நம் உடலை அறிவோம் ஆரோக்கியம் பெறுவோம் – தொடர் 1
சித்தர் பூமியின் ஆன்மீக அனபர்களே வணக்கம்!
நம் உடலை அறிவோம் ஆரோக்கியம் பெறுவோம் என்ற தலைப்பில் தொடர்ந்து நம் உடல் இயக்கங்கள் பற்றி உங்களோடு பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். எனவே அன்பர்கள் அனைவரும் படித்து ஆரோக்கியமாக, ஆனந்தமாக வாழ அன்போடு வேண்டுகிறோம்.
அன்பர்கள் மட்டுமல்லாது அன்பரின் நன்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இந்தத் தகவலை பகிர்ந்து பயன்பெறச் செய்யுங்கள்.
ஆரோக்கியமான மனிதனின் ஆயுட்காலம் எவ்வளவு தெரியுமா? 120 ஆண்டுகள். இன்று நம்மில் எத்தனை பேர் அதை நிறைவு செய்து வாழ்கிறோம். ஒருவரையாவது உதாரணத்துக்கு காட்ட முடியுமா?
மருத்துவர்களே இல்லாத நம் முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் அனேக மக்கள் 100 வயது முதல் 120 வயது வரை ஆரோக்கியமாக வாழ்ந்து மறைந்துள்ளார்கள்.
ஆனால். இன்றைய காலகட்டத்தில் தெருவிற்கு மூன்று நான்கு மருத்துவர்கள் இருந்தும் ஏன் மனிதனால் 60, 70 வயதைக்கூட தாண்ட முடிவதில்லை ஏன்???
ஏனென்றால் நம் உடல் பற்றிய முழுமையான அறிவு நமக்கும் இல்லை, நமக்கு வைத்தியம் பார்க்கும் மருத்துவருக்கும் இல்லை என்பதுதான் உண்மை,
அன்பர்களே ஒன்றை நன்றாக புரிந்து கொள்ளுங்கள் நாம் உண்ணும் உணவுதான் மருந்து. நம் உடல்தான் நம் மருத்துவர். நம்முடைய உடலில் என்ன பிரச்சனை ஏற்பட்டாலும் இந்த உடல் தன்னைத்தானே சரிசெய்து கொள்ளும் இதுதான் உண்மை.
இறைவன் நம்மை அவ்வாறே படைத்துள்ளான். மனிதனை மட்டுமல்ல இந்த உலகத்திலுள்ள அனைத்து உயிர்களையும் அவ்வாறே படைத்துள்ளான்.
காட்டில் வாழும் மிருகங்களுக்கு இறைவன் கொடுத்த அதன் முழு ஆயுளையும், மிருகங்கள் முழுமையாக வாழ்ந்து நிறைவு செய்கிறது. அதற்கு காய்ச்சல் வருவதில்லை வந்தாலும் மருத்துவரிடம் செல்வதில்லை ஏனெனில் அங்கு மருத்துவரும் இல்லை.
ஆனால், மனிதன்தான் விக்கல் வந்தாலும், தும்மல் வந்தாலும் உடனே அருகிலுள்ள மருத்துவரை அணுகி அவர் கொடுக்கும் கண்ட கண்ட மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு வரும் தும்மலை நிறுத்தி விடுகிறோம்.
தும்மல் ஏன் வருகிறது என்று அறிவதில்லை. வெளியே வரும் சளியை வெளியே போக விடாமல் உள்ளேயே நிறுத்தி விடுகிறோம். நாம் சாப்பிடும் மருந்தானது நம் உடல் தன்னைத் தானே சரி செய்து கொள்ளும் இயக்க சக்திளை இயங்க விடாமல் செயலிலக்கச் செய்துவிடுகிறது.
இதனால், நம் உடலிலிருந்து வெளியேற வேண்டிய கழிவு உடலிலேயே தற்காலிகமாக தங்கிவிடுகிறது. நமக்கும்; மருந்து மாத்திரை சாப்பிடுவதன் மூலம் தற்காலியமாக நிவாரணம் பெறுகிறோம் அவ்வளவுதான தவிர உடல் கழிவு வெளியேறவில்லை. உடல் கழிவு வெளியேற நாம் என்ன செய்ய வேண்டும் அடுத்த தொடரில் பார்க்கலாம்…
நடக்கட்டும் நம்புகிறோம் ஏன்பது மனிதர்களின் வாக்கு.
நம்பினால் நடக்கும் என்பது சித்தர்களின் வாக்கு–அகத்தியர்–
“சித்தர் பூமி” தினசரி ஆன்மீக செய்திகள் Play Store ல் Download செய்து படியுங்கள்..!
https://play.google.com/store/apps/details?id=com.siddharbhoomi.siddhar
உங்கள் நண்பர்களுக்கு Forward செய்யுங்கள். சித்தர் அருள் கிடைக்கும்..!











