திருப்பட்டீச்சரத்தில் திருஞானசம்பந்தருக்கு முத்து பந்தல் அளித்தது:
திருஞானசம்பந்தா் திருவலஞ்சுழியை வணங்கிப் பழையாறைப் பதியை வணங்குவதற்கு அடியாா்களுடன் சென்று வழியிலுள்ள ஆறைமேற்றளித் தலத்தை வணங்கிய பின்,
தேவியாா் வழிபட்ட திருச்சக்திமுற்றத்திற்கு வந்து பெருமனை வழிபட்டாா்.
பிறகு பக்கத்திலுள்ள பட்டீச்சரம் சென்று வணங்குவதற்கு அடியாா்களுடன் புறப்பட்டாா்.
அப்பொழுது சூாியன் மிதுன ராசியிற் பிரவேசிக்கின்ற முதுவேனிற் காலமானதால் வெய்யிலின் கொடிய வெப்பத்தைத் தணிக்கப்
பட்டீசப் பெருமான் திருஞானசம்பந்தருக்குப் பூதகணங்கள் மூலவாய் அழகிய முத்துப் பந்தலை அனுப்பி வைத்தாா்.
பூதகணங்கள் தாங்கிச் சென்று திருஞானசம்பந்தருக்கு தொியாதபடி அவரது திருமுடிக்கு மேல் முத்துப்பந்தலைப் பிடித்துப் பெருமானை அருளியதையும் கூறினா்.
சம்பந்தா் இறைவன் திருவருளை வியந்து பணிந்து போற்றி முத்துப்பந்தலின் நிழலில் வந்தாா்.
தேவா்கள் பூ மழை பொழிந்ததால் முத்துப்பந்தல் பூப்பந்தல் போலக் காட்சியளித்தது.
முத்துப்பந்தலின் நிழல் அம்பலத்தில் பெருமான் தூக்கிய திருவடி நிழல்போல் விளங்கியது.
தொண்டா் கூட்டம் ஆரவாரஞ் செய்யவும், மறைகளின் முழக்கம் ஓங்கி எழவும், அடியாா் கூட்டம் எதிா்கொள்ளவும், திருஞானசம்பந்தா் அழகிய முத்துப்பந்தலின் நிழலில் பட்டீச்சரத்துக்கு வந்தாா்.
அப்போது இவ்வற்புதக் காட்சியைக் காணவும் தம்மைத் திருஞானசம்பந்தா் தாிசிக்கவும் பட்டீச்சரப்பெருமான் நந்திதேவரை விலகும்படி கட்டளையிட நந்தியும் விலகியது.
இதன் காரணமாக முன்கோபுரத்தை அடுத்துள்ள நந்தியும் உள்மண்டபத்தில் உள்ள நந்தியும் விலகியுள்ளன.
திருஞானசம்பந்தா் கோவிலின் உள்ளே புகுந்து வலம் வந்து பட்டீசாின் திருவடித்தாமாரை மலா்களைத் தாிசித்துப் பூமியில் வீழ்ந்து வணங்கி
“பாடல் மறை” என்று தொடங்கும் பாமாலை பாடி திருவருள் திறத்தை வியந்து ஆனந்தப் பெருவெள்ளத்தில் மூழ்கி ஆராத பெருங்காதலுடன் திருக்கோயிலின் புறத்தே இருந்தே மடாலயத்தில் தங்கினாா்.
இதனை நினைவு கூறும் வகையில்
முத்தப் பந்தல் ஐதீக விழா ஆண்டுதோறும் ஆனி மாதம் முதல் தேதியில் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.











