சாதரணமான மனிதனின் அதிகபட்ச ஆசை தனக்கென்று சொந்தமாக ஒரு வீடு வாங்கி
அதில் குடியும் குடித்ததனமுமாக இருக்க வேண்டும் என்பதே.
தன் வாழ்நாள் முழுவதும் சம்பாதித்த காசில் ,கடைசி காலத்தில் தன்னுடைய
வாழ்க்கை புது வீட்டில் கழிய வேண்டுமென பலர் மெனக்கிடுகின்றனர்.
ஆனால் எல்லோருக்கும் சொந்த வீடு அமைவதில்லை.
4ம் வீடும்,4ம்பதியும், செவ்வாய் கெடாமல் இருக்கும் ஜாதகருக்கு பெரும்பாலும் சொந்த
வீடு இருக்கும்.அது பாவ கிரகமாக இருந்தாலும்.
லக்னாதிபதி கெட்டு 4ம் வீடு கெட்டாலும் அதன் அதிபதி நீசமானாலும் சொந்த வீடு
அமைய பெறாது.
4ம் வீடு ,செவ்வாய்,கெட்டவர் பணக்காரராக இருந்தாலும் அவர் பெயரில் வீடு வாங்க
கூடாது.வாங்கினால் நிலைக்காது.
4ம் வீட்டில் செவ் +சனி இருந்தால் அந்த வீட்டில் பிரச்சனை வில்லங்கம் உண்டு.
4ம் வீட்டில் சனி+ராகு இருந்தால் வீடு பழுந்தடைந்து இருக்கும். சுத்தமிருக்காது.
4ம் வீட்டின் அதிபதி, அவர் நின்ற நட்சத்திர நாதன் திசை ,காலத்தில் மேற்சொன்ன
அமைப்புகள் நன்றாக இருந்தால் நிச்சயம் சொந்த வீடு அமையும்.











