• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

தாய்மாமன்

siddharbhoomi by siddharbhoomi
June 9, 2025
in பொது
0
தாய்மாமன்

தாய்மாமன்

0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

தாய்மாமன்

உறவுகளில் அற்புத உறவு “தாய்மாமன்” உறவு…!!

என்றுமே அழிக்க முடியாத உறவு…!!

தாய் மாமன் சொந்தம்…

ஒரு தொட்டிலில் உருவாகும் இந்த பந்தம், அந்த குழந்தையின் காலம் வரை நீடிக்க வேண்டும் என்பதே குடும்பத்தினரின் விருப்பமாகும்.

குழந்தைக்கு முதல் முடி குலதெய்வம் சன்னதியில் இரக்கவேண்டும்.

மடியில உக்கார வெக்க குழந்தையோட மாமா வந்தாச்சா…!! என்று கூப்பிடுவது தொடங்கி… மாலை போடணும், தாய்மாமன் எங்கே?? என்பது வரை கேட்பது தாய்மாமனைத்தான்…

உறவுகளில் அனைவருக்கும் பிடித்தமான உறவு என்றால்… உடனே சொல்வார்கள் தாய்மாமன் உறவு என்று தான்.

பள்ளிகளில் விடுமுறை விட்டால் எந்த ஊருக்கு செல்வாய்… என்று படிக்கும் பசங்களிடம் ஒரு காலத்தில் (தற்போது

அல்ல) எங்க மாமா வீட்டுக்கு போனேன் என்று தான்

சொல்வார்கள்.

புதிதாக விளையாட்டுப் பொருள் வைத்திருந்தால்… யாருடா வாங்கிக் கொடுத்தா…!! என்று நண்பனிடம் கேட்டால்… எங்க மாமா என்பான். அந்த அளவிற்கு அனைவருக்கும் பிடித்தமான

உறவு என்றால் அது தாய்மாமா தான்.

“எவன் ஒருவன் அக்கா, தங்கையுடன் பிறக்கின்றானோ… அவனே வாழ்வாங்கு வாழ்வான்” என்பது சொலவடை.

உறவுகளில் ஆகச் சிறந்தது தாய்மாமன் உறவு.

அம்மா, அப்பா, அண்ணன், தங்கை, தம்பி இவற்றை விட சிறந்தது தாய்மாமன் உறவு. தந்தையின் உறவு என்பது வேறு

வகையானது. ஆனால், தாய்மாமன் உறவு என்பது எந்த வித முன் தொடுப்பும் இல்லாது வருவது.

தங்கைக்கு தகப்பனாய், அவள் பெறும் குழந்தைகளுக்கு உற்ற பாதுகாவலனாய், நண்பனாக அந்த குழந்தை கேட்டதை

எல்லாம் வாங்கிக் கொடுத்து அதன் முகத்தில் அதிக

மகிழ்ச்சியை பார்ப்பது தாய்மாமன் தான்.

இன்றும் மாமா வருகிறார் என்றால்… குழந்தையின் சந்தோஷத்தை சொல்லி மாளாது. தன் அக்கா, தங்கையின் குழந்தைகளை தன் குழந்தைகளைப் போல

கவனிப்பான். அக் குழந்தைகளின் ஒவ்வொரு நல்லதுக்கும்

தாய்மாமனே முக்கியம் என்று தமிழர் பண்பாடு சொல்கிறது.

காது குத்துவதிலிருந்து, திருமணத்திற்கு மாலை எடுத்துக் கொடுப்பது வரையிலும் இன்னும் அனைத்து நல்லதற்கும், கெட்டதற்கும் தாய்மாமனே முன்னிற்பான்.

தங்கையின் அல்லது அக்காவின் கணவருக்கு அதிக உதவிகள் செய்வது, எங்கள் மாமா என்று உரிமையோடு அவருக்கு துணையாக செல்வது என்று சொல்லிக் கொண்டே

போகலாம்.

தன் குடும்பத்தைக் கவனிப்பதை விட அக்கா, தங்கையின் தேவைகளை அறிந்து அதை நிறைவேற்றுபவன்.

அண்ணன் தனக்காக

தன்னை வருத்திக் கொள்கிறானே என்று அண்ணன் நன்றாக

வாழ வேண்டும் என்று ஒரு நொடி அத்தங்கை நினைத்தாள் என்றால் அண்ணன் மாடி மீது மாடி கட்டி வாழ்வான்.

எவனொருவன் கூடப் பிறந்தவர்களை அழ விடுகின்றானோ அவன் எந்தக் காலத்தும் சிறந்து வாழ முடியவே முடியாது.

சில ஊர்ப்பக்கம் தங்கையின் மகளோ அல்லது அக்காவின்

மகளோ இயற்கை குறையோடு இருந்தால் தாய்மாமனுக்குத் தான்

கட்டி வைப்பார்கள். தாய்மாமனுக்கு வயதாகி விட்டால் அவனின் மகனுக்கு திருமணம் செய்து வைப்பார்கள். தாய்மாமன் உறவென்பது தியாகத்தின் உருவம். இந்த தியாகத்தை

தந்தையோ, தனயனோ செய்ய முடியுமா? அப் பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்து வாழ வைப்பவன் கடவுளுக்கும் நிகரனாவன்

அல்லவா?

உறவுகளில் மிகச் சிறந்த உறவு “தாய்மாமன்” என்று அடித்துச் சொல்லலாம்.

ஆனால், இன்று குழந்தைகளின் பெற்றோர் தனது வேலை

காரணமாக வெளியூர்களில் இருப்பதால்… குழந்தைகளும் அவர்களுடனே இருக்கும். அதனால் இப்போதெல்லாம் தாய்மாமன் உறவு முறை சிறிது சிறிதாக குறைந்து வருகிறது.

குழந்தையும் தாய்மாமனை மாதம் ஒரு முறை என்று பார்த்து

மாமாவின் முகம் மறைகிறது என்பதுதான் இன்றைய நிதர்சன

உண்மை…

நமக்கும் தாய்மாமன்கள் நிச்சயம் இருப்பர். ஆனால், நாம் நமது வேலைப்பளுவாலும், கால ஓட்டத்தாலும் நாம் நம் தாய்மாமனை நிச்சயம் மறந்திருக்க மாட்டோம். அது போல் நம்

குழுந்தைகளுக்கும் மாமாவின் அருமை பெருமைகளை சொல்லி வளர்க்க வேண்டும்.

Previous Post

உன்னையே நீ உணர்ந்து கொள்

Next Post

நவாவரண பூஜை

Next Post
நவாவரண பூஜை

நவாவரண பூஜை

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

உங்களுக்கும் இந்த நிலை வரும் என்பதை மறக்க வேண்டாம்.*

உங்களுக்கும் இந்த நிலை வரும் என்பதை மறக்க வேண்டாம்.*

December 4, 2025
கார்த்திகை மாத ராசி பலன் 2025

கார்த்திகை மாத ராசி பலன் 2025

December 3, 2025

சித்தர் வழி, சித்தர் வழி, சித்தர் வழி பாடல் – வெளியீடு சித்தர் பூமி 4K: உடனே கேளுங்கள்!

December 2, 2025
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »