குருவிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?
॥ ஆபஸ்தம்ப ரிஷி॥ அருளியது..
குருவுக்கு முன் கால் நீட்ட கூடாது.
குருவை சந்திக்கும் போது, காலில் செருப்போ, தலைப்பாகையை வைத்து கொண்டோ
போகக்கூடாது. ஆனால், பயணத்திலோ, வேலையிலோ இருக்கும் போது, குருவை சந்திக்க
நேர்ந்தால், தவறில்லை.
குருவை அணுகும் போது, தெய்வத்தை அணுகுவது போலவே அணுக வேண்டும்!
ப்ரயோஜனமற்ற பேச்சுக்கள், கதைகள் அவ்விடத்தில் பேசக்கூடாது. அவர்கள் சொல்வதை
கவனமாக, பணிவுடன் கேட்க வேண்டும்.
குருவுக்கு முன் நாம், கால் மேல் கால் போட்டு கொண்டு அமரக்கூடாது.
காற்று நம் மீது பட்டு, பிறகு குருவின் மீது படும்படியாக நாம் இருக்க கூடாது. உடனேயே அந்த
இடத்தை விட்டு நகர்ந்து வேறு இடமாகப் பார்த்து அமர வேண்டும்.
குருவுக்கு முன்னால் உட்கார்ந்து இருக்கும் போது, கையை ஊன்றிக்கொண்டு இருக்கக்கூடாது.
குருவுக்கு முன்னால் நாம் உட்கார்ந்து இருக்கும் போது, எதிலும் சாய்ந்து கொண்டு இருக்கக்
கூடாது.
குருவின் முகம் பார்த்து இருக்க வேண்டும். ஆனால், அதே சமயம் குருவின் முகத்துக்கு நேர்
எதிரே இருக்கக்கூடாது.
குருவுக்கு மிக அருகிலோ, மிகவும் தூரத்திலோ அமர கூடாது. குரு கையை உயர்த்தி கூப்பிடும்
தூரத்தில் அமர வேண்டும்.
குருவுக்கு முன்னால் பலர் இருந்தால், அவரவர் சௌகர்யத்துக்கு அமர்ந்து கொள்ளலாம்.
குரு நிற்கும் போது, நாம் அமர்ந்து இருக்க கூடாது. குருவுக்கு அமர இடம் இல்லாத சமயத்தில்,
நமக்கு இடம் கிடைத்தாலும் அதில் நாம் அமரக்கூடாது.
குரு ஏதாவது காரியத்தை செய்ய முனையும் போது, சிஷ்யனின் அனுமதியை பொறுத்து, தன்னால் முடிந்த வரை உதவி செய்யலாம்.
குரு இருக்கும் போது, அவருக்கு கீழ் உள்ள எவருக்கும் குருவுக்கு முன்னர் அவர்களது காலில் விழக்கூடாது.
தன் கோத்திரத்தின் பெருமையை குருவுக்கு முன் பேசக்கூடாது.
தன் குருவை தவிர அவரை விட தாழ்ந்த தகுதி உள்ள குருவை சந்திக்கவும், சிந்திக்கவும் கூடாது! அல்லது அவர்களை தன் குருவுக்கு இணையாக்கக் கூடாது. குருவின் குருவே வந்தாலும் சரி. இது தன் குருவுக்கு செய்கிற அவமதிப்பு செயலாகும்.
தேவைப்பட்டால், அமைதியாக அந்த இடத்தை விட்டு அப்போதைக்கு நகர்ந்து விடலாம். அல்லது, தன் குருவுக்கு கொடுக்கும் மரியாதை கொடுக்கலாம்.
குருவின் முன்னர் நாம் வாயை திறந்து கொட்டாவி விடக்கூடாது. அப்படி நேர்ந்தாலும் குனிந்து, வாயை கையால், துணியால் மூடிக்கொள்ள வேண்டும்.
குருவுக்கு கொடுத்ததைப்பற்றி நாம் அடுத்தவரிடம் கூறி பெருமை பேசக்கூடாது. குருவுக்கு செய்த சம்பாவனையை மறந்தும் அடுத்தவரிடம் சொல்லக்கூடாது.
குரு அமர்ந்த ஆசனத்தில் நாம் அமரக்கூடாது.
குரு கூப்பிடாமல், நல்ல விஷயத்தை தவிர மற்ற எதுவும் அவரிடம் சென்று பேசக்கூடாது.
குருவிடம் உபதேசம் பெற்று, வீடு திரும்பினாலும், அவரிடம் பழகும் விதத்தை நமது கடைசி மூச்சு வரை கடைபிடிக்க வேண்டும்.
குருவும், நீங்களும் ஒரே ஊரில் இருந்தால், அவர் கூப்பிடாமலேயே காலையும், மாலையும் அவரை பார்த்து வணங்கிட வேண்டும்.
குரு வேறு ஊரில் இருந்தால், முடிந்தவரை அவரை அடிக்கடி பார்க்கச்செல்ல வேண்டும். தன் கையால் அவருக்கு ஒரு வேப்பங்குச்சியாவது பல் துலக்க கொடுக்க வேண்டும்.











