கடவுளைப் பகவான் என்று சொல்வதன் காரணம் என்னவென்றால், பகம் என்றால் ஆறு குணங்கள். மிக மேன்மையான ஆறு குணங்களை உடையவனே இறைவன். எனவே தான் கடவுளைப் பகவான் என்கிறேம்.
அவை__
1. எல்லையற்ற ஞானம்
2.எல்லையற்ற பலம்
3. எல்லையற்ற ஐஸ்வர்யம்
4. எல்லையற்ற ஆற்றல்
5. எல்லையற்ற ஆதார சக்தி.
6. எல்லையற்ற தேஜஸ்
___என்ற இந்த ஆறு குணக்கூட்டங்களுக்கு பகம் என்று பெயர். இக்குணங்களை உடையவனே #பகவான்.
#கேசவன்
கேசவன் என்றால் கிருஷ்ணர் என்றோ அல்லது விஷ்ணு என்றோ பொருள் கொள்வது சரியல்ல. #கேசவ என்பதில் “க” என்ற்ல் பிரம்மா “அ” என்றால் திருமால், “ஈச” என்றால் சிவபெருமானயும் குறிக்கிறது. “வ” என்பது தன்வசத்தில் வைத்துக் கொண்டிருப்பதைக் குறிக்கும். எனவே மும்மூர்த்திகளையும் உள்ளடக்கிய மேலான பரம்பொருளையே #கேசவ என்ற சொல் குறிக்கிறது.
#கோவிந்தன்
பகவான் கண்ணனாக அவதரித்தபோது இந்திரனின் கர்வத்தையடக்க வேண்டி, மக்கள் வழக்கமாகச் செய்யும் இந்திரவிழாவைத் தடுத்து நிறுத்தி ஆயர்குல மக்களின் வாழ்விற்கு ஆதாரம்ன பசுக்களுக்கு உணவவான புற்களை வழங்கும் கோவர்த்தனகிரிக்குப் பொங்கலிட்டு வழிபடச் செய்தார். இதனால் கோபம் கொண்ட இந்திரன் ஆயர்பாடியையே அழிக்கக் கனமழைப் பொழியச் செய்தான்.
எனவே ஆயர்களையும், பசுக்களையும் காக்க மாதவன், கோவர்த்தன மலையையே தூக்கி மக்களை அதன் கீழ் வைத்து காத்தார். இறுதியில் தோற்றுப் போன இந்திரன், பகவானிடம் மன்னிப்புக் கேட்டு, “சகல உயிர்களையும் காப்பவர்” என்ற பொருளில் அவருக்குக் #கோவிந்தன் என்ற பெயரைச் சூட்டி, அபிஷேகமும் செய்து வைத்தான்.
#கோ என்றால் பசு என்பது மட்டுமல்ல, அனைத்து உயிர்களும் என்ற பொருளும் உண்டு. “விந்த” என்றால்”ஒன்றை தேடி விரும்பிப் போய் அடைவது” எனப் பொருள்படும். அனைத்து உயிர்களும் தேடிப் போய் அடையும் குறிக்கோளுடைய #பரமாத்மா அவர், என்பதையே கோவிந்தன் என்ற பெயர் உணர்த்துகிறது.
ஆண்டாளும் மூன்று இடங்களில் #கோவிந்தன் என்ற பெயரை உபயோகித்திருக்கிறாள். “கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா” என 27 வது பாடடிலும், “குறையொன்றுமில்லாத கோவிந்தா” என 28 வது பாட்டிலும், “இற்றை பறை கொள்வான் என்று காண் கோவிந்தா” என 29 வது பாசுரத்திலும் கூறி, கோவிந்தன் என்ற பெயரின் மகிமையை பூமாதேவியின் அவதாரமான ஆண்டாள் தெளிவுபடுத்தியிருக்கிறாள்.











