கயிலை சென்றதால் நீங்கள் கையிலை மணியும் அல்ல. சித்தரை வழிபடுவதால் நீங்கள் சித்தனும் அல்ல.
காளி வேஷம் போடுவதால் நீங்கள் காளியும் இல்லை. கருவரைக்கு செல்வதால் நீங்கள் புனிதனும் இல்லை.
வேதங்கள் ஓதுவதாலும் புத்தகங்களை ஆராய்வதாலும் நீங்கள் ஞானியும் அல்ல. சுடுகாட்டில் இருப்பதால் நீங்கள் அகோாியும் இல்லை.
ருத்ராட்சங்கள் அணிவதால் நீங்கள் அடியாரும் இல்லை. காவி உடுத்தியதால் நீங்கள் கடவுளும் இல்லை.
சடை முடி வளா்ந்ததால் நீங்கள் முனிவரும் இல்லை. நீங்கள் மனிதன் அதை முதலில் உணா்ந்து கொள்ளுங்கள்.
உங்களிடம் உள்ள கோபம், தாபம், தலைக்கனம், பொறாமை, பணத்தாசை, பொருளாசை, காம ஆசை, தலைமை ஆசை இவை அனைத்திலும் ஒன்று உங்களிடம் இருந்தாலும் மேற்கூறிய எதற்கும் நீங்கள் தகுதியற்றவனாகிவிடுகிறீர்கள்.
இவை அனைத்தும் உங்களிடம் இல்லாமல் இருப்பாயாகில் மேற்கூறிய அனைத்தின் மொத்த உருவமே நீங்களாகதான் பாா்க்கபடுவீர்.
ஆகவே வேஷங்களில் கடவுளை காணாதீர். உங்களுள் இருக்கும் கடவுள் பண்பை தட்டி எழுப்புங்கள். அதை நா்த்தனம் ஆடவையுங்கள். பின் அம்பலத்தை கண்டு அசைவில்லாமல் இறையோடு ஒன்றினைந்து கொள்ளுங்கள்.











