நம் சித்தர்கள் சுவாசத்திற்கும் அணுக்களுக்குமான தொடர்புகளை கண்டுள்ளனர்.
பஞ்சாட்சரம் + தத்துவம் +
ஒரு சுவாசத்தில் இதன் அளவும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது
ந = பூமி = 20
ம = அப்பு –நீர் = 15
சி = தேயு – நெருப்பு = 9
வா = வாயு = 5
ய = ஆகாசம் = 2
மொத்தம் 51
இந்த ஐம்பத்தி ஒன்றில் அணுக்கள் அடக்கப்பட்டது. ஐந்து சதுரத்தில் இந்த சக்திகளான ஐம்பத்தி ஒரு அட்சரத்தின் தத்துவங்களை சித்தர்கள் அடக்கிவிட்டார்கள். இதைத்தான் திருவம்பலச்சக்கரம் என்கிறார்கள்.
மகாசக்திகளை பஞ்சபூதங்களையும் அவற்றின் அணு சக்திகளையும் 51 அட்சரத்துக்குள் பஞ்சாட்சரத்தில் அடக்கி அவைகளை எண்களில் குறிப்பிட்டு உள்ளார்கள். இந்த திருவம்பல சக்கரத்தின் சக்தி அபரிமிதமானது.
அணுக்களின் தன்மைகளை பற்றி மிகவும் நன்றாக உணர்ந்து அனுபவித்தவர் கருவூர்ச் சித்தர். அதனால் தான் அவர் சிவனை நடராஜர் சிலையாக அதாவது அணுவின் அம்சமாக உருவாக்கினார்.











