“எப்படியாவது முன்னேற வேண்டும்” என்று நீ நினைக்கும் அந்த நொடியில் கூட
பிரபஞ்சம் உன்னை அமைதியாக கவனித்து கொண்டிருக்கிறது…
அது உன் ஆசையை மட்டும் பார்க்காது,
அதற்காக நீ தேர்வு செய்கிற பாதையையும் பார்க்கும்.
பிரபஞ்சத்தின் சட்டம் ஒரு விதமானது ..
அது அவசரத்தை ஏற்காது,
ஆனால் , உண்மையான முயற்சியை எப்போதும் ஏற்றுக்கொள்கிறது.
நீ தவறான வழியில் வேகமாக ஓடினாலும்,
அது சில நேரம் உன்னை முன்னேற்றம் போல காட்டும்…
ஆனால் , அது நிலைத்திருக்காது.
ஆனால், நீ சரியான வழியில் மெதுவாக நடந்தாலும்,
பிரபஞ்சம் அதை கவனித்து
உன் பாதையை தானாக விரிவாக்கும்.
முன்னேற்றம் என்பது “எப்படி வேண்டுமானாலும்” கிடைக்காது…
“எப்படி சரியாக செய்கிறாய்” என்பதில்தான் அது உருவாகிறது.
கர்மா உன்னிடம் ஒரு கேள்வி கேட்கும்..
“நீ வெற்றியை விரும்புகிறாயா…
அல்லது அந்த வெற்றிக்கு தகுதியான மனிதராக மாற தயாரா?”
அந்த இரண்டுக்கும் வித்தியாசம் பெரியது.
பிரபஞ்சம் ஒரு கதவை திறக்கும் முன்,
நீ அந்த கதவுக்கு தகுதியானவரா என்று சோதிக்கும்.
வழியை குறைக்க நினைக்காதே…
உன்னை உயர்த்த நினை..
ஏனெனில்,
நீ உயர்ந்துவிட்டால்…
வெற்றி உன்னை தேடி வரும்..










