பஞ்ச ரிண அல்லது ஐவகைக் கடன்கள்
இந்து மதத்தில் மனிதனுக்கு ஐந்து வகையான கடன்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
1) தேவ ரிண – அதாவது கடவுளுக்காக நாம் படும் கடன்.
2)ரிஷி ரிண- முனிவர்களுக்கு நாம் பட்ட கடன்.
3)பித்ரு ரிண-முன்னோர்களுக்கு பட்ட கடன்.
4)ந்ரு ரிண- மனித சமூகத்திற்கு நாம் பட்ட கடன் ,
5) பூத ரிண , மனிதனல்லாத உயிர்களுக்கு பட்ட கடன் . இக்கடன்களைத் தீர்க்க ஓர் இந்துவானவன் நீதி நுல்களில் கூறப்பட்ட சில விதிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும் .
இந்த மத நீதி நுல்களின்படி எல்லா உயிரிணங்களுமே இந்தப் பூமியின் சுற்றுச் சூழலின் ஓர் அங்கமாக இருக்கின்றன . எனவே மனிதன் மனிதர்களுக்கும் , பூமியில் வாழும் மற்ற உயிரிணங்களுக்கும் தான் கடமைப்பட்டுள்ளோம் . என்பதைப் புரிந்து கொள்ளாமல் வாழ முடியாது .
ஒருவரை ஒருவர் சார்ந்த படிதான் அனைவருடைய வாழ்க்கையும் அமைந்திருக்கிறது மனிதர்களையோ அல்லது மற்ற உயிரிணங்களையோ காரணமின்றி கொல்வதை இந்து மதம் அனுமதிப்பதில்லை .
தாயினுடைய கருவில் ஜனித்த போதிலிருந்து சுடுகாட்டிற்குப் போகம்வரை இந்துவானவன் நீதி நூல்களில் கூறியுள்ளபடி நடந்து கொள்ள வேண்டும் என்று இந்து மத நூல்களில் ஒன்று கூறுகிறது .
நீதி நெறியைத் தாங்கி நிறுத்துபவர் கடவுளே
நிரத்தமான இந்த நீதி முறைகளைத் தோற்றுவித்து இதைக் காப்பவரும் கடவுள்தான் என்று வேதங்கள் சூறுகின்றன . அதில உலகமே இந்த நீதி நெறிகளில் கட்டுப்படுத்தப்படுகிறது . இந்த உலகை ஒழுங்காக இயங்க வைப்பதும் ,
அதைவிடக் குறைந்த நிலையிலுள்ள உலகத்தை இயங்க வைப்பதும் , நிலை நிறுத்துவதம் இந்த சட்டதிட்டங்களே . இவ்வுலகிலுள்ள எவராலும் இந்த நீதிகளிலிருந்து தப்ப முடியாது . எனவே தான் இந்து மதமானது நீதி நுல்களுக்கும் , அறநெறி களுக்கும் கடவுள்தான் அஸ்திவாரமாக இருப்பவர் என்று கருதுகிறது .










