ராகு கேது தோஷத்தை சரி செய்ய பரிகாரம்
இந்த பரிகாரத்தை நீங்கள் உங்கள் வீட்டில் அருகில் இருக்கும் நவகிரகங்களுக்கு செய்ய வேண்டும். அதற்கு முதலில் இரண்டு ரவிக்கை துணிகளை வாங்க வேண்டும். ஒன்று வான நிறத்தில் உள்ள நீல நிற துண்டு. அடுத்தது பல வண்ணங்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு துண்டு. இத்துடன் கருப்பு உளுந்து, கொள்ளும் வாங்கி கொள்ளுங்கள்.
இதை நவகிரக ஆலயத்திற்கு கொண்டு சென்று அர்ச்சகர் இடம் கொடுத்து இந்த கொள்ளு கருப்பு உளுந்து ரவிக்கை துணிகளை வைத்து உங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்ய சொல்லுங்கள். இப்படி செய்யும் போது உங்களுக்கு இந்த தோஷத்தின் தாக்கமானது பெருமளவு குறைய வாய்ப்புகள் ஏற்படும். இந்த அர்ச்சனை முடிந்த பிறகு நவகிரகத்தை ஒன்பது முறை முடிந்தால் 108 முறை சுற்றலாம்.
இதை செய்ய முடியாதவர்களுக்கும் இன்னொரு எளிமையான பரிகார முறை உள்ளது. அதற்கு அரச மரத்தடி கோவில்களில் இரண்டு நாக சிலைகள் வைத்திருப்பார்கள். இவற்றிற்கு யார் வேண்டுமானாலும் அபிஷேகம் செய்யலாம். அங்கு சென்று முதலில் பால் ஊற்றி அபிஷேகம் செய்யுங்கள். அதன் பிறகு மஞ்சளை நன்றாக குழைத்து இந்த நாகங்களின் வால் பகுதியில் தலை பகுதிக்கு பொட்டு வைத்துக் கொண்டு வர வேண்டும்.
இந்த பொட்டு வைக்கும் போது உங்கள் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தியாக வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இந்த ஒரு பரிகாரத்தையும், வேண்டுதலையும் நம்பிக்கையுன் மனதார வழிபடும் போது அதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும். இதில் நம்பிக்கை உள்ளவர்கள் ராகு கேது பெயர்ச்சியின் பாதகத்தை சரி செய்து கொள்ள எளிமையான இந்த பரிகாரத்தை செய்து கொள்ளலாம்.
#rahuketudosha #Siddharbhoomi #AstrologyTips #VedicAstrology #KarmicHealing #DoshaRemedies #HinduAstrology #SpiritualGuidance #AstrologicalSolutions #DivineHealing #PlanetaryInfluence #VastuShastra #YogaandMeditation #HolisticWellness #PositiveEnergy #MentalClarity #ChakraBalancing #MindfulnessPractice #SelfRealization #InnerPeace #AncientWisdom











