யோகம் மற்றும் ஞான யோகம் என பல வகையான பாதைகளை எடுத்துரைக்கிறது.
இன்று இந்த உலகம் பல்வேறு வகையான மோதல்களாலும், துயரங்களாலும் சிதைக்கப்பட்டிருக்கிறது.
பணமும் செல்வாக்கும் மனிதனின் நடத்தையை தீர்மானிக்கின்றன. மேலும் பேராசை, கோபம் மற்றும் சுயநலம் ஆகியவற்றால் இந்த சமுதாயம் சீரழிந்துவிட்டது.
நல்லொழுக்கம் அழிந்துவிட்டதால் மனித சமுதாயத்திற்கு சிக்கலான பிரச்சினைகள் உருவாகிவிட்டன.
இன்று மனிதனின் வாழ்வில் குழப்பம், பதட்டம், மகிழ்ச்சியில்லாத நிலை என முடிவில்லா தொடர் பிரச்சனைகள் பல உருவாகிவிட்டன.
மக்கள் அவற்றிற்கு தீர்வு காண இயலாமல் அல்லல் படுகின்றனர்.
பகவத்கீதையின் ஆழ்ந்த அறிவானது இப்பிரச்சனைகளுக்குத் தீர்வாக அமைந்து, சமநிலை பெறுவதற்கும், மன உறுதியும் அமைதியும் அடைவதற்கும், துயரம், பயம் மற்றும் கவலையிலிருந்து முழுமையான விடுதலை பெறுவதற்கும் உதவுகிறது.
பிரம்ம வித்யா என்று அழைக்கப்படும் ஆன்மீகக் கல்வி அல்லது ஞானத்தின் மூலமே ஒருவர் மேலான பேரின்ப நிலையை அடைய இயலும்.











