ஒரு சொல், சிறு சொல், குரு சொல்;
குரு மகான்கள் தங்கள் உணர்வாளர்களை, மக்களின் மனதில் மகிழ்ச்சியை, தன்னம்பிக்கை மை ஊட்ட சிறு சொற்கள் மூலம் வாழ்த்துக்கள் தெரிவிப்பார்கள்.
தங்கள் இயக்கத்தின் முக்கிய வார்த்தைகளாக மக்கள் மனதில் ஊடுற வைப்பர்.
நான் யார் என்பதை அறிய அரும்பாடுபட்டு, பல்வேறு இடங்களுக்கு சென்று, முனிவர்கள், ஞானிகளைச் சந்தித்து கண்டறிந்தார் ஒருவர்.
அந்நாளில் குண்டலினி உபதேசம் செய்ய வெகு சிலரே இருந்தனர். இறுதியில் அவ்வுபதேசம் பெற்ற பின்னர் அவர் பெற்ற பேரின்பத்தை, ஞானத்தை அனைவருக்கும் வழங்க எண்ணினார்.
பலரது எதிர்ப்புகளையும் மீறி , குண்டலினி உபதேசத்தை , ஞானத்தை வாரி வழங்கினார்.எனவே அவர் ஞானவள்ளல் பரஞ்சோதி மகான் என அழைக்கப்பட்டார்.
” சந்தோஷம்”
” உன்னை நம்பு”
” நடந்ததெல்லாம் நன்மைக்கே” என்பன அவரது சக்தி வாய்ந்த வார்த்தைகள்.
அவரது அன்பிற்கு உரிய சீடர்களில் முக்கியமானவர்கள், அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி, உலக அமைதி தூதுவர், தவ ஞானி மகாமகரிஷி பரஞ்சோதியார் .
” வாழ்க வையகம், வாழ்க வளமுடன்” எனும் மிக அற்புதமான சக்தி மிக்க வார்த்தைகளை அருட்தந்தை அவர்கள் அறிமுகம் செய்தார். உலகம் முழுவதும் அவை பரவி அன்பையும், சமாதானத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
உலக சமாதான ஆலயம் அமைந்தவர் ஞான வள்ளல். மகாமகரிஷி பரஞ்சோதியார் அவரது வழியில் அமைதியை, சந்தோஷத்தை பரப்பி வருகிறார்.
உலக சமுதாய சேவா சங்கம் மூலம் அருட் தந்தை ஆற்றிய பணிகள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
வாழ்க வளமுடன். சந்தோஷம்.











