இந்த உலகம் ஊழல் மயமானது.
அதனால் தான் உபநிஷத காலத்தில் , ரிஷிகள் இம்மாதிரியான உலகியல் அனுபவங்கள் ஏற்படுவதற்கு முன்னர் உங்களுக்கு கடவுளை அறியும் சுவையை ஏற்படுத்துவது நல்லது என முடிவு செய்தனர்.
அந்தச் சுவை உங்களை இந்த உலகியல் ஊழல்களிலிருந்து காப்பாற்றும் என்று அவர்கள் நம்பினர்.
நீங்கள் உயர்வானதைப் பற்றி அறிந்திருந்தால் , கீழானவை உங்களைப் பாதிக்காது.
நீங்கள் எதையும் ஆழமாக அறிந்திருந்தால் , ஆழமற்றவை ஒரு பெரிய விஷயமல்ல.
இது அறிவியல் பூர்வமானது.
மனோதத்துவ ரீதியானது.
முதல் இருபத்தைந்து ஆண்டுகளை தியானம் செய்வதில் , குருவோடு இருப்பதில் குருவைக் கண்டு மகிழ்வதில் அவரது இருப்பைக் கண்டு கொண்டாடுவதில் முதல் இருபத்தைந்து ஆண்டுகளை அர்ப்பணிக்க வேண்டும்.
அது மடாலயம் அல்ல.
அது ஒரு பள்ளிக் கூடம் , ஒரு கல்விக் கழகம் , வாழ்க்கையை கற்றுக் கொள்வதற்கான ஒரு உண்மையான பல்கலைக்கழகம்.
முதல் இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, இரண்டாவது பகுதி ஆரம்பமாகிறது.
” கிருஹஸ்தம் ” என்ற இல்லறத்தாருக்கான அடுத்த கட்டம் இது.
இந்த நிலையில் ஒருவன் திருமணம் செய்து கொள்கிறான்.
உலகில் பணியாற்ற செல்கிறான்.
பணம் சம்பாதிக்கிறான்.
உலகியல் வாழ்கையை வாழ்கிறான்.
ஆனால் இப்பொழுது ஒரு அடிப்படையான உள் மையத்தில் நிலை பெற்றிருக்கிறான்.
உலகில் அவனைப் பாதிக்காது.
கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் அவன் எம்மாதிரி சுடரைப் பெற்றிருந்தானோ அது அவனது நினைவுக்கு மீண்டும் வரும்.
உலகில் வாழ்க்கை சிறிது காலமே என்பதை மீண்டும் மீண்டும் நினைவிற்கு கொண்டு வரும்.
அனைத்து உலகியல் செயல்களையும் செய்வான்.
ஆனால் அவற்றில் அழுந்தி விடாமல் , அசைவற்று இருப்பான்.
வெளி உலகைப் பொறுத்தவரை அவன் சக்கரம்.
உள்முகத்தில் அசைவற்ற அச்சாக , எதனாலும் பாதிக்கப்படாமல் அமைதியாக இருப்பான்.
வெற்றியும் , தோல்வியும் அவனுக்கு ஒன்று தான்.
முதல் இருபத்தைந்து ஆண்டுகளில் பெற்ற அனுபவத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு இந்த ” கிருஹஸ்த ” அனுபவமும் தேவைப்படுகிறது.
முன்பு பெற்ற அனுபவம் உண்மையாகவே நீங்கள் அடைந்தது தான ?
குருவோடு இருந்த காலத்தில் மட்டுமே நீங்கள் பெற்ற ஒளியா அல்லது கடன் வாங்கப்பட்டதா என்பதை அறிந்து கொள்ளும் தேர்வாக அளவு கோலாக இந்த அனுபவம் அமைகிறது.
நீ இந்த உலகியலில் நுழைந்தாக வேண்டும்.
இதுதான் சோதனை.
பிரம்மச்சரிய அனுபவம் உன்னுடனேயே இனைந்து விட்டது.
எதுவும் உன்னிடமிருந்து அதை எடுத்துவிட முடியாது.
(என்பதை அறியும் சோதனையாகும்).
குருவை விட்டு நீ விலகி வந்த பிறகும், கிரஹஸ்த நிலையில் உனக்கு பாதிப்பு இருக்காது.
ஏனெனில் அது உனது சொந்த அனுபவம்.
உண்மையாகவே உனக்கு சொந்தமானது.
இது ஒரு அழகான அறிவியல் பூர்வமான நடைமுறையாகும்.
ஒருவன் இருபத்தைந்து ஆண்டுகாலம் பிரம்மச்சரிய நிலையில் உண்மையாக பயிற்சி பெற்றிருந்தால் ,
இல்லறத்தானாக மாறும் பொழுது , அந்த பயிற்சி அனுபவம் உலகியல் நடைமுறைகளிலிருந்து அவனது இல்லறத்தைப் பாதுகாக்கும்.
அவனது இல்லறம் நல்லறமாக இருக்கும்.
ஓஷோ-











