நாம் எவ்வளவு பெரிய உயர் பதவியையும் அடையளாம், எவ்வளவு சொத்து வேண்டுமானாலும் சேர்க்கலாம், ஆனால் ஒரு குருவின் வழிகாட்டுதல் இல்லாமல் உங்கள் வாழ்க்கை இயங்குமானால் உங்கள் வாழ்க்கை இருண்ட வீடு தான்.
ஆம் பணமும், பதவியும் வேண்டும் தான் ஆனால் அதை விட குரு நம் உயிரை போன்று முக்கியமானவர்.
உங்களிடம் எல்லாம் வந்தாலும் மீண்டும் மீண்டும் ஓடிக்கொண்டே இருப்பீர்கள், கடைசி வரை. பணமும் புகழும் கிடைக்க கிடைக்க அது தரும் போதையின் பாதையில் நீங்கள் சென்று கொண்டே இருப்பீர்கள்.
திடிரென ஒரு நாள் தோன்றும், நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம், ஏன் நாம் இந்த ஓட்டம் ஓடினோம், ஏன் இவ்வளவு பணம் சம்பாதித்தோம், ஏன் பதவியை தக்க வைக்க வாழ்க்கையை வீணடித்தோம் என தோன்றும், ஆனால் அப்படி உங்களுக்கு தோன்றும் போது உங்களின் வயது 70 ஆகி இருக்கும்.
வாழ்க்கையை திருத்தி கொள்ளும் வாய்ப்பே இல்லாமல் நொந்து வெந்து ஏமாற்றம் அடைந்து இறுதியில் அந்த வலியுடனும்,வாழ்க்கையை அனுபவித்து உருப்படியாக வாழ வில்லையே என்ற ஏக்கத்துடன் நீங்கள் மரணிப்பீர்கள்.
இளைஞர்களே இதை எழுதும் நானும் ஒரு இளைஞன் தான். வாழ்க்கையை ஏன் வாழவேண்டும் என தெரிந்து கொண்டு வாழுங்கள்.











