உங்கள் துன்பத்திற்கு யார் காரணம்?
நீங்கள்தான் உங்கள் துன்பத்திற்கு காரணம் என்று, பாசாங்கு இல்லாமல் நீங்கள் ஏற்றுக்கொண்டாலும்…. உங்கள் மனம் அதை மிகவும் மோசமாக உணரும். மேலும் அதை ஒப்புக்கொள்ள மறுத்து வாதங்கள் செய்யும்!!
உங்கள் துன்பத்திற்கு வேறொருவரைக் காரணம் ஆக்குவதைத்தான், உங்களின் மனம் பெரும்பாலும் நல்லதாகக் கருதும்!! அதைத்தான் அது எப்பொழுதும் எளிதாகவும், சுகமான ஒன்றாகவும் உணரும்!!
மனதின் வற்புறுத்தலினால், உங்கள் துன்பங்களுக்கு வேறொருவர்தான் காரணம் என்று நீங்கள் அடுத்தவர்களை நோக்கிக் கை காட்டினால்….. நீங்கள் ஒருபோதும் “விடுதலை பெற” முடியாது, என்பதை நினைவில் கொள்ளுங்கள்!! பிறகு விடுதலை என்பது ஒருபோதும் இல்லை!!
அதுவே…. நீங்கள்தான் உங்களுக்கு ஏற்படும் துன்பங்களுக்கு காரணம் என்பதை தயங்காமல் ஏற்றால்…. விடுதலை உங்கள் கைகளில் உள்ளது!! விடுதலையை ஏற்பதா? அல்லது தள்ளிவிடுவதா? என்பதை நீங்களாகத்தான் முடிவு செய்யமுடியும்!!
~~ஓஷோ.











