சிறப்பு: சுக்கிரன் வழிபாட்டு நாள் ஜூலை 1-7-2022
வழிபாடு: சுக்கிர பகவானுக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
சுக்கிர பகவானுக்கு வெள்ளிக்கிழமை என்பது உரிய தினமாகும். சுக்கிரன் அருள் பெற வீட்டில் வெள்ளிப் பொருட்களை பயன்படுத்துவது நலமாகும். வெள்ளியில் சுக்கிரன் வசிப்பதாக ஐதீகம் உள்ளது. வெள்ளி பொருட்கள் கொண்டு பூஜை செய்தால் சகல சௌபாக்கியங்களும் உண்டாகும்.
சுக்கிர வழிபாடு செய்ய நினைப்பவர்கள் காலை 6 மணி முதல் 7 வரையிலான காலம் சுக்கிர ஹோரை ஆகும். அதனை தவற விட்டால் மதியம் 1 மணி முதல் 2 மணி வரை சுக்கிர ஹோரை நிகழ்கின்றது. அதையும் தவறவிட்டால் இரவு 8 மணி முதல் 9 மணி வரையிலான சுக்ர ஹோரை நேரத்தில் வழிபாடுகள் செய்து பயன் பெறலாம். இவற்றில் காலை ஆறு முதல் ஏழு மணி வரையிலான முதல் சுக்கிர ஹோரையில் அன்று சுக்ர வழிபாடு செய்வது சிறப்பான பலன்களை கொடுக்கும்.
காலை முதல் மாலை வரை உபவாசமிருந்து சுக்கிர பகவானுக்கு உரிய காயத்ரி மந்திரத்தை உச்சரித்து, கல்கண்டு சேர்த்த சர்க்கரை பொங்கலை நைவேத்யம் படைத்து, வெள்ளை நிற பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். சுக்கிர தசை நடப்பவர்களும், சுக்கிரன் நீச்சம் பெற்ற ஜாதகர்களும் இந்த வழிபாடு செய்வது சிறப்பான பலன்களை கொடுக்கும்.
சுக்கிர தசை நடக்கும் பொழுது சுக்ர வழிபாடு செய்ய வருகின்ற வருமானத்தை சுகமான வாழ்க்கையை வாழ்வதற்கு உரிய வகையில் பயணிக்க செய்யும். வீடு, நிலம் வாங்குவது, ஆடம்பர பொருட்கள், சொத்துக்கள் போன்றவற்றை வாங்க வைக்கும்.
சுக்கிரன் நீசம் பெற்ற காலத்தில் இந்த வழிபாடு செய்பவர்களுக்கு வீண் விரயங்கள் இல்லாமல் ஓரளவிற்கு வறுமையிலிருந்து பிழைக்கச் செய்யும். வெள்ளிக்கிழமையில் நவகிரக கோவிலுக்கு சென்று சுக்கிர பகவானுக்கு வெள்ளை வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்யலாம். வெள்ளை நிற நைவேத்தியங்கள் தயார் செய்து கோவிலில் வரும் பக்தர்களுக்கு தானம் செய்யலாம்.











