ஸ்ரீ சபாபதி ஸ்வாமிகள், வில்லிவாக்கம்.
சென்னை, வில்லிவாக்கம், அமைந்துள்ள ஸ்ரீ சபாபதி லிங்கேஸ்வரர் ஜீவசமாதி ஆலயம் சுமார் 200-300ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்ரீசபாபதி ஸ்வாமிகள் இந்த இடத்தில் ஜீவ சமாதி அடைந்துள்ளார். அவரின் சமாதியின் மேல் அமைந்துள்ள லிங்கேஸ்வரரை முனிவர்கள் பிரதிஷ்டை செய்துள்ளனர்.
சபாபதி ஸ்வாமிகள் சீடராக ஸ்ரீலஸ்ரீ இராமலிங்க ஸ்வாமிகள் இருந்துள்ளார். அவரின் ஜீவசமாதி மதுராந்தகம் அருகில் உள்ள முருகம்பாக்கம் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. இராமலிங்க ஸ்வாமிகளின் பிரதான சீடர் ஸ்ரீலஸ்ரீ அனந்தஆனந்தா ஸ்வாமிகள்.
இவர் ஒரு ராணுவ அதிகாரியாக இருந்தவர். ஒரு காலகட்டத்தில் இறைவனின் திருவூருள்ளபடி ஸ்ரீஇராமலிங்க ஸ்வாமிகள் சீடரானார். கேரளாவில் உள்ள சிவகிரி என்னும் பகுதியை சேர்ந்தவர்.
ஆனந்தசாமி மாந்திரீகத்திலும் தேர்ச்சி பெற்றிருந்தார்கள். அதனை தொடர்ந்து வில்லிவாக்கத்தில் உள்ள சபாபதி ஸ்வாமிகள் ஜீவ சமாதியையும், முருகம்பாக்கத்தில் உள்ள இராமலிங்க ஸ்வாமிகள் ஜீவசமாதியையும் நிர்வகித்துக்கொண்டு அங்கு வரும் பக்தர்களின் குறைகளை தீர்த்து வைக்கும் இறைபணியில் ஸ்ரீ அனந்த ஆனந்த ஸ்வாமிகள் இருந்தார்.
1983ஆம் ஆண்டு ஸ்ரீஅனந்த ஆனந்த ஸ்வாமிகள் ஜீவசமாதி அடைந்தார். ஸ்ரீ சபாபதி லிங்கேஸ்வரர் ஸ்வாமிகளின் ஜீவசமாதியின் பின்புறம் அமைந்துள்ளது.










