் உள்ள
கல்லா பெட்டியிலோ வைத்து கொண்டால் உங்களுக்கு ராஜ வசியம்
கிடைக்க ஆரம்பிக்கும்.
இந்த ஒவ்வொரு குச்சிக்கும் ஒவ்வொரு சக்தி உள்ளது, அதே போல்
வெள்ளெருக்கன் நாரால் கட்டுவதால் இன்னும் சக்தி அதிகரிக்கும். இதை
வீட்டில் வைத்து கொள்வதால் மாஹலக்ஷ்மி வசியம் கிடைக்கும், கடன்
தொல்லை நீங்கும்.
இன்னும் உங்கள் தேவைகளை ஒரு பேபரில் எழுதி அதற்கு மஞ்சள்,
கும்குமம் வைத்து. பேப்பரை சுவாமி அறையில் வைத்து அதற்கு மேல் இந்த
கட்டிய குச்சிகளை வைப்பதால் உங்கள் தேவைகள் விரைவில்
பூர்த்தியடையும்.
சுபம்











