கங்காதர நாவலர் ஸ்வாமிகள்
சுவாமிகள் சென்னை தேனாம்பேட்டையில் 1859ஆம் வருடம் அவதரித்தார்.
இள வயதிலேயே ஆன்மிக ஈடுபாடு கொண்டவர், தனது தீவிர தவ சாதனையால் இரவா பேறு பெற்றார். அவர் மாபெரும் அருட்கவியாக திகழ்ந்தார். சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் அவர் பாடிய பின்பே ஆலய தேர் நகர்வதுண்டு. அவர்கள் அக்காலத்தில் ஜெய விநாயகர் ஆலயம் நிர்மாணித்து, விநாயகர் பெயரில் பல கவிதைகள் புனைந்தார்.
இந்தியா முழுவதும் மற்றும் தென் ஆப்பிரிக்காவிலும் ஆன்மிக சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். பக்தர்கள் மற்றும் சீடர்கள் கலங்கரை விளக்கமாக திகழ்ந்தார். அந்நாளில் ஆங்கில அரசிடம் தான் ஜீவ சமாதியில் அமர்வதற்கு முறைப்படி அனுமதியும் பெற்றார். பின்பு 1930 ஆம் ஆண்டு , அக்டோபர் 29 ஆம் நாள் ஐப்பசி பௌர்ணமி அன்று ஜீவ சமாதி ஆழ்ந்தார்கள்.
6வது அவென்யு,ஹாரிங்டன் சாலை, சேத்துப்பட்டு.











