நடராஜா திருமேனியை வீட்டில் வைத்து வணங்க கூடாது என்று சொல்கிறார்களே ஏன் ??
இப்படி சொல்பவர்கள் யாருமே அந்த பேரானந்த ரூபத்தை அனுபவித்தவர்கள் இல்லை !!
அல்லது அது திருகோயிலில் மட்டுமே அனுபவிக்க கூடியது என்ற மன நிலையில் உள்ளவர்கள் தான் !!
அப்படியே ஏன் வைக்க கூடாது என்று கேட்டால் அதற்க்கு பதில் யாரையோ எதையோ குறிக்குமே தவிர !!
தக்கான அனுபவத்தை ஒருபோதும் சொல்லாது ??
ஏனென்றால் அப்படி அனுபவிக்கும் எந்தவொரு ஆன்மாவும் இப்படி சொல்ல கூட நா வராது !!
பொதுவாக நடராஜா திருமேனி என்பது
இயக்கத்திற்கான ரூபமே ..
இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் அதனுள்ளும் அதை கடந்துமானா ஏதோவொரு இயக்கத்தை அனுபவித்து கொண்டு இருப்பதாலேயே அதன் இருப்பை இந்த பிரபஞ்சத்தில் அனுபவித்து கொண்டு இருக்கிறது ..
நம்முள்ளே நாமாக நாம் இருக்கு நம்முள்ளே, நாம் அறியாது இயக்கியாளும் பேராற்றல் சிவம் ..
நம் அறியக்கூடிய இயக்கமான நம் உடலின் செயல்பாடுகள் ..
நாம் நமது என்று நம்மையே ஏமாற்றி கொள்ளும் சிந்தனை, யோசனை, கருத்தால் போன்ற அத்தனையும் எதன் இயக்கத்தால் ..
நம் வாழும் சூழல், பூமி, உடன் இருக்கும் சகஉயிரினங்கள், அதை எதன் இயக்கத்தின் வழியே வெளிப்படுகிறது ..
நம்மிடம் வருவதும் / போவதும் எதன் இயக்கத்தின் வழியே நடைபெறுகிறது ..
எப்போதும் நம்மை இன்ப / துன்ப அற்ற ஆனந்த நிலையில் இருத்த என்ன நிகழ்ந்துகொண்டு இருக்கிறது ..
கேட்டு ?? யோசித்து ?? யூகித்து ?? போன்ற என் செயல் என்று நாமே விரும்பி கெடுத்துகொண்டே இருப்பதை கடந்தும் தானே இருந்து இயங்கி அருளும் கருணையை உணர ..
நீங்கள் இதுக்கு இது ராஜா ?? அதுக்கு அது ராஜா ?? அதாவது அக்னிக்கு ஒரு ராஜா ? வாய்வுக்கு ஓர் ராஜா ?? காப்பதற்க்கு ராஜா ?? அழிப்பதற்க்கு ஒரு ராஜா ?? படைப்பதற்கு ஒரு ராஜா ?? போன்ற எதையெல்லாம் ராஜாவாக காட்டும் எதற்க்கும் ராஜாவான,
ராஜாதிராஜன் ஆனா நடராஜன் தன் இயக்கத்தில் இருந்து பிறந்து வளர்ந்து இருந்து அனுபவித்து கொண்டு இருக்கும் நீயும் அவனால் ராஜாவே ..
என்ற மெய்யை உணர ..
ஓர் உருவநிலையாய் அவனை அனுபவிக்க வெளிப்பட்டதே இந்த நடராஜா ரூபம் ..
அந்த ரூபத்தின் அருவ ( உறவற்ற ) அருளிலை என்று அதனில் இருந்து அந்த திருநடனத்தின் வழியே வெளிபாடத்தே எங்கும் இருக்கு ..
இதற்க்கு மேல் அதை உங்கள் விட்டில் சிலைகாகவோ ?? படமாகவோ ?? வைப்பதும், வைக்காததும் உங்கள் விருப்பமே ..
ஆனால்
அந்த விருப்பமும் அந்த விருப்பத்தை உங்களுள் இருந்து வெளிபடவைப்பதும்,
அவன் இயக்கத்தின் வழியே தான் ..
எங்கும் திருநடனம் !! எல்லாம் திருநடனத்தால் !!
திருச்சிற்றம்பலம்
நடராஜா நடராஜா











