27. “கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உந்தன்னைப்
பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே
பாடகமே என்றனைய பலகலனும் யாம் அணிவோம்
ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்”
மார்கழி விரத்தத்தில் மிக முக்கியமான நாள் வைகுண்ட ஏகாதசி ! விரத முடிவு நாள் ! குடும்ப விளக்குகலாகிய பெண்கள் 26 நாளளவும் விரதம் இருந்து அதிகாலை நீராடி கோவிலில் சென்று சேவித்து விரதத்தை நிறைவு செய்யும் மரபு ஆண்டாள் மூலமாக தோற்றுவிக்கப்பட்டது.
சூடிக் கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் முப்பது பாடல்கள் கொண்ட திருப்பாவையை அருளிச் செய்தவள். அதில் 27ஆவது பாசுரமான ‘கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா’ எனும் பாசுரத்தைப் பாடியதும் கண்ணன் ஆண்டாளுக்குத் திருமணவரம் தந்ததாக ஐதீகம்.
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தன் !! கலியுக முடிவில் கல்கி வந்து அக்கிரமக்காரர்கள் அனைவரையும் அழித்து சத்திய யுகத்தை நிறுவுவார் !..
கடவுளின் உள்ளார்ந்த அன்பை அனுபவித்தவர்கள் அறிவார்கள் அவர் யாரையும் அழிக்கவே போவதில்லை என்று !
இறைத்தூதர் இயேசுவும் இதைக்குறிப்பிட்டுள்ளார் : மத்தேயு 18:14 ஒருவனாகிலும் கெட்டுப்போவது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவின் (கடவுளின்) சித்தமல்ல. அவர் ஏற்ற காலத்தில் அசுரர்களை இணக்கப்படுத்தி அடக்கி நல்வழிப்படுத்துவார்
ஏனெனில் தேவர்களும் அசுரர்களும் நாராயணனிளிருந்து தோன்றியவர்களே !! அசுரர்களும் அவர்களின் ஆதிக்கத்தில் உள்ள தீயவர்களும் இடறல்கள் கொடுப்பதாலேயே நல்லவர்கள் மேலும் தூய்மை பொறுமை அடைகிறார்கள்.
நல்லவர்கள் பக்தர்களுக்குள் இருக்கும் கூடா இயல்புகள் வெளியரங்கமாக்கப்பட்டு அவை கடரப்படுவதால் ஞானமாக பரிணமிக்கிறது ஆன்மீக வாழ்வின் ஆரம்ப நாட்களில் இடறல்கள் – அசுர ஆதிக்கங்கள் அதிகமாக உலட்டினாலும் காலப்போக்கில் அவை வெல்லப்பட்டு சமாதானம் ஒவ்வொரு பக்தனுக்கும் உண்டாகும்.
அந்த நிலை பக்தியினாலும் தாழ்மையினாலும் ஞானத்தினாலும் மட்டுமே சாத்தியமாகும் கூடாரை வெல்லும் சீர் கோவிந்தன் அதை அருளுவார் !!
கூடாரவல்லியன்று திருமால் ஆலயங்களுக்குச் சென்று பெருமாளையும், ஆண்டாளையும் தரிசிப்போருக்கு வாழ்வில் நல வளங்கள் சேரும்.










