தனத்திரயோதசி (வரும் சனி மஹா பிரதோஷம் அன்று ).
ஐப்பசிமாதத்தில் தேய்பிறை திரயோதசி தனத்திரயோதசி என்றழைக்கப்படுகிறது. திருமகளின் அருளை சேர்க்கும் நாள்.
அன்றைய தினம் தீபாவளிக்கு வேண்டிய பொருட்களையும், துணிகளையும், தங்க நகைகளையும் வாங்கி தீபாவளி அன்று மாலை லட்சுமிகுபேர பூஜை செய்தால் வீட்டில் செல்வம் பெருகும். இன்றைய தினம் அக்ஷய திருதியைக்கு சமமானது.
தனத்திரயோதசி அன்ற வாங்கும் பொருட்கள் பன்பமடங்க பெருகும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. தங்கம் முதல் சாதாரண இரும்பு பொருட்கள் வரை நமது வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதும், முதலீடுகள் செய்வதும் சிறப்பு.











