ஸ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்
திருச்சிராப்பள்ளியின் மையத்தில் அமைந்திருக்கும் கோர்ட் வளாகம், அது 1917 க்கும் 1928 க்கும் இடையேயான 11 ஆண்டுகள், இந்த
மகா முனிவரின் தவத்தினால் நிறைந்திருந்தது.
தன்னை யாருக்கும் வெளிப்படுத்தாது இருந்த இந்த மகானை நோக்கி தனது குடும்பத்து அங்கத்தினர்களை ஈர்த்த வருடம்தான் 1928.
அப்போது திருச்சி மலைக் கோட்டையின் தாழ்வாரத்தில் அமைந்த நந்தி கோவில் விதியில் அமைந்துள்ள ‘நாகநாதர் ஆலயத்தில்’
எப்போதும் தவத்தில் அமர்ந்திருந்தார் இந்த மஹான்.
அங்கு வந்து தன்னை அடையாளம் தெரிந்து கொண்ட மனிதர்களைத் தவிர்ப்பதற்காகத் தன்னை மறைத்துக் கொண்ட இடம்தான்
கோர்ட் வளாகம். அங்கிருக்கும் ஒரு மகிழ மரத்தின் கீழே அமர்ந்து தன் தவத்தைத் தொடர்ந்தார்.
ஒரு புறம்… கோர்ட், ஒரு புறம்… பதிவாளர் அலுவலகம், ஒரு புறம் தீயணைப்பு நிலையம்… இந்த மூன்றுக்கும் செல்வதை எப்போதும்,
எல்லோரும் தவிர்ப்பதற்குத்தான் விரும்புவார்கள். ஆனால் முருகனின் திருவருளால் ஈர்க்கப்பட்டு… அவரால் ஆட்கொள்ளப்பட்ட இந்த
‘கனகசபாபதி’ என்ற மஹான்… ‘சத்ரு சம்ஹார முர்த்தியாக’ இந்த மகிழ மரத்தின் கீழ் அம்ர்ந்ததும்… இவரின் திருவடியை நோக்கி…
அன்று மட்டுமல்ல, இன்றும் லக்ஷக் கணக்கில் பக்தர்கள் வந்து குவிகிறார்கள்.
இறைவனின் அவதாரம் நிகழும் காலத்தில், அவருக்கான பிரதானமான நோக்கத்தை… ‘இஷ்ட பரிபாலனம் – துஷ்ட நிக்ரஹம்’ என்று
வருணிப்பர். அதாவது தர்மத்திற்கு எதிராக இருக்கும் சக்திகளை அழித்தும்… தர்மத்தின் வழியே நடக்கும் எளியவர்களைக் காத்து
இரட்சிப்பதும்… அவதாரத்தின் நோக்கம் என்பதாக.
இந்த பூமியில் அவதரிக்கும் ஒவ்வொரு ஜீவனும் அதனதன் ‘கர்ம வினைகளை’ அனுபவித்து… அதன் வழியாகப் பயணித்து… அந்த கர்ம
வினைகள் பூரணமாகக் கழிந்த பின்… தனது மூலமான படைப்பின் திருவடியில் கலந்து விடுகிறது. இந்த கர்ம வினைகள் என்னவோ…
அந்த ஜீவர்களின் ‘முன் வினைத் தொகுப்புதான்’, ஆனாலும், இந்தப் பிறவியில் அதைக் கடந்து போகும் போது… அந்தந்த ‘வினைகளின்
விளைவுகளுக்கு’ ஏற்ப ‘புண்ணியமாகவோ, பாபமாகவோ’ கடந்து போக வேண்டியிருக்கிறது.
புண்ணியமாகக் கடந்து போகும் போது ‘மிக மகிழ்வாகக்’ கடந்து போகும் ஜீவன்… அதுவே, தனது பாவ வினைகளை அனுபவிக்கும் போது ‘துன்பத்தால் துவண்டு’ போகிறது. அதுவும் தனது ‘முன் வினைக் கர்ம பயன்தான்’ என்பதை ஏற்றுக் கொள்ளாத மனம் பதை பதைத்துப் போகிறது. இந்த தாங்க முடியாத துன்பத்திற்கு வடிகாலைத் தேடி ‘இறைவனின் திருவடியில்’ சரணடையும் ஜீவனின் மீது கருணை கொள்ளும் இறைவன்… அதைத் தக்கதொரு ‘சத்குருவின்’ திருவடிக்கு அழைத்துச் செல்கிறான்.
அவ்வாறு, அழிக்கவே முடியாத… அனுபவிக்காமல் தப்பிச் செல்ல முடியாத… அந்த ‘கர்ம வினைச் சூழலை’ கடந்து போகத் தோணியாக அமைவபவரே… ஒரு சத்குரு.
ஒவ்வொரு ஜீவனுடைய இந்த ‘கர்ம வினைக் கட்டுகளை’ அவிழ்த்து… அதன் பாபத்தையும், புண்ணியத்தையும்… அந்த ஜீவன் சமமாக ஏற்றுக் கொண்டு கடந்து போகும் பக்குவத்தையும்… அந்த ஜீவனின் நன்மைக் கருதி, பல சூழல்களில் அந்த கர்ம வினையையே களைந்தும் போகச் செய்பவராக இருப்பவதான் ‘சத்ரு சம்ஹார முர்த்திகள்’.
ஒவ்வொரு ஜீவனின் வாழ்க்கச் சக்கரம் என்ற ஜோதிடத்தில்… அதன் ஜனன கால ஜோதிட இராசிச் சக்கரத்தில்… 6 ஆமிடமான ‘ருண – ரோக – சத்ரு ஸ்தானம்’ தான் அந்த ஜீவன் இந்த பிறவியில் அனுபவிக்கப் போகும் பாப வினைகளின் விளைவுகளைச் சுட்டிக் காட்டுகிறது. அந்த வினைகளால் துன்புற்றுத் தவிக்கும் ஜீவனின் துன்பத்தை தனது கருணை என்ற வாளால் வெட்டி வீசுபவராக… இன்றும் தான் அமர்ந்திருந்த… மகிழ மரத்தின் கீழே அமர்ந்து அருள் மழை பொழிகிறார்… இந்த மஹான்.
ஒரு மஹானின மஹிமை, அவரிருந்த அனைத்து இடங்களிலுமே ஆகர்ஷித்து அருளும் தன்மையுடன் இருக்கும். அதுதான்… இந்த மஹானின் வாழ்விலும்… அவரிரிந்து அருள் செய்த இடங்கள்… அவரை ஆட்கொண்ட ‘முருகனின் அறு படை வீடுகள்’ போல… ‘தான்றீஸ்வரத்திலிருந்து… திருச்செந்தூர் வரை… அறுபடை வீடுகளாகத் திகழ்கிறது.










