அன்பர்களின் கேள்விகளும் அருள்தந்தையின் பதில்களும்
❓ கேள்வி: சுவாமிஜி! உடலைவிட்ட மனித உயிர்கள் மற்ற ஐந்தறிவு விலங்கினங்களிடம் இணைய முடியுமா?
✅ பதில்: ஒவ்வொரு உயிரினத்துக்கும் துல்லியமான பண்புகள் உண்டு. அந்தந்த உயிரினம் (Species) ஒரு தனிப்பட்ட இயக்கம் (Specific Action) ஆகும். அவை தோன்றி வந்த பரிணாம வளர்ச்சியில் ஒவ்வொன்றும் தனித்தன்மையை அடைந்துள்ளன.
பரிணாம உயர்வில், மேம்பட்ட ஓர் உயிரினம் (Higher Species) தாழ்ந்த நிலைக்குப் (Lower Species) போகவே முடியாது. அதனால் உடலைவிட்ட மனித உயிர்கள் ஐந்தறிவு உள்ள உயிரினங்களுடன் இணைவது சாத்தியமில்லை. பரிணாம வளர்ச்சியில் ஒத்த நிலையிலுள்ள இரண்டு தனித்தன்மை வாய்ந்த உயிர்கள் கூட ஒன்றாக இணைய முடியாது.
இரண்டு கருவும் ஒன்று சேர்ந்தாலும், ஒன்றுக்கொன்று ஏற்றுக்கொள்ளும் ஒத்த தன்மை இருந்தால்தான் அவ்விரு உயிரினங்களும் இணைந்து ஒரு புதிய இனமாக மாற்றம் பெற முடியும்.
மரம், செடி, கொடிகளில் சிறிது பேதம் இருந்தாலும் ஒத்துக் கொள்ளும். ஆனால் உயர் சீவன்கள் என்று வரும்போது பரிணாமத் தொடர் இரண்டிற்கும் ஒத்து இருக்க வேண்டும், ஸ்பீஸிஸ் (Species) என்ற வார்த்தைக்கு தனிப்பட்ட தன்மையுடையது (Specific Action) என்று பொருள்.
வாழ்க வளமுடன்!










